செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

விபத்தில் சிக்கிய வாகனங்கள் மீது அதிவேகமாக மோதிய ஆம்னி பேருந்து... 3 பேர் உயிரிழப்பு

Jun 05, 2023 11:38:14 AM

பெரம்பலூர் அருகே ஏற்கனவே விபத்துக்குள்ளான வாகனங்களின்மீது ஆம்னி பேருந்து அடுத்தடுத்து மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவு என்ற இடத்தில், விழுப்புரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற டிராக்டர் ஒன்றும் திருவண்ணாமலையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற வேனும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயன்ற போது மோதிக் கொண்டன. இதில் டிராக்டர் சாலை நடுவே தலைக்குப்புற கவிழ்ந்தது. வேன் சாலையின் நடுவே தடுப்புச் சுவரில் மோதி நின்றது.

விபத்தில் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் உள்ளிட்ட மருத்துவ உதவியாளர்கள் ஸ்ட்ரெச்சரில் மீட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஆம்னி பேருந்து, ஏற்கனவே விபத்துக்குள்ளாகி இருந்த வாகனங்கள் மீது அதிவேகமாக மோதியது.

இதில் ஆம்புலன்ஸ் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரைத் தாண்டி, எதிர் திசையில் சாலையோர பள்ளத்திற்குள் விழுந்தது.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் மற்றும் மீட்பு பணியை வேடிக்கை பார்த்த 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். ஆம்னி பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.


Advertisement
கைதியாக இருந்தாலும் அவருக்கான அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதில்லை கைதிக்கு 40 நாள்கள் விடுப்பு - நீதிபதிகள் உத்தரவு
ரூ.12000 கோடியை பயன்படுத்தி தற்சார்பு வாழ்வாதாரத்தை தர முடியாதா? சீமான் கேள்வி
சென்னை கால் டாக்சி ஓட்டுநரின் வங்கி கணக்கில் விழுந்த ரூ.9000 கோடி... 30 நிமிடங்களில் பணத்தை திருப்பி எடுத்த மெர்கெண்டைல் வங்கி
முதுநிலை மருத்துவத்தில் சேர நீட் தகுதி மதிப்பெண்கள் 0 பர்சன்டைலாக குறைக்கப்பட்டிருப்பது கல்வி தரத்தை உயர்த்தாது: அன்புமணி
இந்திய தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சர்வதேச அமைப்பின் அங்கீகாரம்
விநாயகர் சிலை வழிபாட்டில் நடனம் ஆடிய நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. கதறி துடிக்கும் கர்ப்பிணி மனைவி..!
டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனுத் தள்ளுபடி..!
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல் வந்து, பிறந்து ஐந்து நாட்களே ஆன ஆண் குழந்தையை விட்டு சென்ற பெண்
காவல்நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்திய காவலர்கள்
அமேசானில் வறண்டு காணப்படும் நதிகள்.. கடந்த 10 ஆண்டுகளில் 2-வது முறை வறட்சி

Advertisement
Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

25 நிமிட கோடீஸ்வரன்! ரூ. 9000 கோடிக்கு தற்காலிக அதிபதி..!! டாக்ஸி டிரைவருக்கு வந்த சோதனை!

Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

பெற்ற தாயை தவிக்க விட்டு பண்ணை வீட்டில் பதுங்கிய பணக்கார மேஜிக் மேன்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படமாட்டாது..! சாப்பிட்டா சங்கடம் தான்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

நிலத்தடியில் சாயக்கழிவுகளை கலக்கும் மனசாட்சியில்லா பணவெறி ஆலைகள்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

போலீஸ்காரன் திருட்டு பையன்... செல்போனை திருடிவிட்டு பேரம் பேசிய திருடர்குல திலகம்..! கரும்புக் காட்டுக்குள் கவனிப்பு


Advertisement