செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்.. விபத்தை ஏற்படுத்தி கொன்ற காதலன் கைது..!

Jun 03, 2023 07:26:24 AM

அரியலூர் அருகே சாலையோரம் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக, காதலனே விபத்தை ஏற்படுத்தி கொன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் பொட்டக்கொல்லைப் பகுதியில், கடந்த 30ஆம் தேதி, சாலையோரத்தில் காது, மூக்கில் இரத்தம் வழிந்த நிலையில், படுகாயங்களோடு கிடந்த இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த உடையார்பாளையம் போலீசார், சாலையோரம் சடலமாக கிடந்தவர், பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்த அபிநயா என்பதும், அவர், அரியலூரில் மளிகை கடை ஒன்றில் பணியாற்றி வந்ததையும் கண்டறிந்தனர்.

அரியலூரில் வேலை செய்தவர் எதற்காக, உடையார்பாளையம் பகுதிக்கு வந்தார்.? யாரோடு வந்தார்.? என, அவர் பணியாற்றிய மளிகைக் கடையில், சக தொழிலாளர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, கடைக்கு அடிக்கடி வந்து சென்ற தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரை 2ஆண்டுகளாக அபிநயா காதலித்து வந்ததும், சம்பவத்தன்று அவரோடு பைக்கில் சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட பார்த்திபன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வருகிற 6ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்ததாக கூறியுள்ளார். இதை எப்படியோ அறிந்து கொண்ட அபிநயா, தன்னை ஏமாற்றிவிட்டு, மற்றொரு பெண்ணை திருமணம் செய்வது நியாயமா.? எனக் கேட்டதோடு, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியதாகவும், பார்த்திபன், போலீசில் தெரிவித்துள்ளார்.

கடந்த 30ஆம் தேதி இரவு, அபிநயாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு, அதிவேகத்தில் சென்றதோடு, உடையார்பாளையம் அருகே, சாலை தடுப்புச் சுவரில் பைக்கை மோதவிட்டு விபத்தை ஏற்படுத்தியதாக பார்த்திபன் கூறியுள்ளார். படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிய அபிநயாவை, சாலையோரம் தூக்கிப்போட்டுவிட்டு, தான் மட்டும், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுச் சென்றதாக, போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில், பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வேண்டும் என்றே விபத்துக்குள்ளாக்கி மரணத்தை ஏற்படுத்தி, காதலியின் உயிர்பறித்த குற்றத்திற்காக பார்த்திபன் கைது செய்த உடையார்பாளையம் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

என்னதான் உருகி, உருகி காதலித்தவராக இருந்தாலும், காதலனோடு பிணக்கு ஏற்பட்டு விட்டால், ஒதுங்கி இருப்பதோடு, இரவு நேரங்களில், சந்திப்புகளை தவிர்த்தால், தேவையற்ற சர்ச்சைகள், துயரச் சம்பவங்களில் இருந்து தப்பிக்கலாம் என்பதே, அண்மைகால சம்பவங்கள், இளம்பெண்களுக்கு தொடர்ந்து உணர்த்தும் எச்சரிக்கைப் பாடமாகும்....

 


Advertisement
தனியார் பேருந்து ஓட்டுநர் மீது 20 இளைஞர்கள் கொடூர தாக்குதல்.. ஓட்டுநரை தாக்க காரணம் என்ன..? போலீசார் தீவிர விசாரணை
மிட்டாய் வாங்கித் தருவதாக கூறி 10வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோயில் பூசாரி போக்சோவில் கைது
கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி
சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!
தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!
உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து
தங்கச்சி கொள்ளைக்காரி.. அக்கா பதுக்கல் ராணி.. அசத்தலாக தூக்கிய போலீஸ்..! சிசிடிவி மட்டும் இருந்தா சக்சஸ் தான்
ஒரு கண்டன அறிக்கை போதும் கே.ஜி.எப் வெளியாகி இருக்குமா ? தம்பிகளுக்காக சீமான் ஆவேசம்..! அரசியல் கட்சிகளுக்கு அவமானம்
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற அக்டோபர் 7ஆம் தேதி வரை அவகாசம் : ஆர்.பி.ஐ.
மாம்பழ ஜூஸ் கம்பெனிகளில் இருந்து கொட்டப்பட்ட ரசாயன மாங்கொட்டைகளால் தண்ணீர் மாசடைந்து உள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு

Advertisement
Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

Posted Oct 01, 2023 in சினிமா,Big Stories,

மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து


Advertisement