செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

சென்னை - திருநெல்வேலி இடையே தொடங்கப்பட இருக்கும் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது

Sep 21, 2023 09:23:37 PM

சென்னை - திருநெல்வேலி இடையே தொடங்கப்பட இருக்கும் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.

சென்னை எழும்பூரில் இன்று காலை 7.35-க்குப் புறப்பட்ட ரயில், விழுப்புரம், திருச்சி வழியே பிற்பகல் 3.13 மணிக்கு திருநெல்வேலி வந்து சேர்ந்தது.

திட்டமிட்டதைவிட பத்து நிமிடங்கள் முன்னதாகவே ஏழு மணி 40 நிமிடங்களில் திருநெல்வேலி வந்து சேர்ந்த ரயிலை, ரயில்வே பயணிகள் சங்கத்தினர் உற்சாகமாக வரவேற்றனர்.

பொதுமக்கள் அந்த ரயிலில் ஏறி அதன் சிறப்பு அம்சங்களைப் பார்த்து ரசித்து, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படும் தமிழ்நாட்டின் இரண்டாவது வந்தே பாரத் ரயிலான இதை, வருகிற 24-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் துவக்கி வைக்கிறார்.

8 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 608 பேர் பயணம் செய்ய முடியும். திருநெல்வேலியில் காலை 6 மணிக்குப் புறப்பட்டு சென்னைக்கு பிற்பகல் 1.50-க்கும், மதியம் 2.50-க்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 10.40-க்கு திருநெல்வேலியை சென்றடையும்.

விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

சேர் கார் பெட்டியில் பயணிக்க 1300 ரூபாயும், எக்ஸிகியூட்டிவ் சேர் கார் பெட்டியில் பயணிக்க 2300 ரூபாய் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நாள் முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement
மோடி ஆட்சியில் 10 ஆண்டுகளில் இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்தது - அமித்ஷா
புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6000 நிவாரணம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
நாட்டின் ஜிடிபி வளர்ச்சி அரசின் பல்வேறு சீர்திருத்தங்களின் பிரதிபலிப்பு: பிரதமர்
ஒரு சொட்டு நீர் கூட தேங்காது என்று கூறியது பொய் என்பது நிரூபணம் ஆகிவிட்டது - இ.பி.எஸ்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டுவருவதில் தமிழக அரசின் வேகம் போதவில்லை - அன்புமணி
9 மாதம் முதல் 15 வயதினர் வரை ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியம்
16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாகுவின் வீட்டில் இருந்து ரூ 220 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்
தெலுங்கானாவில் இன்று முதல் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு பேருந்தில் இலவசமாக பயணிக்க உத்தரவு
அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

Advertisement
Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,Big Stories,

வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...

Posted Dec 09, 2023 in சென்னை,Big Stories,

மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!

Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீரில் கலந்த கச்சா ஆயில்.. கை, கால் உடலெல்லாம் அரிப்பு.. வீட்டை கறையாக்கிய கொடுமை..! ஜோதி நகர் மக்கள் குமுறல்


Advertisement