ஆகஸ்ட் ஊரடங்கு - பேருந்துகள் ஓடாது

தமிழகத்தில் பொதுப்போக்குவரத்திற்கான தடை ஆகஸ்ட் மாதத்திலும் தொடரும் என்றும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மின்சார மற்றும் மெட்ரோ ரயில்கள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை, பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களை திறக்கவும் அனுமதி இல்லை.
தமிழகம் முழுவதும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை தொடர்கிறது. நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாதலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடைதொடரும். தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடரும். ஷாப்பிங் மால் எனப்படும் வணிக வளாகங்களுக்கு தடை தொடர்கிறது.
பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாது. எனினும், இணையவழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம்.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
ஆகஸ்ட் மாதத்திலும் மெட்ரோ ரயில், மின்சார ரயில் இயங்காது.
திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல்குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், பார்கள் எனப்படும் மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை தொடர்கிறது.
அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சாரநிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை தொடர்கிறது.
மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது.
Comments