செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நீதிபதி இருக்கை அருகே எதிரியை வாளால் வெட்டிய ரவுடி.... துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..!

Jun 04, 2023 12:51:26 PM

ராமநாதபுரத்தில் நீதிமன்றத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டவரை நீதிபதியின் இருக்கை அருகே வைத்து வாளால் வெட்டி விட்டு காட்டில் பதுங்கியிருந்தவரை போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர்.

ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் காவலர் முன்னிலையில் கையில் வாளோடு அட்டகாசம் செய்த இவன் தான் ஆர்.எஸ்.மடையை சேர்ந்த ரவுடி கொக்கி குமார்.

பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் கொக்கி குமாருக்கும், சிவஞானபுரத்தை சேர்ந்த மற்றொரு ரவுடி அசோக் குமார் என்பவனுக்கும் இடையே தொழில் போட்டி உள்ளதாக தெரிகிறது.

சில நாட்களுக்கு முன்பு கொக்கி குமாரின் ஆதரவாளர் கடையில் அசோக்குமார் தனது ஆதரவாளர்களுடன் சென்று தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மற்றொரு கொலை முயற்சி வழக்கில் நிபந்தனை ஜாமினுக்காக கையெழுத்து போடுவதற்காக ராமநாதபுரம் 2-ஆம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தான் அசோக் குமார்.

அங்கு மறைந்திருந்த கொக்கி குமார், கையெழுத்து போட அசோக் குமார் குனிந்த உடன், தான் மறைத்து வைத்திருந்த வாளால் அசோக்குமாரின் பின்னந்தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது.

நீதிபதியின் இருக்கை அருகே இந்த துணிகரச் செயலை நிகழ்த்திவிட்டு கொக்கி குமார் தப்பியோடியதாக போலீசார் தெரிவித்தனர்.

அங்கிருந்த காவலர்கள், அசோக்குமாரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

தப்பியோடிய கொக்கிகுமார், பிரப்பன்வலசை அருகே கடற்கரை காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதை அவனது செல்போன் சிக்னல் மூலமாக போலீஸார் கண்டுபிடித்தனர்.

கேணிக்கரை காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் கொக்கி குமாரை சுற்றி வளைத்த போது அவர்களை அவன் தாக்க முயன்றதாக தெரிகிறது. இதனையடுத்து, 2 ரவுண்டு சுட்டதில் முழங்காலுக்கு கீழே குண்டடி பட்டு கொக்கி குமார் சுருண்டு விழுந்தான்.

இந்த என்கவுன்டரில் காயமடைந்த 2 காவலர்கள் மற்றும் கொக்கி குமார் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தெரிவித்துள்ளார்.


Advertisement
25 நிமிட கோடீஸ்வரன்! ரூ. 9000 கோடிக்கு தற்காலிக அதிபதி..!! டாக்ஸி டிரைவருக்கு வந்த சோதனை!
பெற்ற தாயை தவிக்க விட்டு பண்ணை வீட்டில் பதுங்கிய பணக்கார மேஜிக் மேன்..!
இங்கு நல்ல மீன்கள் விற்கப்படமாட்டாது..! சாப்பிட்டா சங்கடம் தான்..!
நிலத்தடியில் சாயக்கழிவுகளை கலக்கும் மனசாட்சியில்லா பணவெறி ஆலைகள்..!
போலீஸ்காரன் திருட்டு பையன்... செல்போனை திருடிவிட்டு பேரம் பேசிய திருடர்குல திலகம்..! கரும்புக் காட்டுக்குள் கவனிப்பு
ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் மறைக்கப்பட்ட சிறுவன்.. கொலையின் திகில் பின்னணி..!
கோவை கோட்டைமேடு ஓட்டல்களில் ஆய்வு செய்வதை அதிகாரிகள் தவிர்த்தது ஏன்..? குண்டு வெடிப்பு நடந்த இடம் என்கிறார்கள்
கையில் மாலை கெடச்சா யாருக்கு வேணா போடுவியா.. மன்னிப்பு கேளு கூல் சுரேஷ்...!
ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா...? கண்ணீரோடு விடை பெற்ற மீரா
விஜய் ஆண்டனி மகளின் விபரீத முடிவுக்கு காரணம் என்ன..? வெளியான முரண்பட்ட தகவல்கள்!

Advertisement
Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

25 நிமிட கோடீஸ்வரன்! ரூ. 9000 கோடிக்கு தற்காலிக அதிபதி..!! டாக்ஸி டிரைவருக்கு வந்த சோதனை!

Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

பெற்ற தாயை தவிக்க விட்டு பண்ணை வீட்டில் பதுங்கிய பணக்கார மேஜிக் மேன்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படமாட்டாது..! சாப்பிட்டா சங்கடம் தான்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

நிலத்தடியில் சாயக்கழிவுகளை கலக்கும் மனசாட்சியில்லா பணவெறி ஆலைகள்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

போலீஸ்காரன் திருட்டு பையன்... செல்போனை திருடிவிட்டு பேரம் பேசிய திருடர்குல திலகம்..! கரும்புக் காட்டுக்குள் கவனிப்பு


Advertisement