செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பீட்ஸா, பர்கர் ஆசையா..? உஷார் மக்களே.. எலும்பு நிபுணர்களின் எச்சரிக்கை..

Aug 04, 2023 06:45:47 PM

ஆகஸ்ட் 4-ஆம் தேதி தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஜங்க் ஃபுட்ஸ் எனப்படும் பீட்ஸா, பர்கர், நிறமூட்டப்பட்ட குளிர் பானங்களை உட்கொள்வதால் எலும்புகள் மற்றும் மூட்டு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

பொதுவாக 206 எலும்புகளால் ஆனது மனித உடல் என்பார்கள். ஒவ்வொன்றும் உடல் இயக்கத்துக்கு வெகு முக்கியமானது. வயதாக ஆக எலும்புகளிலும் மூட்டு ஜவ்வுகளிலும் தேய்மானம் ஏற்படக் கூடும். ஆனால் துரித உணவுகளும் ஜங்க் ஃபுட்ஸும் உட்கொள்வதால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்குக் கூட எலும்புகளில் பிரச்சினைகள் ஏற்படும் என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை.

வயது ஏற ஏற உடற்பயிற்சியை வாழ்வின் ஒரு அங்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். 40 வயது வரை ஜாகிங் போகலாம். 50 வயது வரை வேகமாக நடக்கலாம். அதற்கு மேல் உள்ளவர்கள் மெதுவாக நடந்து உடற்பயிற்சி மேற்கொள்ளலாம் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

சமச்சீரான உணவை எடுத்துக் கொள்வதும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பேணிக் காக்க சிறந்த வழி என்று குறிப்பிடும் மருத்துவர்கள், அதிக கால்சியம் சத்துள்ள வெந்தயம், நிலக்கடலை, கீரை, பிரண்டை, ஆட்டு கால் சூப் போன்றவற்றை அவ்வப்போது உட்கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைபடுத்தப்பட்டு ஓய்வெடுத்தவர்களுக்கு எலும்புகளில் உள்ள ஆஸ்ட்ரிநோ பிளாஸ்ட் செல்களின் செயல்பாடு குறைந்திருக்கக் கூடும் என்றும், அத்தகையவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் டாக்டர்களின் கருத்து.

எலும்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு மருத்துவர்களை அணுகாமல், நாட்டு வைத்தியம், கை வைத்தியம் எல்லாம் செய்து கொள்ள கூடாது என்பதும் மருத்துவர்களின் எச்சரிக்கை.

 


Advertisement
வாரத்தில் 2 -3 நாட்கள் காலையில் பழைய சாதம் தயிர், வெங்காயம் சேர்த்து சாப்பிடுகிறேன் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது... காய்ச்சலுக்கு சுய மருத்துவம் செய்துகொள்ள வேண்டாம் - சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
முக்கிய உடலுறுப்புகளை தானம் பெறுவதற்காக தமிழகத்தில் 6,811 பேர் பதிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கமளித்து பேசிய நடிகை பிரியா பவானி சங்கர்
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிப்பு - 2 பேர் உயிரிழப்பு; சிகிச்சையில் 2 பேர் - கேரள சுகாதாரத் துறை எச்சரிக்கை
ஆப்பிரிக்க மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதால், குரங்கம்மை நோய் இனி எம்-பாக்ஸ் என்று அழைக்கப்படும் - உலக சுகாதார நிறுவனம்
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசி அறிமுகம்
இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்தார்
இங்கிலாந்து, போர்ச்சுக்கல், அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் குரங்கம்மை பாதிப்பு
மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து இந்தியாவில் அறிமுகம்.. சிகிச்சை காலத்தை 90 சதவீதம் வரை குறைக்கும் PHESGO என்ற மருந்து..!

Advertisement
Posted Dec 11, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செத்த சித்தப்பா பெயரில் அரிவாளோடு வசூல் வேட்டை... கஞ்சா போதையில் அட்டூழியம்... 2 கடைக்காரர்களுக்கு அரிவாள் வெட்டு

Posted Dec 10, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...

Posted Dec 10, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!

Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்


Advertisement