செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தண்ணீர் தொட்டிக்குள் குளித்த சிறுமிகளை தீண்டிய நாகப்பாம்பு..! தாய் இறந்த 50 வது நாளில் சோகம்

Jun 09, 2023 05:51:59 PM

மதுரை திருமங்கலம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த பாம்பு கடித்து சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது சகோதரியான மற்றொரு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தாய் உயிரை மாய்த்த நிலையில் அந்த குடும்பத்தை துரத்தும் துயரம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசனின் மனைவி நாகலட்சுமி, 100 நாள் வேலைதிட்ட பொறுப்பாளராக இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தனது 5 மகள்களுக்காக, கோயம்புத்தூர் வேலையை விட்டுவிட்டு, சொந்த ஊரில் தங்கிய நாகலெட்சுமியின் கணவர் கணேசன், விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில், செவ்வாய்கிழமை மாலை, வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்து தண்ணீர் தொட்டியில் அவரது மகள்களான 4 வயது சண்முகப் பிரியாவும், 9 வயது விஜயதர்ஷினியும், இறங்கி நீராடி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அந்த சமயம், தொட்டிக்குள் இருந்த நாகப்பாம்பு சிறுமிகளை கடித்ததாக கூறப்படுகிறது.

மயக்கநிலைக்குச் சென்ற சிறுமிகளை மீட்ட குடும்பத்தினர், விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவரில், 4 வயது சிறுமியான சண்முகப் பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு சிறுமி விஜயதர்ஷினி உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் சோகம் மறைவதற்குள்., ஐம்பது நாட்களில், பாம்பு கடித்து 4 வயது மகள் இறந்திருப்பது, குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோடை விடுமுறையில் உள்ள குழந்தைகள் மீதான பெற்றோரின் கண்காணிப்பு எந்தளவிற்கு முக்கியம் என்பதை, மீண்டும் உணர்த்தியிருக்கிறது, இந்தச் சம்பவம்....


Advertisement
தனியார் பேருந்து ஓட்டுநர் மீது 20 இளைஞர்கள் கொடூர தாக்குதல்.. ஓட்டுநரை தாக்க காரணம் என்ன..? போலீசார் தீவிர விசாரணை
மிட்டாய் வாங்கித் தருவதாக கூறி 10வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோயில் பூசாரி போக்சோவில் கைது
கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி
சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!
தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!
உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து
தங்கச்சி கொள்ளைக்காரி.. அக்கா பதுக்கல் ராணி.. அசத்தலாக தூக்கிய போலீஸ்..! சிசிடிவி மட்டும் இருந்தா சக்சஸ் தான்
ஒரு கண்டன அறிக்கை போதும் கே.ஜி.எப் வெளியாகி இருக்குமா ? தம்பிகளுக்காக சீமான் ஆவேசம்..! அரசியல் கட்சிகளுக்கு அவமானம்
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற அக்டோபர் 7ஆம் தேதி வரை அவகாசம் : ஆர்.பி.ஐ.
மாம்பழ ஜூஸ் கம்பெனிகளில் இருந்து கொட்டப்பட்ட ரசாயன மாங்கொட்டைகளால் தண்ணீர் மாசடைந்து உள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு

Advertisement
Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

Posted Oct 01, 2023 in சினிமா,Big Stories,

மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து


Advertisement