செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தேகம் மறைந்தாலும் இசையாய் வாழும் எஸ்.பி.பி... இசையுலகின் முடிசூடா மன்னன்..!

Jun 05, 2023 06:40:02 AM

பாடும் நிலா பாலு என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 77வது பிறந்தநாள் இன்று. காலன் கடத்திச் சென்றுவிட்டாலும் இசையாய் என்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உன்னதக் கலைஞனின் வாழ்க்கைப் பயணத்தின் சில தருணங்களை சுருக்கமாக விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...  

1969ஆம் ஆண்டு சாந்தி நிலையம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் எஸ்பிபியின் குரல் ஒலிக்கத் தொடங்கிய முதல் பாடல். 2021ஆம் ஆண்டு ரஜினிகாந்த்தின் அண்ணாத்தே படத்தில் இடம்பெற்ற "அண்ணாத்தே அண்ணாத்தே" என்ற அறிமுகப் பாடல் வரை கிட்டத்தட்ட 3 தலைமுறைகளை தனது ஏகாந்தக் குரலால் ஆட்டிப்படைத்தவர் எஸ்.பி.பி. அவரது குரலில் வந்த பல பாடல்கள் மனதின் அடி ஆழம் வரை ஊடுருவி ஒருவித சலனத்தை ஏற்படுத்தும்...

இசைஞானி இளையராஜாவின் திரை பிரவேசத்துக்குப் பிறகு எஸ்.பி.யின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. இரண்டு ஜாம்பாவான்களும் சேர்ந்து ஆயிரக்கணக்கான அற்புதமான பாடல்களை அள்ளி அள்ளி கொடுத்தனர். 80, 90 களில் இந்த இருவரின் காம்போ இல்லாத படங்கள் குறைவாகவே இருந்தன.

எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் தொடங்கி, ரஜினி,கமல் என நீண்டு, விஜய் - அஜித், தனுஷ்- சிம்பு என அவரது குரலுக்கு வாயசைக்காத நடிகர்கள் குறைவு.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என சுமார் 16 மொழிகளில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாடகர் என்ற அடையாளம் மட்டுமின்றி, நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகங்கள் உண்டு.

ரஜினி படங்கள் என்றாலே அறிமுகப் பாடல் எஸ்.பி.பியாகத்தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. அந்த அளவுக்கு சூப்பர் ஸ்டாருக்கு எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் அனைத்துமே ஹிட்டடித்தன....

பத்மஸ்ரீ, பத்மபூஷன் என 6 முறை தேசிய விருதுகள், பல்வேறு மாநில விருதுகள், ஏராளமான தனியார் அமைப்புகளின் விருதுகள் என வாங்கிக் குவித்த எஸ்.பி.பி என்ற ஆளுமை தனிப்பட்ட மனிதராகவும் திரையுலகைச் சேர்ந்த அத்தனை பேருக்கும் பிடித்தமானவராக இருந்தார்.

இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நம் மனதை கரைத்துக் கொண்டே இருக்கும் எஸ்.பி.பியின் குரல் என்றால் அது மிகையாகாது....


Advertisement
கீழ்பாக்கத்தில் தாறுமாறாக காரை ஓட்டி மோதியதில் ஒருவர் பலி, மூன்று பேர் காயம். 4 வாகனங்கள் சேதம்
H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்
உதகை அரசு கலைக்கல்லூரி விடுதியில் தங்குவதற்காக மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக முதல்வர் மற்றும் பேராசிரியர் பணியிடை நீக்கம்
அக்கா உங்க நகைகள் அழகு... திமுக பெண் கவுன்சிலரின் தலையை நசுக்கிய தோழி..! நம்பிச்சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்..!
செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்ததால் பெண் கருகி பலி..! வேண்டாமே இந்த விபரீதம்
சென்னையில் 11 வயது சிறுமி தற்கொலையை சந்தேகத்துக்கு இடமான மரணம் என போலீஸ் வழக்குப்பதிவு
லியோவுக்கு சிக்கல் மேல் சிக்கல் சொன்ன நாளில் வெளியாகுமா ? பிரச்சனைக்கு இவர் தான் காரணம்..! 6 ஆயிரம் எங்கே 50 ஆயிரம் எங்கே ?
செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ஃப்ளக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவன தொழிற்சாலையில் ஐடி அதிகாரிகள் சோதனை
மனைவியை ரயில் முன் தள்ளி கொல்வதற்காக இழுத்துச் சென்ற கணவன்... உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிள்.
திருப்பதுரில் அரசுப் பேருந்துகளில் கல்லூரி மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்தால் வழக்கு பாயும் என போக்குவரத்து உதவி ஆய்வாளர் எச்சரிக்கை

Advertisement
Posted Sep 28, 2023 in இந்தியா,Big Stories,

ரணகளத்தில் பேட்டியா சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பினர்..! வலுக்கும் காவிரி போராட்டம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அக்கா உங்க நகைகள் அழகு... திமுக பெண் கவுன்சிலரின் தலையை நசுக்கிய தோழி..! நம்பிச்சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்..!

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்ததால் பெண் கருகி பலி..! வேண்டாமே இந்த விபரீதம்

Posted Sep 27, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

லியோவுக்கு சிக்கல் மேல் சிக்கல் சொன்ன நாளில் வெளியாகுமா ? பிரச்சனைக்கு இவர் தான் காரணம்..! 6 ஆயிரம் எங்கே 50 ஆயிரம் எங்கே ?


Advertisement