செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

போதை இளைஞரின் புதிய விளக்கம் Drive and drink ஆளில்லாத சாலையில் அலப்பறை..!

May 21, 2023 07:30:32 PM

சென்னையில் சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு உறங்கிய போதை இளைஞரை, பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு போலீசார் எழுப்பி விட்ட நிலையில் அவரோ திடீர் டிராபிக் போலீசாக மாறி, ஆளில்லாத சாலையில் போக்குவரத்தை சரி செய்வதாக அலப்பறையில் ஈடுபட்டார்.

சென்னை புதுப்பேட்டையில் நள்ளிரவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் என்ஜின் இயக்கத்தில் இருக்க, பின் இருக்கையில் இளைஞர் ஒருவர் கால்மீது கால் போட்டு ஆழந்த உறக்கத்தில் இருந்தார்.

குளிர்சாதன வசதி கொண்ட காரில் அசைவின்றி மல்லாந்து கிடந்தவரை அங்கிருந்தவர்கள் சந்தேகித்து எழுப்புவதற்கு எடுத்த முயற்சிகள் பலனிக்காததால், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அங்கு வந்த போலீசார், காரின் மேல்பகுதி மற்றும் பக்கவாட்டில் தட்டி சத்தம் எழுப்பிய நிலையிலும் எந்த சலனமும் இளைஞரிடம் இல்லாமல் இருந்தது. இருபுறமும் நின்றுக் கொண்டு போலீசார் காரை அசைக்க, தன்னை யாரோ தாலாட்டுகிறார்கள் என்று நினைத்துக் கொண்ட அந்த இளைஞர் எழுந்திருக்கவில்லை.

பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு எழுந்த அந்த இளைஞர், தள்ளாடியதால் மது அருந்தி உள்ளாரா என்று ப்ரீத் அனலைசரில் ஊத சொல்லியும் அவர் ஊத மறுத்து விட்டார் என கூறப்படுகிறது.

அத்தோடு, தான் குடித்து விட்டு வண்டி ஓட்டவில்லை என்பதை நான் drink and drive கிடையாது, வாகனம் ஓட்டி விட்டு குடித்துள்ளேன் என drive and drink என போலீசுக்கே புதிய விளக்கம் அளித்தார்.

ஒருவழியாக காரிலிருந்து கீழே இறங்கிய உடன், இப்போது நான் தான் டிராபிக் போலீஸ் என்று கூறிக் கொண்டு வெறிச்சோடி கிடந்த சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது போன்று பாவனைச் செய்துக் கொண்டே, ரோந்து போலீசாரின் வாகனத்தையே அங்கிருந்து கிளப்பிச் செல்ல சிக்னல் கொடுத்துக் கொண்டிருந்தார்.

வேறுவழியில்லாமல் புறப்பட்டுச் சென்ற போலீசாரோ, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


Advertisement
கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி
சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!
தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!
மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்
உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து
தங்கச்சி கொள்ளைக்காரி.. அக்கா பதுக்கல் ராணி.. அசத்தலாக தூக்கிய போலீஸ்..! சிசிடிவி மட்டும் இருந்தா சக்சஸ் தான்
ஒரு கண்டன அறிக்கை போதும் கே.ஜி.எப் வெளியாகி இருக்குமா ? தம்பிகளுக்காக சீமான் ஆவேசம்..! அரசியல் கட்சிகளுக்கு அவமானம்
காவிரி விவகாரத்தில் ரஜினி கள்ளமவுனமா..? சிவராஜ் குமார் கண்டனம்..! ஆதங்கத்தில் ரஜினி ரசிகர்கள்
மழைக்கு ஒதுங்கினோம்.. அப்படியே சரிஞ்சிருச்சு.. உயிர்ப் பலி வாங்கிய பங்க்..! பெட்ரோல் நிலைய கூரை சரிந்த சோகம்
சர்ன்னு கார் ஓட்டிய சூப்பர் சரவணா ஸ்டோர் ஓனர் மகனின் வேகத்தால் விபத்து..!

Advertisement
Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

Posted Oct 01, 2023 in சினிமா,Big Stories,

மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து


Advertisement