செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அலுமினிய பாத்திரத்திற்குள் வசமாக சிக்கிய குழந்தை..! இரண்டரை வயது குழந்தையின் ஒரு மணி நேர போராட்டம்..!!

Jun 05, 2023 03:34:05 PM

கேரளாவில், அலுமினிய பாத்திரத்திற்குள் சிக்கி வலியில் துடித்து கதறி அழுத இரண்டரை வயது குழந்தையை தீயணைப்புத் துறையினர் பெரும் போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்டனர்.

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது அலுமினிய பாத்திரத்துக்குள் சிக்கிக் கொண்ட இரண்டரை வயது குழந்தை இஷாமயி இது தான்.

இந்தக் குழந்தை கேரளாவின் நெய்யாற்றங்கரை பகுதியைச் சேர்ந்த அபிஜித் - அமிர்தா தம்பதியரின் மகள். வீட்டில் இருந்த அலுமினிய பாத்திரற்குள் இரண்டு கால்களையும் உள்ளே விட்டு குதிகால் போட்டு அமர்ந்து கொண்டாள் இஷாமயி.

இஷா எங்கே இருக்கிறாய் என தாயார் கூப்பிட்டதும் பாத்திரத்திற்குள்ளிருந்து வெளியே வர முயற்சித்த போது குழந்தையின் இடுப்புக்கு கீழே உள்ள பகுதி பாத்திரத்திற்குள் வசமாக சிக்கிக் கொண்டது. இதனால், பாத்திரத்திலிருந்து வெளியே வர முடியாமல் குழந்தை அலறி அழத் தொடங்கியது.

பெற்றோர் ஓடிச் சென்று குழந்தையின் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையை பாத்திரத்தில் இருந்து மீட்பதற்காக எடுத்த முயற்சி பலன் அளிக்காததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர் பெற்றோர்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிறு காயம் கூட ஏற்படாமல் குழந்தையை மீட்பதற்காக, பாத்திரத்தை பெரிய கொரடைக் கொண்டு மெள்ள வெட்டினர்.

குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டே சுமார் 1 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர் தீயணைப்புத் துறையினர்.

வீட்டில் இருக்கும் துருதுரு குழந்தைகளை பெற்றோர் அதிக கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என்பதற்கு இச்சம்பவமும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.


Advertisement
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் ரூ.203 உயர்வு...!
வந்தே பாரத் ரயில்கள் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியில் இருந்து 9.2 லட்சம் கி.மீ. தூரத்தை கடந்திருப்பதாக இஸ்ரோ தகவல்..!
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற அக்டோபர் 7ஆம் தேதி வரை அவகாசம் : ஆர்.பி.ஐ.
தொகுதிகள் மேம்பாடு அடைய உதவும் சங்கல்ப் சப்தா திட்டம் - பிரதமர் தொடங்கி வைத்தார்
திருப்பதி மலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்த 13 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்ட பாம்பை வனப்பகுதியில் விடுவிப்பு
தருமபுரில் சாலையைக் கடக்க முயன்ற 12 அடி நீள மலைப்பாம்பு வனத்துறையினர் மீட்பு
2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள இன்றே கடைசி நாள்... வெளிநாட்டில் இருப்போரைக் கருத்தில் கொண்டு மாற்ற கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு
சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
காவிரி நீர் விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பந்த்

Advertisement
Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

Posted Oct 01, 2023 in சினிமா,Big Stories,

மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து


Advertisement