செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அடையாளத்தை மாற்றி அடுத்தவர் வாகனத்தை 4 ஆண்டுகள் ஓட்டிய போலீஸ்.... இதெல்லாம் நியாயமா ஆபிஸர்ஸ்....?

Jun 01, 2023 02:22:53 PM

செங்கல்பட்டில், விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தை, வாகன உரிமையாளருக்குத் தெரியாமல் நம்பர் பிளேட் உள்ளிட்ட அடையாளங்களை மாற்றி 4 ஆண்டுகளாக தனிப்பிரிவு காவலர் ஒருவர் ஓட்டி வந்தது தெரிய வந்துள்ளது.

காவல் நிலையங்களை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இது போன்ற வாகனங்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு வழக்கின் கதை உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஜமீன்எண்டத்தூரைச் சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஊழியரான சிவபாலன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஓட்டிச் சென்ற ஹீரோ மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். வழக்குப்பதிவு செய்த சித்தாமூர் போலீஸார் அந்த டூவீலரை கைப்பற்றி காவல் நிலையம் கொண்டுச் சென்றனர். வாங்கி 4 மாதங்களே ஆகியிருந்ததால் வாரந்தோறும் காவல் நிலையத்திற்கு செல்வதும் தனது வாகனத்தை ஒப்படைக்குமாறு கேட்பதும் தனது வாராந்திர பழக்கமாகவே இருந்ததாக சிவபாலன் தெரிவித்தார்.

காவல் நிலையம் சென்ற போதெல்லாம், உளவுத்துறை போலீஸ்காரரான பக்தவச்சலம் தன்னை டீக்கடைக்கு அழைத்துச் சென்று டீ வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்து அனுப்பி வைப்பது வாடிக்கை என்கிறார், சிவபாலன்.

 இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி சித்தாமூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் விஷச்சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கினை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வரும் நிலையில், சிவபாலனை தொலைபேசியில் தொடர்புக் கொண்ட பக்தவச்சலம், உனது வாகனம் ஸ்டேசனின் பின்னால் நிற்கிறது, உடனே சென்று எடுத்துக் கொள் என கூறியுள்ளார்.

பக்தவச்சலம் சொன்ன இடத்திற்கு சென்று பார்த்தபோது, இவ்வளவு நாட்களாக பக்தவச்சலம் ஓட்டி வந்த வாகனம் நம்பர் பிளேட் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறுகிறார், சிவபாலன். வாகனத்தின் விலை உயர்ந்த பாகங்களுக்கு பதிலாக பழைய பாகங்கள் மாட்டப்பட்ட நிலையில் இருந்ததால், வாகனத்தின் எஞ்ஜின் எண்ணைக் கொண்டு தனது வாகனத்தை உறுதிப்படுத்திக் கொண்டார் சிவபாலன்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத்திடம் நேற்று கேட்டபோது, இந்த பிரச்சனை குறித்து தனக்கு எந்த புகாரும் வரவில்லையெனவும், உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பக்தவச்சலத்தை இன்று பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி நடவடிக்கை மேற்கொண்டார்.


Advertisement
கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி
சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!
தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!
உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து
தங்கச்சி கொள்ளைக்காரி.. அக்கா பதுக்கல் ராணி.. அசத்தலாக தூக்கிய போலீஸ்..! சிசிடிவி மட்டும் இருந்தா சக்சஸ் தான்
ஒரு கண்டன அறிக்கை போதும் கே.ஜி.எப் வெளியாகி இருக்குமா ? தம்பிகளுக்காக சீமான் ஆவேசம்..! அரசியல் கட்சிகளுக்கு அவமானம்
காவிரி விவகாரத்தில் ரஜினி கள்ளமவுனமா..? சிவராஜ் குமார் கண்டனம்..! ஆதங்கத்தில் ரஜினி ரசிகர்கள்
2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு
திருப்பதி மலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்த 13 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்ட பாம்பை வனப்பகுதியில் விடுவிப்பு
மழைக்கு ஒதுங்கினோம்.. அப்படியே சரிஞ்சிருச்சு.. உயிர்ப் பலி வாங்கிய பங்க்..! பெட்ரோல் நிலைய கூரை சரிந்த சோகம்

Advertisement
Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

Posted Oct 01, 2023 in சினிமா,Big Stories,

மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து


Advertisement