செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தப்பி ஓடிய கைதி..! தட்டித் தூக்கிய குட்டி யானை!! நட்ட நடு சாலையில் துப்பாக்கியுடன் ஒரு சேஸ்..!!

Jun 02, 2023 07:21:58 AM

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி, போலீஸின் பிடியிலிருந்து நழுவி தப்பியோடிய போது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்தார். அவரை துப்பாக்கி முனையில் போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பரபரப்பான பல்லடம் பேருந்து நிலையத்திற்கு, சீருடையில் இருந்த 4 போலீஸார் துப்பாக்கி ஏந்தியவாறு 3 பேரை அழைத்து வந்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் திடீரென போலீஸ் பிடியிலிருந்து நழுவி தப்பியோடினான்.

மற்ற 2 கைதிகளையும் காவலர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, தப்பி ஓடியவனை 3 போலீஸார் துரத்திச் சென்றனர். கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீஸார் ஒருவரை துரத்தி வருவதை அங்கிருந்தவர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சாலையில் வந்த சரக்கு வாகன ஓட்டுநர் ஒருவரும் இதை பார்த்து விட்டு வாகனத்தை பிரேக் அடித்து நிறுத்த, அதில் வந்து மோதி கீழே விழுந்தான் அந்த நபர்.

கீழே விழுந்த நபரை துப்பாக்கி முனையில் அங்கிருந்தவர்களின் உதவியோடு மீட்டு மீண்டும் தங்கள் கஸ்டடிக்கு கொண்டு வந்தனர் போலீஸார்.

இதுகுறித்து, பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில், தப்பியோடியவர் தாராபுரத்தைச் சேர்ந்த 30 வயதான சுப்பிரமணி என்பதும், 2019 ஆம் ஆண்டில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகி விட்டு மீண்டும் கோவைக்கு அழைத்துச் செல்லும் வழியில் சுப்பிரமணி தப்பியோடியது தெரிய வந்தது.

கைதிகள் தப்பியோடினால் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிலையில், 3 கைதிகளை அழைத்துச் செல்ல வாகன வசதி செய்துக் கொடுக்காமல் பேருந்தில் அனுப்பி வைப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


Advertisement
கீழ்பாக்கத்தில் தாறுமாறாக காரை ஓட்டி மோதியதில் ஒருவர் பலி, மூன்று பேர் காயம். 4 வாகனங்கள் சேதம்
H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்
உதகை அரசு கலைக்கல்லூரி விடுதியில் தங்குவதற்காக மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக முதல்வர் மற்றும் பேராசிரியர் பணியிடை நீக்கம்
அக்கா உங்க நகைகள் அழகு... திமுக பெண் கவுன்சிலரின் தலையை நசுக்கிய தோழி..! நம்பிச்சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்..!
செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்ததால் பெண் கருகி பலி..! வேண்டாமே இந்த விபரீதம்
சென்னையில் 11 வயது சிறுமி தற்கொலையை சந்தேகத்துக்கு இடமான மரணம் என போலீஸ் வழக்குப்பதிவு
லியோவுக்கு சிக்கல் மேல் சிக்கல் சொன்ன நாளில் வெளியாகுமா ? பிரச்சனைக்கு இவர் தான் காரணம்..! 6 ஆயிரம் எங்கே 50 ஆயிரம் எங்கே ?
செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ஃப்ளக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவன தொழிற்சாலையில் ஐடி அதிகாரிகள் சோதனை
மனைவியை ரயில் முன் தள்ளி கொல்வதற்காக இழுத்துச் சென்ற கணவன்... உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிள்.
திருப்பதுரில் அரசுப் பேருந்துகளில் கல்லூரி மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்தால் வழக்கு பாயும் என போக்குவரத்து உதவி ஆய்வாளர் எச்சரிக்கை

Advertisement
Posted Sep 28, 2023 in இந்தியா,Big Stories,

ரணகளத்தில் பேட்டியா சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பினர்..! வலுக்கும் காவிரி போராட்டம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அக்கா உங்க நகைகள் அழகு... திமுக பெண் கவுன்சிலரின் தலையை நசுக்கிய தோழி..! நம்பிச்சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்..!

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்ததால் பெண் கருகி பலி..! வேண்டாமே இந்த விபரீதம்

Posted Sep 27, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

லியோவுக்கு சிக்கல் மேல் சிக்கல் சொன்ன நாளில் வெளியாகுமா ? பிரச்சனைக்கு இவர் தான் காரணம்..! 6 ஆயிரம் எங்கே 50 ஆயிரம் எங்கே ?


Advertisement