செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காரைக்கால் செட்டிநாடு ஓட்டலில் கெட்டுப்போன சிக்கன், ஊசிப்போன சோறு பறிமுதல்..! உளுந்தூர்பேட்டையில் அதிகாரிகள் அதிரடி

Sep 22, 2023 08:27:17 AM

 உளுந்தூர் பேட்டை டோல் கேட் பகுதி ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட  உணவு பாதுகாப்பு அதிகாரிகள், காரைக்கால் செட்டி நாடு ஓட்டலில் இருந்து கெட்டுப்போன சிக்கன் , ஊசிப்போன சோறு உள்ளிட்ட உணவு வகைகளை கைப்பற்றி அழித்தனர்.

தென்மாவட்டங்களில் இருந்து கார்களில் சென்னைக்கு வரும் பெரும்பாலானவர்களின் மதிய உணவுக்கு தேர்வாக இருக்கும், உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதி பிரமாண்ட ஓட்டல்களில் தான் கள்ளக்குறிச்சி உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

வரிசையாக ஒவ்வொரு ஓட்டலாக அதிகாரிகள் ஆய்வுக்கு சென்ற நிலையில் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான காரைக்கால் செட்டி நாடு உணவகத்திலும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு 3 வது முறையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் குளிர்பதனப்பெட்டிக்குள் இருந்து 50 கிலோவுக்கும் மேற்பட்ட அழுகிய கோழி இறைச்சியை அதிகாரிகள் கைப்பற்றினர்

மசாலா தடவி வேக வைக்கப்பட்ட சிக்கன் கெட்டுப் போயிருப்பதை கண்டு அதனையும் கைப்பற்றி குப்பையில் கொட்டினர்

தந்தூரி சிக்கன், பூஞ்சையுடன் காணப்பட்ட சப்பாத்தி மாவு உருண்டைகளையும் கைப்பற்றினர்
டப்பாக்களில் இருந்த ஊசிப்போன சோறு, முந்தின நாள் தயார் செய்யப்பட்ட சப்பாத்தி ரொட்டிகள், மற்றும் புரோட்டாக்களையும் கைப்பற்றிய அதிகாரிகள் அதன் மீது பினாயிலை ஊற்றி அழித்தனர்

ஏற்கனவே வேறு எங்கோ தயாரான பொருட்களை சூடு செய்து கொடுப்பதை காரைக்கால் செட்டி நாடு உணவகத்தினர் செய்து வருவது விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அதே போல அருகில் இருந்த ஸ்ரீ கலா மெஸ் என்ற ஓட்டலில் ஆய்வு செய்த அதிகாரிகள் அங்கிருந்து கிலோ கணக்கில் கெட்டுபோன சிக்கனை பறிமுதல் செய்தனர்

அங்கு அதிக நிறம் சேர்க்கப்பட்ட கெட்டுபோன சிக்கன் உணவுவகைகளை கைப்பற்றி அழித்தனர்

மானாமதுரை ஸ்ரீ கண்ணன் செட்டினாடு ஓட்டலில் இருந்து , கலர் அதிகம் சேர்க்கப்பட்ட சிக்கனையும், கெட்டுபோன சிக்கனையும் கைப்பற்றி அழித்தனர்

கிருஷ்ணகிரியில் மார்க் ஆண்டனி படம் திரையிடப்பட்டுள்ள, பழைய திரையரங்கு ஒன்றில் இருந்து ஊசி போன பப்ஸ், சிலந்தியுடன் சிப்ஸ் பாக்கெட்டுகளை கைப்பற்றிய அதிகாரிகள் அவற்றை அழித்தனர்.


Advertisement
ஒரே நாளில் 12 பேரை கடித்து குதறிய தெரு நாய்கள்.. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி
முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
கடலூர் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தராத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்
திண்டுக்கலில் பிரிந்து வாழும் மனைவி மற்றொரு ஆணுடன் டூவீலரில் பயணித்த போது காரை விட்டு மோதிய கணவர் கைது
திருவண்ணாமலை அருகே அரசு அனுமதியில்லாத மதுபாரில் ஏற்பட்ட தகராறில் ஜேசிபி ஆபரேட்டர் பீர் பாட்டிலால் குத்தி கொலை
பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்
திருவாரூர் புஸ்வானம் வெடித்ததில் காயமடைந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 4-ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு வானிலை மையம்

Advertisement
Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்

Posted Dec 01, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்


Advertisement