செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மிரட்டும் மரச்சிற்பங்கள்... மென் பொறியாளர் வீடா இல்லை பாதாள உலகமா... 14 உலோக சிலைகளும் சிக்கியது..!

May 16, 2023 11:25:11 AM

அமெரிக்காவில் பணிபுரியும் பெண் மென் பொறியாளரின் சென்னை வீட்டில் இருந்து மாயாஜாலப்படங்களில் வருவது போன்ற பிரமாண்ட  மர சிற்பங்களையும், 14 உலோக சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்கள் உள்ளிட்டவற்றை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக கோவில்களில் களவாடப்பட்ட பொக்கிஷங்களை வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..

முதல் ரெய்டில் 17 பழமையான சாமி சிலைகள்... 2 வது ரெய்டில் வீட்டிற்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 55 சிலைகள் பறிமுதல்... 3 வது சோதனையில் பிரமாண்ட மரச்சிற்பங்கள், 14 உலோக சிலைகள்.. இவை எல்லாம் ஆர்ட் கேலரியில் இருந்து மீட்கப்பட்டது என்று எண்ண வேண்டாம். அமெரிக்காவில் மென்பொறியாளராக உள்ள ஷோபா என்பவருக்கு சொந்தமான சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் இருந்து மீட்கப்பட்டவை..!

இந்த சிலை மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்களை மறைந்த பிரபல சர்வதேச சிலை கடத்தல் மன்னனான தீனதயாளனிடமிருந்து ஷோபா வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டில் அருங்காட்சியகம் அமைப்பதற்கும், வெளிநாட்டில் விற்பனை செய்வதற்கும் மென் பொறியாளர் ஷோபா பல்வேறு இடங்களில் உரிய ஆவணங்களின்றி சிலைகள் வாங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதமே அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய , சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரம் காட்டாத நிலையில் , தீனதயாளன் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் உள்ள தகவலின் அடிப்படையில், அவரது வீட்டில் பூட்டப்பட்டிருந்த ஒரு அறையை பூட்டை உடைத்து திறந்து பார்த்த போது தான் அதற்குள் பழைய மாயாஜால படங்களில் வருவது போன்ற ஏராளமான பிரமாண்ட மரச்சிற்பங்கள் 14 உலோக சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதில் ராமர், நந்தி, ஜோடி புருஷா, கவலகாளி, நடராஜர், விஷ்ணு, அனுமன், பாயும் குதிரை உட்பட 12 பழமைவாய்ந்த சிலைகளும் இருந்தது.

ஏற்கனவே இரண்டு முறை 72 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் மேலும் 14 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் இது பற்றி தொலைபேசியில் ஷோபாவிடம் விசாரணை நடத்தியதாகவும், நேரில் ஆஜராக ஷோபாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆர்ட் கேலரி என்ற பெயரில் தமிழக கோவில்களில் களவாடப்பட்ட சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது இந்தச்சம்பவத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.


Advertisement
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் ரூ.203 உயர்வு...!
"வெளிநாடுகளில் இருந்து கப்பலில் வரும் பொருட்களை வாங்கி அதிக லாபத்துக்கு விற்கலாம்" என பலரிடம் ஆசைகாட்டி மோசடி செய்த நபர் கைது
மழைக்கு ஒதுங்கினோம்.. அப்படியே சரிஞ்சிருச்சு.. உயிர்ப் பலி வாங்கிய பங்க்..! பெட்ரோல் நிலைய கூரை சரிந்த சோகம்
சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
சர்ன்னு கார் ஓட்டிய சூப்பர் சரவணா ஸ்டோர் ஓனர் மகனின் வேகத்தால் விபத்து..!
மதுரவாயிலில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
சாலையோரம் சென்றவரை அடிச்சி தூக்கிய தொழில் அதிபருக்கு அரைமணி நேரத்தில் ஜாமீன்..! அடக்கம் செய்ய கூட காசில்லை என கண்ணீர்
கீழ்பாக்கத்தில் தாறுமாறாக காரை ஓட்டி மோதியதில் ஒருவர் பலி, மூன்று பேர் காயம். 4 வாகனங்கள் சேதம்
வேளாண்மை, மற்றும் இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தையுமான பிரபல விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன் காலமானார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Advertisement
Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

Posted Oct 01, 2023 in சினிமா,Big Stories,

மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து


Advertisement