செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தமிழில் ஒலித்த மந்திரங்கள்..! ஆசி வழங்கிய ஆதீனங்கள்.!! நிறுவப்பட்டது செங்கோல்.!!!

May 28, 2023 06:53:18 PM

டெல்லியில் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். தமிழில் மந்திரங்கள் முழங்க, ஆதீனங்கள் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை, மக்களவை சபாநாயகர் இருக்கையின் அருகே பிரதமர் நிறுவியுள்ளார்.

16 ஏக்கர் பரப்பளவு..! 4 தளங்கள்..! அதி நவீன வசதிகள்..! நாடு முழுவதும் இருந்து வரழைக்கப்பட்ட பிரத்யேகப் பொருட்களால் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு டெல்லியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது, நாடாளுமன்ற புதிய கட்டிடம்..!

புதிய கட்டிடத்தை திறந்து வைக்க வந்த பிரதமர் நரேந்திர மோடி, முதலில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு சென்ற பிரதமர், பாரம்பரிய முறைப்படி வேத விற்பன்னர்கள் நடத்திய கணபதி ஹோமத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் இணைந்து பங்கேற்றார்.

யாகத்துக்குப் பின், தமிழகத்தைச் சேர்ந்த ஆதீனங்களிடம் பிரதமர் மோடி நெடுஞ்சாண்கிடையாக ஆசி பெற்றார். திருஞானசம்பந்தர் இயற்றிய கோளறு பதிகம் பாடப்பட்டு "அரசாள்வார் ஆணை நமதே" என்ற இறுதி வரியின் போது, ஆதீனங்கள் பிரதமரிடம் தங்கச் செங்கோலை வழங்கினர்.

மங்கல வாத்தியங்கள் இசைக்க, அரோகரா முழக்கம் ஒலிக்க, ஆதீனங்கள் புடை சூழ செங்கோலை கைகளில் ஏந்தி மக்களவைக்கு சென்றார் பிரதமர்.

மக்களவைத் தலைவர் இருக்கை அமைந்துள்ள மேடை மீது ஏறிய பிரதமர், சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த சபாநாயகர் ஓம் பிர்லாவை தமக்கு அருகே அழைத்தார். பின்னர் அங்கே அமைக்கப்பட்டுள்ள பிரத்யேகமான பேழை மீது பிரதமர் மோடி செங்கோலை நிறுவி மலர்களைத் தூவினார். அருகில் இருந்த குத்துவிளக்கையும் ஏற்றி வைத்தார்.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவை குறிக்கும் கல்வெட்டுகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பின்னர், புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு பிரதமர் சால்வை அணிவித்து கவுரவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

அதன்பின், இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், பவுத்தம் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள் பிரார்த்தனைகளை நடத்தினர். புதிய நாடாளுமன்ற கட்டிடம், தேசத்தை வளர்ச்சியின் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மக்களுக்கு அதிகாரமளித்து, அவர்களின் கனவுகளை நனவாக வளர்த்தெடுக்கும் இடமாக இந்த கட்டிடம் அமையும் என்றும் திறப்பு விழாவுக்குப் பின் வெளியிட்ட ட்வீட் ஒன்றில் பிரதமர் தெரிவித்துள்ளார்.


Advertisement
கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி
சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!
தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!
உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து
தங்கச்சி கொள்ளைக்காரி.. அக்கா பதுக்கல் ராணி.. அசத்தலாக தூக்கிய போலீஸ்..! சிசிடிவி மட்டும் இருந்தா சக்சஸ் தான்
ஒரு கண்டன அறிக்கை போதும் கே.ஜி.எப் வெளியாகி இருக்குமா ? தம்பிகளுக்காக சீமான் ஆவேசம்..! அரசியல் கட்சிகளுக்கு அவமானம்
காவிரி விவகாரத்தில் ரஜினி கள்ளமவுனமா..? சிவராஜ் குமார் கண்டனம்..! ஆதங்கத்தில் ரஜினி ரசிகர்கள்
2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு
திருப்பதி மலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்த 13 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்ட பாம்பை வனப்பகுதியில் விடுவிப்பு
மழைக்கு ஒதுங்கினோம்.. அப்படியே சரிஞ்சிருச்சு.. உயிர்ப் பலி வாங்கிய பங்க்..! பெட்ரோல் நிலைய கூரை சரிந்த சோகம்

Advertisement
Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

Posted Oct 01, 2023 in சினிமா,Big Stories,

மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து


Advertisement