செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் மறைக்கப்பட்ட சிறுவன்.. கொலையின் திகில் பின்னணி..!

Sep 21, 2023 08:14:25 AM

திருக்கோயிலூர் அருகே வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த போது மாயமான 2 வயது சிறுவன், ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக சிறுவனின் சித்தப்பாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

2 வயது மகனை பறிகொடுத்து விட்டு பதறும் பெற்றோர்....ஒருபுறம், சிறுவனுக்கு என்ன நடந்தது? என்பதை அறிய திரண்டு நிற்கும் ஊரார் மறுபுறம்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூர் அடுத்த திருப்பால பந்தல் கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி - ஜெகதீஸ்வரி தம்பதியினரின் 2 வயது மகன் திருமூர்த்தி, கடந்த 17 ந்தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது மாயமானான்.

சம்பவம் தொடர்பாக திருப்பாலபந்தல் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர். இந்த நிலையில் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் குருமூர்த்தி ஒவ்வொரு இடமாக தேடத்தொடங்கினார். அப்போது குருமூர்த்தியின் தம்பி ராஜேஷ் அறைக்குள் இருந்து துர் நாற்றம் வருவதை அறிந்து உள்ளே தேட முயன்றபோது , பூனை ஏதாவது இறந்திருக்கும் என்று ராஜேஷ் தெரிவித்ததால் தேடுவதை நிறுத்திக் கொண்டார். ராஜேஷ் வெளியில் சென்ற பின்னர் அவரது அறையில் இருந்த பழைய ஸ்பீக்கர் பாக்ஸை உடைத்து பார்த்த குருமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார்.

அந்த ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் தனது செல்ல மகன் திருமூர்த்தி அழுகிய நிலையில் சடலமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டு கதறினார். தங்கள் வீட்டு செல்லப்பிள்ளையை சடலமாக கண்ட மொத்த குடும்பத்தினரும் கதறி கண்ணீர் விட்டு அழுதனர்

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசாரிடம் எம்புள்ளைய இந்த பாக்ஸில தான் அடைச்சி வச்சிருக்கான்.. என்று குருமூர்த்தி கதறி அழுதார். போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மதுக்கடை பார் ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்த ராஜேஷைப் பிடித்து விசாரித்த போது சொத்துப் பிரச்சனை தொடர்பாக தனது அண்ணனும் , அண்ணியும் தொடர்ந்து தன்னிடம் சண்டையிட்டு வந்ததால், அவர்களது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் வைத்து அடைத்ததாக தெரிவித்தான். சமயம் பார்த்து சடலத்தை வெளியே தூக்கிச்செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் அதற்குள்ளாக துர்நாற்றம் வீசியதால் தான் சிக்கிக் கொண்டதாகவும் ராஜேஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Advertisement
வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...
அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!
சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!
என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...
சேட்டனின் சேட்டைகளை கண்டித்த காதலி கொலை வாட்ஸ் அப்பில் திகில் ஸ்டேட்டஸ் நர்ஸிங் மாணவிக்கு நிகழ்ந்த சோகம்
இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்
முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!
வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு
பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்

Advertisement
Posted Dec 03, 2023 in விளையாட்டு,Big Stories,

வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்

Posted Dec 03, 2023 in அரசியல்,செய்திகள்,Big Stories,

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...

Posted Dec 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!

Posted Dec 02, 2023 in சென்னை,Big Stories,

சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!

Posted Dec 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...


Advertisement