செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வந்தே பாரத் - இந்திய ரயில்வேயின் பெருமை.. இரும்பு ரயிலாக மாறும் கதை..!

May 27, 2023 09:47:22 PM

தேசத்தின் பெருமை மிகு பொது போக்குவரத்தான ரயில்வேயில், சென்னை பெரம்பூர் ICF ல் தயாரிக்கப்பட்ட 21 வது வந்தே பாரத் ரயில் இணைக்கப்படவுள்ளது. வந்தே பாரத் ரயில் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் பொது போக்குவரத்தாக இந்தியன் ரயில்வே உள்ளது. நாடுமுழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடங்களில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிவேகமாக பயணம் செய்யும் வகையில்' 'வந்தே பாரத்' ராயில்சேவையை ரயில்வே துறை வழங்கி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்களை சென்னை பெரம்பூரில் உள்ள ICF எனப்படும் இருப்புப் பெட்டி தொழிற்சாலை உற்பத்தி செய்கிறது. இதுவரை 21 வந்தே பாரத் ரயில்களை இந்நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது.

வந்தே பாரத் ரயிலுக்கு தேவையான 90 விழுக்காடு பாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ரயிலின் அடிப்பாகம் முதலில் தேவையான அளவில் வடிவமைக்கப்படுகிறது, பின்னர் பக்கவாட்டு தடுப்புகளும், அதனை தொடர்ந்து மேல் மூடி உள்ளிட்ட பாகங்கள் உற்பத்தி செய்து இணைக்கப்பட்டு, பிறகு வண்ணம் பூசும் பணி நடைபெறுகிறது. இதன் பின்னர் தான் சக்கரங்கள் இணைக்கப்பட்டு பெட்டிக்குத் தேவையான இருக்கைகள், விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்தும் முடிந்து, பயன்பாட்டுக்காக வெளியே வரும் முன், முழு சோதனை நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் பெட்டிகள் மட்டும் சேவைக்கு அனுப்பப்படுகின்றன.

தற்போது இருக்கை வசதிகள் மட்டுமே கொண்டுள்ள வந்தே பாரத் ரயில்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதில் வெளிநாடுகளில் ரயில் போக்குவரத்தில் உள்ள நவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தண்டவாளத்தில் இரு ரயில்கள் எதிரெதிர் திசையில் வந்தாலும் மோதிக்கொள்ளாமல் விபத்தை தவிர்க்கும் தொழில்நுட்பம், பேரிடர் கால பாதுகாப்பு வசதி, பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், நவீன சொகுசு இருக்கை, ரயில் ஓட்டுனருடன் பயணிகள் பேசுவதற்கு கருவி, wifi internet இணைப்பு என விமானத்தில் உள்ள வசதிகள் வந்தே பாரத் ரயில்களில் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

வந்தே பாரத் ரயில்களுக்கு மக்களிடையே கிடைத்துள்ள அமோக வரவேற்பை தொடர்ந்து, படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளை தயாரிக்க ICF திட்டமிட்டுள்ளது. இதே போல் 200 கிலோ மீட்டர் தொலைவுக்குள் பயன்படுத்தப்படும் பேசஞ்சர் ராயில்களுக்கு மாற்றாக 'வந்தே மெட்ரோ' ரயில்களும், 6000 நபர்கள் பயணிக்கும் வகையில் நவீன வசதிகள் கொண்ட 'வந்தே புறநகர்' ரயில்களும் உற்பத்தி செய்ய ICF திட்டமிட்டுள்ளது.

ஒரு வந்தே பாரத் ரயில் உற்பத்தி செய்வதற்கு 60 நாட்கள் செலவிடப்படுகின்றன. இதற்கான தொகை வரி இன்றி 108 கோடி ரூபாய் ஆகிறது. உலக நாடுகளுக்கு தேவையான ரயில் பெட்டிகளை இந்தியா ஏற்றுமதி செய்வது, இந்தியாவின் 75 வது சுதந்திர ஆண்டில் தனிப் பெருமையாக உள்ளது.


Advertisement
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் ரூ.203 உயர்வு...!
"வெளிநாடுகளில் இருந்து கப்பலில் வரும் பொருட்களை வாங்கி அதிக லாபத்துக்கு விற்கலாம்" என பலரிடம் ஆசைகாட்டி மோசடி செய்த நபர் கைது
மழைக்கு ஒதுங்கினோம்.. அப்படியே சரிஞ்சிருச்சு.. உயிர்ப் பலி வாங்கிய பங்க்..! பெட்ரோல் நிலைய கூரை சரிந்த சோகம்
சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
சர்ன்னு கார் ஓட்டிய சூப்பர் சரவணா ஸ்டோர் ஓனர் மகனின் வேகத்தால் விபத்து..!
மதுரவாயிலில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
சாலையோரம் சென்றவரை அடிச்சி தூக்கிய தொழில் அதிபருக்கு அரைமணி நேரத்தில் ஜாமீன்..! அடக்கம் செய்ய கூட காசில்லை என கண்ணீர்
கீழ்பாக்கத்தில் தாறுமாறாக காரை ஓட்டி மோதியதில் ஒருவர் பலி, மூன்று பேர் காயம். 4 வாகனங்கள் சேதம்
வேளாண்மை, மற்றும் இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தையுமான பிரபல விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன் காலமானார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Advertisement
Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

Posted Oct 01, 2023 in சினிமா,Big Stories,

மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து


Advertisement