செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இது நடை பாதையா..? இல்லை தீ மிதி மேடையா..? கால் வைக்க முடியாமல் தலை தெறித்து ஓடும் பக்தர்கள்..!

May 27, 2023 07:48:25 PM

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து வெளியே வரும் பக்தர்கள், சுட்டெரிக்கும் வெயிலில் கால் வைக்க முடியாமல் தலை தெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.

12 ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்துக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அக்னி தீர்த்தக் கடலில் நீராடி ராமர் வழிபட்ட ஈஸ்வரரை வணங்கினால் பாவம் தீரும் என்பது நம்பிக்கை.

கோயிலுக்குள் செல்வோர் கிழக்கு ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவதால், அவர்களின் காலணிகள் அங்கேயே வாசல் அருகே பாதுகாக்கப்பட்டு வருகிறது. தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் முடிந்தவர்கள் தெற்கு ராஜகோபுரம் வழியாக வெளியேறுகிறார்கள்.

அவர்கள் தங்களது காலணிகளை எடுப்பதற்காக சுமார் 300 அடி தூரம் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்துச் சென்றாக வேண்டும். தற்போது கத்தரி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மதிய நேரத்தில் வெளியே வருபவர்கள் ஒதுங்கக்கூட நிழலில்லாமல் ஓடிச் செல்வதும், கிடைக்கும் சிறிய நிழலில் சற்று இளைப்பாறுவதுமாக தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றனர்.

ஜோதிலிங்க தலம் என்பதால் கோயிலின் வெளிப்பகுதியின் 4 மாட வீதிகளிலும் வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், பக்தர்கள் நடந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள், சிறுவர்கள் கால் சூட்டினை பொறுத்துக் கொள்ள முடியாமல் நடைபாதையிலேயே அமர வேண்டிய நிலை உள்ளது.

கோயிலைச் சுற்றியும் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் தெளிப்பது, தென்னைநார் தரை விரிப்புகளை நடைபாதையில் விரித்து அதன் மீது தண்ணீர் ஊற்றும் பழைய நடைமுறைகள் ஏன் கைவிடப்பட்டது என பக்தர்கள் கேள்வியெழுப்பி உள்ளனர்.


Advertisement
ஓசூரில் பால விநாயகரை மழையிலும் குடை பிடித்தபடி பக்தர்கள் தரிசனம்
தமிழகம் மற்றும் காரைக்காலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் முதல் நாள் கோலாகலம்... கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்
வினை தீர்ப்பான் விநாயகர்..! விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலம்..!
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது
இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; 7 பேர் காயம்
தமிழ்நாடு முழுவதும் முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை விழா...கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்தது..!
ஆடித் திருவிழாவையொட்டி கோயில்களில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
மதத்தை வைத்து சிறுபான்மையினர் என்று கூறக்கூடாது: சீமான்

Advertisement
Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

25 நிமிட கோடீஸ்வரன்! ரூ. 9000 கோடிக்கு தற்காலிக அதிபதி..!! டாக்ஸி டிரைவருக்கு வந்த சோதனை!

Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

பெற்ற தாயை தவிக்க விட்டு பண்ணை வீட்டில் பதுங்கிய பணக்கார மேஜிக் மேன்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படமாட்டாது..! சாப்பிட்டா சங்கடம் தான்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

நிலத்தடியில் சாயக்கழிவுகளை கலக்கும் மனசாட்சியில்லா பணவெறி ஆலைகள்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

போலீஸ்காரன் திருட்டு பையன்... செல்போனை திருடிவிட்டு பேரம் பேசிய திருடர்குல திலகம்..! கரும்புக் காட்டுக்குள் கவனிப்பு


Advertisement