செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சித்தரவதை கூடமாக மாறும் மது அடிமைகள் மறுவாழ்வு மையங்கள்..! கத்தியால் குத்திய காட்சிகள்

May 15, 2023 07:02:21 PM

அனுமதியின்றி செயல்பட்ட மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் குடிப்பழக்கத்தை மறக்க சிகிச்சை எடுத்து வந்த மெக்கானிக் ஒருவரை வீட்டுக்கு செல்ல அனுமதிக்காததால்  தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்ட கொடுமை அரங்கேறி உள்ளது.

ஆவடி அடுத்த சேக்காடு சிந்து நகரில் ரெஸ்க்யூ பவுண்டேஷன் என்ற பெயரில் போதை மறுவாழ்வு மையம் இயங்கி வருகிறது.
இதனை பிரபுதாஸ் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

இங்கு திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் அசோக்குமார் என்பவர் மது போதையில் இருந்து விடுபட எண்ணி இரண்டு முறை இங்கு தங்கி சிகிச்சை எடுத்துச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் அசோக்குமார் மீண்டும் இங்கு சிகிச்சைக்கு சேர்ந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு போதை மறுவாழ்வு மைய ஊழியரிடம், அசோக் குமார் நாளை வீட்டுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார். அதற்கு அங்குள்ளஊழியர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

இதனால் விரக்தி அடைந்த அசோக் குமார் சாப்பாடு சாப்பிட சொல்வதுபோல் நடித்து சமையலறைக்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து தனக்கு தானே வயிற்றில் குத்தி கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை கண்ட ஊழியர் சரவணன் என்பவர் அசோக்குமாரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடலில் உள்ள கத்திக் குத்து காயங்களுக்கு அறுவை செய்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவம் குறித்து ஆவடி காவல் துறை விசாரணை மேற்கொண்டனர். கடந்த 2 ஆண்டுகளாக எந்த வித அரசு அனுமதியும் பெறாமல் இந்த மது அடிமைகள் மறுவாழ்வு மையம் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை பொறுத்தவரை அசோக்குமாரின் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்று விட்டதால் குடியை மறக்க வேண்டும் என்று அவரே விருப்பப்பட்டு இங்கு சேர்ந்ததாக கூறப்படுகின்றது.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் மது குடிக்கும் ஆசை துளிர்விட்டதால் வீட்டுக்கு செல்ல முயன்று , முடியாததால் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருந்தாலும் அனுமதியின்றி மது அடிமைகள் மறு வாழ்வு மையம் நடத்திய பிரபு தாஸை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மதுவை மறக்கடிக்க செய்வதாக கூறி மதுப்பழக்கத்துக்கு அடிமையான நபர்களை உறவினர்கள் கட்டாயபடுத்தி சேர்த்துவிட்டு செல்லும் நிலையில் அவர்களை கடுமையாக சித்தரவதை செய்து குடியை மறக்க செய்வதை இது போன்ற முகாம்களில் உள்ளவர்கள் செய்து வருவதால் பலர் தங்கள் உயிரை இதுபோன்ற மது அடிமைகள் மறுவாழ்வு மையங்களில் இழந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது போன்ற சம்பவங்களை தடுக்க முறையான அனுமதியின்றி செயல்படும் மது அடிமைகள் மறுவாழ்வு மையங்களில் அரசு அதிகாரிகள் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


Advertisement
கீழ்பாக்கத்தில் தாறுமாறாக காரை ஓட்டி மோதியதில் ஒருவர் பலி, மூன்று பேர் காயம். 4 வாகனங்கள் சேதம்
வேளாண்மை, மற்றும் இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தையுமான பிரபல விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன் காலமானார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
சென்னையில் 11 வயது சிறுமி தற்கொலையை சந்தேகத்துக்கு இடமான மரணம் என போலீஸ் வழக்குப்பதிவு
லியோவுக்கு சிக்கல் மேல் சிக்கல் சொன்ன நாளில் வெளியாகுமா ? பிரச்சனைக்கு இவர் தான் காரணம்..! 6 ஆயிரம் எங்கே 50 ஆயிரம் எங்கே ?
தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ நடவடிக்கை எடுக்க வேண்டும்... காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
நவம்பர் 21 ஆம் தேதி சர்வதேச மின்சார வாகன மாநாடு நடத்த திட்டம் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
தமிழகத்திற்கு இன்னும் 11,000 கன அடி தண்ணீர் வர வேண்டி உள்ளது : அமைச்சர் துரை முருகன்
ரோஜ்கர் மேளாவில், மத்திய அரசுப் பணி நியமனம் பெற்றவர்களிடையே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
செப்.30-க்குள் சொத்து வரியைச் செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.. அக்.1 முதல் ஒரு சதவீத வட்டி வசூலிக்கப்படும் எனவும் எச்சரிக்கை.. !!

Advertisement
Posted Sep 28, 2023 in இந்தியா,Big Stories,

ரணகளத்தில் பேட்டியா சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பினர்..! வலுக்கும் காவிரி போராட்டம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அக்கா உங்க நகைகள் அழகு... திமுக பெண் கவுன்சிலரின் தலையை நசுக்கிய தோழி..! நம்பிச்சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்..!

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்ததால் பெண் கருகி பலி..! வேண்டாமே இந்த விபரீதம்

Posted Sep 27, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

லியோவுக்கு சிக்கல் மேல் சிக்கல் சொன்ன நாளில் வெளியாகுமா ? பிரச்சனைக்கு இவர் தான் காரணம்..! 6 ஆயிரம் எங்கே 50 ஆயிரம் எங்கே ?


Advertisement