செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தமிழக பக்தர்கள் சென்ற பேருந்தில் தாவி ஏறிய நெடுஞ்சாலை கொள்ளையர்கள்..! பரபரப்பான சிசிடிவி காட்சி

Jun 10, 2023 10:00:01 AM

கோவையில் இருந்து வட மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு பேருந்தில் சுற்றுலா சென்றுள்ள தமிழக பக்தர்களின் உடமைகளை குஜராத் அருகே ஓடும் பேருந்தில் தாவி ஏறிய கொள்ளையர்கள் திருடிச்செல்லும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

சினிமாக்களில் வருவது போல இரு சக்கர வாகனத்தில் வந்து ஓடும் பேருந்தில் தாவி ஏறி கைவரிசை காட்டும் குஜராத் கொள்ளையர்கள் இவர்கள் தான்..!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் புதூர் மற்றும் சந்திராபுரம் அதன் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் கடந்த 28ம் தேதி 18 நாள் ஆன்மீக பயணமாக வட மாநிலங்களில் உள்ள காசி,சாய்பாபா கோவில் உள்ளிட்ட ஆன்மீக தளங்களுக்கு தனியார் சுற்றுலா பேருந்தில் சென்றுள்ளனர்.

காசி உள்ளிட்ட ஆன்மீக தளங்களுக்கு சென்று விட்டு 7ம் தேதி இரவு ஒரிசாவில் இருந்து குஜராத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். இரவு உணவை முடித்து விட்டு அனைவரும் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது அதிகாலை 4 மணி அளவில் குஜராத்திற்கு வந்து தங்கும் விடுதி அருகே பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த உடமைகளை சரி பார்த்த போது, சிலரது உடமைகள் காணாமல் போனது தெரியவந்தது.

இதனையடுத்து பேருந்தின் பின்பக்கம் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதிகாலை 2 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும் போது பேருந்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கும்பல் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

பேருந்தின் வேகத்துக்கு இணையாக ஒருவன் இருசக்கரவாகனத்தை பின்னால் ஓட்டி வர, மற்றொரு கொள்ளையன் பேருந்தின் பின் பக்கம் தாவி ஏறி மேல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உடைமைகளை தார்பாயை கத்தியால் கிழித்து வெளியே எடுத்து கீழே வீசும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

சில உடமைகளை கீழே எடுத்து வீசிவிட்டு ஓடும் பேருந்தில் இருந்து வாயில் கத்தியை கவ்வியப்படியே கீழே இறங்கிய கொள்ளையன் இரு சக்கர வாகனத்திற்கு மாறும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

இது குறித்து சுற்றுலா சென்றுள்ள சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கூறுகையில், இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் எங்களுடன் வந்திருந்த 10 பேரின் உடைமைகளை கொள்ளையடித்துள்ளனர். குஜராத்தை அடைந்ததும் இந்த சம்பவம் தெரிய வந்தது. துணிகளுக்கு இடையே வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது அதிர்ஷ்டவசமாக பணம் மற்றும் தங்க நகைகள் பேருந்தின் உள் பகுதியில் வைத்ததால் தப்பியது என்றார்.

தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களிலும் , பெரும்பாலான வட மாநிலங்களிலும் சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகளை குறி வைத்து ஓடும் லாரியில் ஏறி தார்பாயை கிழித்து கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் சுற்றுலா சென்ற பேருந்தில் ஏறி, தார்பாயை கிழித்து உடமைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் குஜராத்தில் அரங்கேறி உள்ளது. 10 பேரது உடமைகள் பறிபோன நிலையில் தமிழக பக்தர்கள் தங்கள் சுற்றுலாவை தொடர்ந்து வருவது குறிப்பிடதக்கது.


Advertisement
தனியார் பேருந்து ஓட்டுநர் மீது 20 இளைஞர்கள் கொடூர தாக்குதல்.. ஓட்டுநரை தாக்க காரணம் என்ன..? போலீசார் தீவிர விசாரணை
மிட்டாய் வாங்கித் தருவதாக கூறி 10வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோயில் பூசாரி போக்சோவில் கைது
கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி
சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!
தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!
உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து
தங்கச்சி கொள்ளைக்காரி.. அக்கா பதுக்கல் ராணி.. அசத்தலாக தூக்கிய போலீஸ்..! சிசிடிவி மட்டும் இருந்தா சக்சஸ் தான்
ஒரு கண்டன அறிக்கை போதும் கே.ஜி.எப் வெளியாகி இருக்குமா ? தம்பிகளுக்காக சீமான் ஆவேசம்..! அரசியல் கட்சிகளுக்கு அவமானம்
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற அக்டோபர் 7ஆம் தேதி வரை அவகாசம் : ஆர்.பி.ஐ.
மாம்பழ ஜூஸ் கம்பெனிகளில் இருந்து கொட்டப்பட்ட ரசாயன மாங்கொட்டைகளால் தண்ணீர் மாசடைந்து உள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு

Advertisement
Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

Posted Oct 01, 2023 in சினிமா,வீடியோ,Big Stories,

மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து


Advertisement