செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரூ.12க்கு வாங்கி ரூ.60க்கு விற்கிறார்கள்! விவசாயியை நோகடிக்கும் விலை நிர்ணயம்

Sep 06, 2023 11:52:25 AM

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சுமார் ஆறு ஏக்கரில் ஒட்டு தக்காளி மற்றும் ஒட்டு கத்தரிக்காய் சாகுபடி செய்துள்ள விவசாயி ஒருவர், உரிய விலை கிடைக்காததால் மனம் நொந்து, விவசாயத்தை விட்டு கூலி வேலைக்குச் சென்றுவிடலாமா என யோசித்து வருவதாகக் கூறுகிறார். 

பொன்னேரியை அடுத்த தடம்பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன், பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து, அங்குள்ள விவசாய முறைகளை கற்று வந்து தனது நிலத்தில் பயிரிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் இஸ்ரேல் சென்று வந்த அவர், அங்கு பயிரிடுவதுபோல், தக்காளியையும் கத்திரிக்காயையும் புதிய தொழில்நுட்பத்துடன் பயிரிட்டுள்ளார்.

சுமார் 6 ஏக்கரில் பிரம்மாண்டமாக பரந்து விரிந்திருக்கிறது சீனிவாசனின் காய்கறித் தோட்டம். இஸ்ரேல் விவசாய முறைப்படி சுண்டைக்காய் தண்டில் கத்தரிக்காயையும் கத்தரிக்காய் தண்டில் தக்காளியையும் ஒட்டுரகமாக சாகுபடி செய்துள்ளார்.

சாதாரண நாற்றுகள் 6 மாதங்கள் வரை மட்டுமே விளைச்சல் கொடுக்கும் நிலையில், இதுபோன்ற ஒட்டுரகம் 3 முதல் 4 ஆண்டுகள் வரை விளைச்சல் கொடுக்கும் என்கிறார் சீனிவாசன்.

தக்காளியும் கத்தரிக்காயும் நல்ல விளைச்சல் கொடுத்தாலும் உரிய விலை கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கிறார் சீனிவாசன்.

ஒட்டு ரக கத்தரிக்காய் ஒரு நாற்று 8 ரூபாய் என்கிற ரீதியில் வாங்கி வந்து பயிரிட்டு, அதனை பராமரிப்பதற்காக வாரத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகக் கூறும் சீனிவாசன், ஒட்டுமொத்தமாக ஏக்கர் ஒன்றுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் செலவானதாகக் கூறுகிறார்.

ஆனால் கத்தரிக்காய் கிலோ 10 ரூபாய் 12 ரூபாய் என்றே கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறுகிறார். தன்னிடமிருந்து கிலோ 10 ரூபாய்க்கு வாங்கிச் செல்லும் வியாபாரிகள் கிலோ 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர் என்றும் சீனுவாசன் கூறுகிறார்.

ஆசை ஆசையாய் பயிர் சாகுபடி செய்ததாகக் கூறும் சீனிவாசன், உரிய விலை கிடைக்காத விரக்தியில் கூலி வேலைக்கே சென்றுவிடலாம் போல இருப்பதாகக் கூறுகிறார். விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை வந்தால் மட்டுமே இதற்குத் தீர்வு என்றும் அவர் தெரிவித்தார்.


Advertisement
10 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - அப்டேட் கொடுத்த வானிலை மையம்
3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்
டெல்லியில் காற்று மாசுபாட்டின் நிலை மிக மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக வானியல் மையம் எச்சரிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
டெல்லியில் நிலவும் கடுமையான மூடுபனி மற்றும் காற்று மாசுவை கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் நடவடிக்கை
சென்னையில் தினமும் 6,000 மெ.டன் குப்பை உருவாகிறது மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்
13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை மூடியுள்ள மணல் திட்டுகளை அகற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் - கோரிக்கை

Advertisement
Posted Dec 03, 2023 in விளையாட்டு,Big Stories,

வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்

Posted Dec 03, 2023 in அரசியல்,செய்திகள்,Big Stories,

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...

Posted Dec 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!

Posted Dec 02, 2023 in சென்னை,Big Stories,

சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!

Posted Dec 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...


Advertisement