செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

குழந்தையின் சடலத்துடன் 10 கி.மீ தூரம் நடை பயணம்.. மலைக்கிராமங்களின் கண்ணீர் பக்கங்கள்..!

May 29, 2023 07:22:08 AM

உரிய சாலை வசதி இல்லாததால் இறந்த ஒன்றரை வயது குழந்தையின் சடலத்தை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கைகளில் உறவினர்கள் தூக்கிச் சென்ற பரிதாப நிலை வேலூர் மாவட்டத்திலுள்ள மலைக்கிராமத்தில் ஏற்பட்டது.

இறந்த குழந்தையின் சடலத்தை கையில் தூக்கி வைத்துக் கொண்டு நடந்துச் செல்லும் இந்த காட்சி அரங்கேறியிருப்பது வேலூர் மாவட்டம் அத்திமரத்து கொல்லை மலைக்கிராமத்தில் தான்.

விஜி - பிரியா தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தை தனுஷ்கா வீட்டில் இரவில் தூங்கிக்கொண்டிருந்த போது நாகப்பாம்பு தீண்டியதாக கூறப்படுகிறது. 

அணைக்கட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச் சென்ற போதிலும், உரிய சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு செல்லவே நீண்ட நேரமானது. இதனால், பாம்பின் விஷம் உடல் முழுவதும் பரவி வழியிலேயே குழந்தை இறந்தது.

தகவலறிந்த போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடற்கூராய்விற்கு பிறகு குழந்தையின் உடல் அரசு ஆம்புலன்ஸில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மலை அடிவாரத்திலிருந்து கிராமத்திற்குச் செல்ல சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலையில், போதிய சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸை இயக்க முடியாமல் மலை அடிவாரத்திலேயே சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

குழந்தையின் சடலத்தை பார்த்து கதறியழுத உறவினர்கள் அங்கிருந்து சிறிது தூரம் மோட்டார் சைக்கிளிலும், மோட்டார் சைக்கிள் கூட செல்ல முடியாத செங்குத்தான இடத்தில், கைகளில் சடலத்தை தூக்கி வைத்துக் கொண்டு நடந்தும் சென்றனர்.

அல்லேரி மலையில் 4 கிராமங்களில் சுமார் 400 பேர் வசித்து வரும் நிலையில் அடுத்தடுத்துள்ள மலைத் தொடர்களிலும் சிறுசிறு தொகுப்புகளாக மலைக்கிராமங்கள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மலைக்கிராமங்களிலும் தேவையான அடிப்படை வசதிகளை செய்துத்தர வேண்டுமென தெரிவித்துள்ள கிராம மக்கள், துவங்கியுள்ள சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளனர்.


Advertisement
கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி
சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!
தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!
மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்
உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து
தங்கச்சி கொள்ளைக்காரி.. அக்கா பதுக்கல் ராணி.. அசத்தலாக தூக்கிய போலீஸ்..! சிசிடிவி மட்டும் இருந்தா சக்சஸ் தான்
ஒரு கண்டன அறிக்கை போதும் கே.ஜி.எப் வெளியாகி இருக்குமா ? தம்பிகளுக்காக சீமான் ஆவேசம்..! அரசியல் கட்சிகளுக்கு அவமானம்
காவிரி விவகாரத்தில் ரஜினி கள்ளமவுனமா..? சிவராஜ் குமார் கண்டனம்..! ஆதங்கத்தில் ரஜினி ரசிகர்கள்
2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு
திருப்பதி மலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்த 13 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்ட பாம்பை வனப்பகுதியில் விடுவிப்பு

Advertisement
Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

Posted Oct 01, 2023 in சினிமா,வீடியோ,Big Stories,

மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து


Advertisement