செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கேக்கிறான், மேய்க்கிறான் நடிகையை ஏய்த்தது யார்? தீருமா பஞ்சாயத்து..?

May 16, 2023 08:58:47 PM

திருமண செயலியில் வரன் தேடிய கேக்கிறான், மேய்க்கிறான் பட நடிகை லுப்னா, தன்னை ஐடி ஊழியர் ஏமாற்றியதோடு தொடர்ந்து மிரட்டி வருவதாக புகார் தெரிவித்து காவல்நிலையத்திற்கும், நீதிமன்றத்திற்கும் அலைந்துக் கொண்டிருக்கிறார்.

கேக்கிறான் மேய்க்கிறான் திரைப்படம் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷாயிதா லுப்னா கேத்ரி என்ற லுப்னா அமீர்.

வெப் சீரியஸ்களிலும் நடித்து வரும் லுப்னா திருமணத்திற்காக BETTA HALF என்ற மேட்ரிமோனியல் ஆப்பில் தனது சுய விபரங்களை பதிவு செய்துள்ளார். அதே செயலியில் வரன் தேடிய வியாசர்பாடியைச் சேர்ந்த ஐடி ஊழியரான மசியுல்லாகான், லுப்னாவைத் தொடர்புக் கொண்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதன்பின் இருவரும் ஒன்றாக சுற்றி வந்த நாட்களில் மசியுல்லாவிற்கு ஏற்கனவே திருமணமானதை தெரிந்துக் கொண்ட லுப்னா அவரை விட்டு விலக முடிவெடுத்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மசியுல்லா, இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தவறாக சித்தரித்து பல்வேறு ஆபாச இணையதங்களில் வெளியிட்டு வருவதாக திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் லுப்னா. புகாரின் பேரில் கைதான மசியுல்லா, சில நாட்கள் சிறையில் இருந்து விட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், தன்னை லுப்னா அடியாட்களுடன் வந்து மிரட்டுவதாக மசியுல்லா கொடுத்த புகாரில் பெரவள்ளூர் போலீஸார் லுப்னா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 6 மாதமாக இருதரப்பினரும் ஒருவரை மாறி ஒருவர் குற்றஞ்சாட்டி காவல்நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்து வரும் நிலையில், சென்னை மாநகர் காவல்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் லுப்னா அண்மையில் புதிதாக புகார் அளித்துள்ளார். அதில், மசியுல்லா மீது தான் அளித்துள்ள புகாரை வாபஸ் பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தனது மனைவியுடன் சேர்ந்து மசியுல்லா மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவித்துள்ள லுப்னா, பெரவள்ளூர், வேலூர் மற்றும் வாணியம்பாடி காவல் நிலையங்களில் தன் மீது வெவ்வேறு புகார்களை அளித்து மசியுல்லா தொந்தரவு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மனைவியுடனான கருத்து வேறுபாட்டால் 2020 ஆம் ஆண்டே அவரை விட்டு பிரிந்து விட்டதால், திருமணத்திற்கு வரன் தேடி வந்ததாக தெரிவித்துள்ளார் மசியுல்லா. திருமண செயலி மூலமாக அறிமுகமான லுப்னா, தன்னிடமிருந்து அதிகளவு பணம் வாங்கியிருப்பதாக கூறும் மசியுல்லா, இந்தியாவில் தடை செய்யப்பட்ட செயலியில் ஆபாச வீடியோ பதிவிட்டு லுப்னா பணம் சம்பாதித்து வருவதால் அவருடன் பழகுவதையே நிறுத்தி விட்டதாக மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வைத்து லுப்னா தான் தன்னை மிரட்டி வருவதாகவும் கூறினார் மசியுல்லா.

இருவரும் கூறி வரும் புகார்களில் எது உண்மை, எது பொய் என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Advertisement
கையில் மாலை கெடச்சா யாருக்கு வேணா போடுவியா.. மன்னிப்பு கேளு கூல் சுரேஷ்...!
இரு நாட்களாக கடும் மன அழுத்ததில் இருந்த விஜய் ஆண்டனி மகள்
விஜய் ஆண்டனி மகளின் விபரீத முடிவுக்கு காரணம் என்ன..? வெளியான முரண்பட்ட தகவல்கள்!
கதறி அழுத விஜய் ஆண்டனி..! கலங்கி நின்ற திரையுலகம்..!!
விஜய் ஆண்டனி மகளின் விபரீத முடிவுக்கு காரணம் என்ன..? வெளியான முரண்பட்ட தகவல்கள் !
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மரணம்
ஷாருக்கான் மிகவும் எளிமையானவர் என்று இயக்குனர் அட்லீ புகழாரம்
என்னய்யா சொல்றீங்க... மார்க் ஆண்டனி படம் ஹிட்டா ? இதை எஸ்.ஜே.சூர்யா எதிர்பார்க்கல..! நடிப்பு அரக்கா... என்று கூச்சல்..!
நடிகர் விஜய் பெற்றோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல்
விஷாலை விளாசிய நீதிபதி.. எதிர்காலத்தில் நடிக்க தடை.. கோபத்திற்கு என்ன காரணம்..? எப்போதுமே ஏமாற்றினால் இப்படித்தான்..!

Advertisement
Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

25 நிமிட கோடீஸ்வரன்! ரூ. 9000 கோடிக்கு தற்காலிக அதிபதி..!! டாக்ஸி டிரைவருக்கு வந்த சோதனை!

Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

பெற்ற தாயை தவிக்க விட்டு பண்ணை வீட்டில் பதுங்கிய பணக்கார மேஜிக் மேன்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படமாட்டாது..! சாப்பிட்டா சங்கடம் தான்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

நிலத்தடியில் சாயக்கழிவுகளை கலக்கும் மனசாட்சியில்லா பணவெறி ஆலைகள்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

போலீஸ்காரன் திருட்டு பையன்... செல்போனை திருடிவிட்டு பேரம் பேசிய திருடர்குல திலகம்..! கரும்புக் காட்டுக்குள் கவனிப்பு


Advertisement