தமிழக அரசு எல்லா சூழ்நிலைகளிலும் விவசாயிகளுக்கு நேசக்கரம் நீட்டும் -முதலமைச்சர்

தமிழக அரசு எல்லா சூழ்நிலைகளிலும் விவசாயிகளுக்கு நேசக்கரம் நீட்டுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சார்பில் 20 கோடியே 86 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 60 புதிய திட்ட பணிகளை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
15 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில், 14 முடிவுற்ற திட்டப்பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். மொத்தம் 15 ஆயிரத்து 16 பயனாளிகளுக்கு 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது விவசாயிகளுக்காக அரசு முன்னெடுத்து வரும் நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.
சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், விவசாயிகளோடும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
தமிழக அரசு எல்லா சூழ்நிலைகளிலும் விவசாயிகளுக்கு நேசக்கரம் நீட்டும் -முதலமைச்சர் #TamilNadu | #TNGovt | #Farmers | #CMEdappadiKPalaniswami https://t.co/jhUQ2fZG1P
— Polimer News (@polimernews) August 10, 2020
Comments