செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

விஷாலை விளாசிய நீதிபதி.. எதிர்காலத்தில் நடிக்க தடை.. கோபத்திற்கு என்ன காரணம்..? எப்போதுமே ஏமாற்றினால் இப்படித்தான்..!

Sep 12, 2023 09:07:53 PM

லைக்கா நிறுவனத்திடம் பெற்ற கடனை விஷால் கொடுக்க மறுத்ததால், மார்க் ஆண்டனி படத்திற்கு  தடை விதிக்கப்பட்ட நிலையில் , சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிய நடிகர் விஷாலை கேள்விகளால் விளாசிய நீதிபதி, பணத்தை செலுத்த வில்லை என்றால் விஷால் தொடர்பான அனைத்து படங்களையும் எதிர் காலத்தில் வெளியிட தடை விதிக்கலாமா? என்றதால் அதிர்ச்சி அடைந்தார்.

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக, சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற கடனான 21 கோடியே 29 லட்சம் ரூபாயை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு, பணம் செலுத்தியது. அந்த தொகையை முழுமையாக திருப்பி செலுத்தும் வரை, விஷால் தனது பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளையும் , லைகா நிறுவனத்துக்கு மட்டுமே வழங்க வேண்டுமென்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் வீரமே வாகை சூடும் என்ற படத்தை நேரடியாக வெளியிட்டதால், விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, லைக்காவுக்கு கொடுக்க வேண்டிய கடனுக்காக 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்தது. அதனை நிறைவேற்றாததால், நீதிமன்றம் நடிகர் விஷாலை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. அதன் படி விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது, கடந்த முறை தன்னிடம் நிதி ஆதாரம் இல்லை எனத் தெரிவித்த விஷால் அதே நாளில் ஒரு கோடி ரூபாயை மார்க் ஆண்டனி படத்தை தயாரித்த மினி ஸ்டூடியோவிடம் இருந்து பெற்றுள்ளதாக கூறிய நீதிபதி இது நீதிமன்றத்துக்கு தவறான தகவலை தெரிவிப்பது என்று விஷால் மீது அதிருப்தி தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி 15 கோடி ரூபாயை செலுத்தாவிட்டால் விஷால் படங்களை வெளியிட தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, தொடர்ந்து படங்களில் நடித்து வரும் விஷால், லைகாவுக்கு கொடுக்க வேண்டிய தொகையை மட்டும் ஏன் கொடுக்கவில்லை என்றும் உத்தரவாதம் அளித்து விட்டு அதை செயல்படுத்தவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்

இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டதால் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்றும், நிதி ஆதாரம் இல்லை எனக் கூறிய நாளில் விஷாலின் வங்கிக் கணக்கில் 91 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால் மினி ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வங்கிக் கணக்கு விவரங்களில் 1 கோடியே 61 லட்ச ரூபாய் விஷால் வங்கிக் கணக்கில் இருந்ததாக கூறப்பட்டுள்ளதே என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், அந்த தொகையில் இருந்து 90 லட்சம் ரூபாய் ஜி.எஸ்.டி. வரியாக செலுத்தப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவு ஏதும் மீறப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

தான் நடிக்கும் படங்களுக்கு 40 கோடி ஊதியம் பெற்றுள்ள விஷால், பணத்தை செலுத்தாவிட்டால் நடிப்பதை நிறுத்த வேண்டும் என லைகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விஷாலின் நான்கு வங்கிக் கணக்குகளின் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான கணக்கு விவரங்களையும், விஷாலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்கள், அவை எப்போது வாங்கப்பட்டன ? சொத்து ஆவணங்களுடன் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஆஷா, நீதிமன்றத்தில் கூறியதற்கு முரணாக வங்கி கணக்கில் விவரம் எதுவும் இருந்தால் எதிர்காலத்தில் படம் எதுவும் நடிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என விஷாலை எச்சரித்தார்.

மேலும் பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் விஷால் தொடர்பான அனைத்து படங்களுக்கும் எதிர்காலத்தில் தடை விதிக்கலாமா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கிடையே மினி ஸ்டூடியோவின் மார்க் ஆண்டனி படத் தயாரிப்பில் விஷாலுக்கு தொடர்பு இல்லை என்பதால் அந்தப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி படத்தை வெளியிட அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Advertisement
கைகோர்ப்போம்... துயர்துடைப்போம்...! வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணி செய்ய மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தல்
இளம்பெண்கள் பிக்பாசிலும், கைபேசியிலும், காதலிலும் நம்பி மூழ்கி ஏமாறக்கூடாது- ராதிகா சரத்குமார்
மாமன்னன் படத்தின் உதவி இயக்குநர் மாரிமுத்து மூச்சுத்திணறலால் 30 வயதில் உயிரிழப்பு..!
வனிதா தாக்கப்பட்டார்! ஓங்கி அறைந்ததால் கன்னம் பழுத்தது..! எக்ஸ் தளத்தில் குமுறல்
கோவாவில் நடைபெறும் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்
நடிகர் மன்சூர் அலிகான் தமக்கு தெரிந்து யார் மனதையும் காயப்படுத்த வேண்டும் என்று பேசியிருக்க மாட்டார் - சீமான்
திரைப்படத்துறையினர் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா டிச 23 ,24 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிக்கு ரஜினி, கமல், அஜித், விஜயக்கு அழைப்பு
பருத்தி வீரன் படத்தில் இயக்குநர் அமீர் முதல் படம் என்பதால் கோடி கணக்கில் ஏமாற்றி விட்டதாக ஞானவேல் ராஜா குற்றச்சாட்டு
மன்னிப்புல்லாம் கேட்க முடியாது எரிமலையாக குமுறப்போவதாக நடிகர் சங்கத்திற்கு மன்சூர் மிரட்டல்..! திரிஷாவுக்கு மாப்பிள்ளையாம் இவரு..!
திரிஷாவ அப்படியே தூக்கி.. மன்சூர் அலிகானின் வக்கிர பேச்சு.. நடிகைகள் கடும் கண்டனம்..! நடிகர் சங்கம் தூங்குகிறதா ?

Advertisement
Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,Big Stories,

வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...

Posted Dec 09, 2023 in சென்னை,Big Stories,

மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!

Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீரில் கலந்த கச்சா ஆயில்.. கை, கால் உடலெல்லாம் அரிப்பு.. வீட்டை கறையாக்கிய கொடுமை..! ஜோதி நகர் மக்கள் குமுறல்


Advertisement