செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஆடு மேய்க்க வைத்து அடிக்கிறாங்க... உடல் எல்லாம் ரணம்... மனம் எல்லாம் வலி... சவுதி அரேபியாவிலிருந்து கண்ணீர் குரல்

Jun 03, 2023 03:47:25 PM

கார் ஓட்டுநர் வேலை என்று கூறி சவுதி அரேபியாவிற்கு அழைத்துச் சென்று விட்டு அங்கு கடும் வெயிலில் ஆடு மேய்க்க விடுவதால், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தன்னை மீட்குமாறு உதவிக்குரல் எழுப்பியுள்ளார் கள்ளக்குறிச்சி இளைஞர்.

குடும்ப கஷ்டத்தை போக்குவதற்காக வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற இடத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உதவிக்குரல் எழுப்பி வருகிறார் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏ.மழவராயனூரைச் சேர்ந்த அசோக்.

கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு கார் ஓட்டுனர் வேலைக்காக சென்றுள்ளார் அசோக். ஆனால், அங்கு அசோக்கிற்கு ஓட்டுனர் பணி வழங்காமல் ஆடு மேய்க்க அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

கடும் வெயிலில் ஆடு மேய்க்க விடப்படுவதால் வெயிலின் தாக்கத்தால் உடலில் ஆங்காங்கே கொப்பளங்கள் ஏற்பட்டு அசோக்கின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, வேலை அளிப்பவர்களிடம் தெரிவித்த போது இங்கு அப்படித்தான் இருக்கும் என கூறியதோடு தன்னை கட்டையால் அடித்து துன்புறுத்தி வேலை வாங்குவதாகவும் அசோக் தெரிவித்துள்ளார்.

குடும்ப கஷ்டத்திற்காக கணவர் வெளிநாடு சென்ற நிலையில் கடந்த 2 மாதமாக சம்பளம் கூட அனுப்பவில்லையென கூறும் அவரது மனைவி அர்ச்சனாதேவி, 3 குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வருவதால் கணவரை மீட்க வேண்டுமென கண்ணீர்மல்க கேட்டுக் கொண்டுள்ளார்.


Advertisement
25 நிமிட கோடீஸ்வரன்! ரூ. 9000 கோடிக்கு தற்காலிக அதிபதி..!! டாக்ஸி டிரைவருக்கு வந்த சோதனை!
பெற்ற தாயை தவிக்க விட்டு பண்ணை வீட்டில் பதுங்கிய பணக்கார மேஜிக் மேன்..!
இங்கு நல்ல மீன்கள் விற்கப்படமாட்டாது..! சாப்பிட்டா சங்கடம் தான்..!
நிலத்தடியில் சாயக்கழிவுகளை கலக்கும் மனசாட்சியில்லா பணவெறி ஆலைகள்..!
போலீஸ்காரன் திருட்டு பையன்... செல்போனை திருடிவிட்டு பேரம் பேசிய திருடர்குல திலகம்..! கரும்புக் காட்டுக்குள் கவனிப்பு
ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் மறைக்கப்பட்ட சிறுவன்.. கொலையின் திகில் பின்னணி..!
கோவை கோட்டைமேடு ஓட்டல்களில் ஆய்வு செய்வதை அதிகாரிகள் தவிர்த்தது ஏன்..? குண்டு வெடிப்பு நடந்த இடம் என்கிறார்கள்
கையில் மாலை கெடச்சா யாருக்கு வேணா போடுவியா.. மன்னிப்பு கேளு கூல் சுரேஷ்...!
ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா...? கண்ணீரோடு விடை பெற்ற மீரா
விஜய் ஆண்டனி மகளின் விபரீத முடிவுக்கு காரணம் என்ன..? வெளியான முரண்பட்ட தகவல்கள்!

Advertisement
Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

25 நிமிட கோடீஸ்வரன்! ரூ. 9000 கோடிக்கு தற்காலிக அதிபதி..!! டாக்ஸி டிரைவருக்கு வந்த சோதனை!

Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

பெற்ற தாயை தவிக்க விட்டு பண்ணை வீட்டில் பதுங்கிய பணக்கார மேஜிக் மேன்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படமாட்டாது..! சாப்பிட்டா சங்கடம் தான்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

நிலத்தடியில் சாயக்கழிவுகளை கலக்கும் மனசாட்சியில்லா பணவெறி ஆலைகள்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

போலீஸ்காரன் திருட்டு பையன்... செல்போனை திருடிவிட்டு பேரம் பேசிய திருடர்குல திலகம்..! கரும்புக் காட்டுக்குள் கவனிப்பு


Advertisement