செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான 6 வயது சிறுவன்... நீச்சல் குளத்திற்கு சீல்.!

Jun 10, 2023 01:18:16 PM

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே, நீச்சல் குளத்தில் பெற்றோருடன் குளிக்கச் சென்ற 6 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஆகச்சிறந்த உடற்பயிற்சிகளில் ஒன்றாக திகழும் நீச்சலை கற்றுக்கொள்ளும் ஆசையால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த 6 வயது சிறுவன் சஸ்வின் வைபவ் இவர் தான்.....

சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார், இவரது மனைவி தாரிகா. கோடை விடுமுறையையொட்டி தாரிகா தனது இரு மகன்களுடன் நீலமங்கலத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். தாத்தா-பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளில், மூத்தவரான, 6 வயது சஸ்வின் வைபவ், நீச்சல் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டதால், நீலமங்கலத்தில் உள்ள NLS Sports Academy என்ற தனியார் நீச்சல் பயிற்சி மையத்தில் சேர்த்துவிட சென்றுள்ளனர்

காசு கொடுத்தால் நீச்சல் குளத்தில் நீராடலாம் என்பதால், சிறுவனின் பெற்றோர், குடும்ப சகிதமாக, வியாக்கிழமையன்று காலையில், அங்கு சென்று குளித்துள்ளனர். ஆழம் குறைவான பகுதியில் சிறார்களும், ஆழமுள்ள பகுதியில் பெரியவர்களும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பெரியவர்கள் சிலர் மேலிருந்து குதித்ததால், நீச்சல் குளம் ததும்பி உருவான அலையில், சிறுவன் சஸ்வின் வைபவ், ஆழமான பகுதிக்கு, இழுத்துச் செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பெற்றோர்களோ, நீச்சல் குள ஊழியர்களோ கவனிக்க தவறியதால், தண்ணீரில் மூழ்கிய சிறுவனை உடனடியாக காப்பாற்றவோ, அவர்களுக்கு போதிய அனுபவம் இல்லாததால், முதலுதவி சிகிச்சை அளிக்கவும் முடியவில்லை என்றும் கூறப்படுகின்றது. இதனால், Golden Hour எனப்படும் உயிர்காக்கும் தருணத்தை கடந்துவிட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி சிறுவன் சஸ்வின் வைபவ் பரிதாபமாக உயிரிழந்தான்.

சிறுவனின் உயிரிழப்பைத் தொடர்ந்து, அங்கு ஆய்வு நடத்திய வருவாய்த்துறை அதிகாரிகள் நீச்சல் குளம் அனுமதியின்றி செயல்பட்டதை கண்டுபிடித்தனர். அதன் மின்சாரத்தை துண்டித்ததோடு நீச்சல் குளத்திற்கு சீல் வைத்தனர். அஜாக்கிரதையாக செயல்பட்டது, எவ்வித பாதுகாப்பு உபகரணம் இன்றி உயிரிழப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மணிமங்கலம் போலீசார், NLS Sports Academy என்ற பெயரில் லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்ட நீச்சல் குளத்தின் உரிமையாளர்கள் பிரபு, நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

நீச்சல் குளத்தில் கட்டாயம் இருக்க வேண்டிய, லைஃப் ஜாக்கெட், காற்று நிரப்பப்பட்ட டியூப், சிறார்களின் கைகளில் மாட்டிவிடப்படும், நீளமான பலூன் போன்ற வடிவிலான ஸ்பெஷல் டியூப் உள்ளிட்டவை இல்லை என்றும் நான்கு மாதங்களுக்கு முன்னர் தான் நீச்சல் குளம் செயல்படத் தொடங்கியதாக கூறப்பட்டாலும் நுழைவு கட்டண அறிவிப்புடன் விளம்பரம் வெளியிட்ட போது வருவாய்த்துறை அதிகாரிகள் கவனிக்காதது ஏன் ? என்று கேள்வி எழுகிறது.

அதே நேரத்தில் இது போன்ற நீச்சல் குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் குடும்பத்துடன் குளிப்போர் தங்கள் வீட்டு குழந்தைகள் மீது தனிக்கவனம் செலுத்த தவறினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்.


Advertisement
தனியார் பேருந்து ஓட்டுநர் மீது 20 இளைஞர்கள் கொடூர தாக்குதல்.. ஓட்டுநரை தாக்க காரணம் என்ன..? போலீசார் தீவிர விசாரணை
மிட்டாய் வாங்கித் தருவதாக கூறி 10வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோயில் பூசாரி போக்சோவில் கைது
கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி
சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!
தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!
உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து
தங்கச்சி கொள்ளைக்காரி.. அக்கா பதுக்கல் ராணி.. அசத்தலாக தூக்கிய போலீஸ்..! சிசிடிவி மட்டும் இருந்தா சக்சஸ் தான்
ஒரு கண்டன அறிக்கை போதும் கே.ஜி.எப் வெளியாகி இருக்குமா ? தம்பிகளுக்காக சீமான் ஆவேசம்..! அரசியல் கட்சிகளுக்கு அவமானம்
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற அக்டோபர் 7ஆம் தேதி வரை அவகாசம் : ஆர்.பி.ஐ.
மாம்பழ ஜூஸ் கம்பெனிகளில் இருந்து கொட்டப்பட்ட ரசாயன மாங்கொட்டைகளால் தண்ணீர் மாசடைந்து உள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு

Advertisement
Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

Posted Oct 01, 2023 in சினிமா,Big Stories,

மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து


Advertisement