செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

செப்டிக் டேங்கிற்குள் மண்டை ஓடு, எலும்புக்கூடு.. காட்டிக் கொடுத்த சிகப்பு கயிறு..! 8 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய மனைவி

Sep 12, 2023 11:19:25 AM

மதுபோதையில் தகராறு செய்த கணவனை கொன்று செப்டிக் டேங்கிற்குள் சடலத்தை மறைத்த நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு கையில் கட்டியிருந்த சிகப்பு கயிறு மூலமாக துப்பு துலக்கி மனைவியை, போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவரான சரவணன், தனது இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டு விட்டு சென்னையில் வசித்து வருகிறார். வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் சுமார் 10 வருடங்களாக சுத்தம் செய்யப்படாததால் அதனை சுத்தம் செய்ய ஆட்களை நியமித்திருந்தார் சரவணன்.

கழிவுகளை ஓஸ் போட்டு முழுமையாக அகற்றி விட்டு, குழிக்குள் சாணம் இடும்
பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குழிக்குள் மண்டை ஓடு, எலும்புக்கூடு உள்ளிட்டவை கிடப்பதை பார்த்து தேவகோட்டை நகர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

செப்டிக் டேங்கிற்குள் கிடந்த மண்டை ஓடு, எலும்புகள் மற்றும் கைலி, சட்டை, கண்ணாடி துண்டு போன்றவற்றை கைப்பற்றிய போலீஸார், கடந்த 10 ஆண்டுகளாக அந்த வீட்டில் யாரெல்லாம் வசித்தார்கள் என்ற கோணத்தில் விசாரணையை துவங்கினர்.

அதில், 8 ஆண்டுகளுக்கு முன்பு விளங்காட்டூரைச் சேர்ந்த பாண்டியன்-சுகந்தி
தம்பதியர் வசித்து வந்ததும், இதில், பாண்டியன் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

எனவே, புகாரளித்த பாண்டியனின் தந்தை சண்முகத்தை அழைத்து வந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்களை போலீஸார் காண்பித்தனர். அங்கிருந்த சிகப்பு கயிறைக் காட்டி, அதனை பாண்டியன் எப்போதும் கையில் கட்டியிருப்பார் என அவர் தெரிவித்தார். இதனையடுத்து, தேவகோட்டையில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்த சுகந்தியிடம் விசாரணை நடத்தினர் போலீஸார்.

ஆம்னி பேருந்து ஓட்டுநரான பாண்டியன், மதுகுடித்துவிட்டு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாக தெரிவித்தார் சுகந்தி. கடந்த 2014-ம் ஆண்டு வழக்கம் போல மதுபோதையில் வந்த பாண்டியன், ஏன் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருக்கிறாய் எனக் கேட்டு தகராறு செய்ததோடு, சுகந்தியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது, பாண்டியனை கீழே தள்ளிவிட்டதில் தலையில் அடிபட்டு அவர் அதே இடத்தில் உயிரிழந்ததாக தெரிவித்தார் சுகந்தி.

வீட்டின் முன்பகுதியிலேயே செப்டிக் டேங்க் இருந்ததால் அதன் மூடியை திறந்து உடலை உள்ளே தள்ளி விட்டு மூடியதாகவும், 6 மாதத்திற்கு பிறகு வேறு வீட்டிற்கு சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பாண்டியன் காணாமல் போனது குறித்து அப்போது அளிக்கப்பட்ட புகாரில், போலீஸார் தன்னிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கணவர் வேறொரு பெண்ணுடன் கோவையில் தங்கி வேலை பார்த்து வருவதாகவும், அவ்வப்போது பணம் மட்டும் அனுப்பி வருவதாகவும் கூறினேன். அதனை உண்மையென நம்பி போலீஸாரும் தொடர்ந்து விசாரணை நடத்தாமல் விட்டு விட்டனர் எனத் தெரிவித்தார் சுகந்தி.

சுமார் 9 ஆண்டுகளாக தேடி வந்த மகன் செப்டிக் டேங்க்கிற்குள் இருந்து எலும்புக்கூடாக மீட்கப்பட்டது பெற்றவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலையை சுகந்தி மட்டுமே தனியாக செய்திருக்க முடியாது என தெரிவித்த உறவினர்கள், போலீஸார் உரிய விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

சுகந்தியை கைது செய்த போலீஸார், இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.

போதையால் மனைவிக்கு தினமும் துன்பம் கொடுத்து வந்தால் என்ன மாதிரியான சம்பவம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணமாக மாறி உள்ளது.

 


Advertisement
செத்த சித்தப்பா பெயரில் அரிவாளோடு வசூல் வேட்டை... கஞ்சா போதையில் அட்டூழியம்... 2 கடைக்காரர்களுக்கு அரிவாள் வெட்டு
வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...
மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!
ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி
இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்
மழை நீரில் கலந்த கச்சா ஆயில்.. கை, கால் உடலெல்லாம் அரிப்பு.. வீட்டை கறையாக்கிய கொடுமை..! ஜோதி நகர் மக்கள் குமுறல்
தல நீ தாலி கட்டு.. பொண்ணு ஓடி போகாம நாங்க பாத்துக்கறோம்..! தாலியுடன் தவித்த மணமகன்
வெள்ளச்சேரியான வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ வை கேள்விகளால் விளாசிய பெண்..! கொடுத்தாரு பாரு ஒரு விளக்கம்..
என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...
சேட்டனின் சேட்டைகளை கண்டித்த காதலி கொலை வாட்ஸ் அப்பில் திகில் ஸ்டேட்டஸ் நர்ஸிங் மாணவிக்கு நிகழ்ந்த சோகம்

Advertisement
Posted Dec 11, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செத்த சித்தப்பா பெயரில் அரிவாளோடு வசூல் வேட்டை... கஞ்சா போதையில் அட்டூழியம்... 2 கடைக்காரர்களுக்கு அரிவாள் வெட்டு

Posted Dec 10, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...

Posted Dec 10, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!

Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்


Advertisement