செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

6 மாசமா இழுத்த போலீஸ்.. அரை மணி நேரத்தில் ஆக்சன் எடுத்த அமைச்சர்..! சரவணனுக்கு எதிராக திரும்பிய மனைவி

May 13, 2023 07:43:44 AM

சென்னை மவுலிவாக்கத்தில் தனக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நடிகர் சரவணன் , அமைச்சர் தாமோ அன்பரசனை சந்தித்து புகார் அளித்த நிலையில், ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடையில் இருந்த பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்பட்டன.

நடிகர் சரவணன் தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் தாமோஅன்பரசனை சந்தித்து சென்னை மவுலிவாக்கத்தில் தனது கார்பார்க்கிங் இடத்தையும் ஓடிஎஸ் இடத்தையும் ஆக்கிரமித்து புரோக்கர் ராமமூர்த்தி என்பவர் கடைகள் கட்டி இருப்பதாக புகார் அளித்தார். 6 மாதங்களாக போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அமைச்சரின் உத்தரவின் பேரில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இரு கடைகளையும் போலீஸ் பாதுகாப்புடன் திறந்து உள்ளே இருந்த பொருட்களை சரவணனின் ஆதரவாளர்கள் அப்புறப்படுத்தினர்.

இதனை கண்டித்து புரோக்கர் ராமமூர்த்தியும் அவரது மனைவி ஜெபமணியும் சரவணனையும் அவரது ஆதரவாளர்களையும் கடுமையாக திட்டினர்.

நடிகர் சரவணனை போலீஸ் முன்னிலையில் பிச்சைக்காரன் என்று சொல்லி மிரட்டினார் ராமமூர்த்தி. தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் அந்த இரு கடைகளும் நடிகர் சரவணனுக்கு சொந்தமானது என்று நோட்டீசை ஒட்டிச்சென்றனர்

இதையடுத்து புரோக்கர் ராமமூர்த்தி அவரது மனைவி ஜெபமணி ஆகியோர் சரவணனின் முதல் மனைவி சூர்யாஸ்ரீயை துணைக்கு அழைத்துக் கொண்டு , முதல் அமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்தனர்.

ஜெபமணி பெயரில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக சூர்யாஸ்ரீ செய்தியாளர்களிடம் பேசினார். சரவணன் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் , தற்போது தன்னிடம் விவாகரத்து பெறாமல் வேறு ஒரு பெண்ணை சேர்த்து வைத்துக் கொண்டு 2வது திருமணம் செய்து கொண்டதாக கூறி வருவதாகவும் தெரிவித்தார்.

பருத்தி வீரன் படத்துக்கு முன்பு சரவணன் பிச்சை எடுக்கும் நிலையில் இருந்ததாகவும், அப்போது சுங்கத்துறையில் வேலை பார்த்து வந்த தான் அவரை காப்பாற்றியதாகவும், தற்போது பிக்பாஸில் கிடைத்த பணத்தை வைத்து சரவணன் இப்படிப்பட்ட காரியங்களை செய்வதாகவும் கூறினார்

புகார் அளித்த ஜெபமணி கடைசி வரை செய்தியாளர்களிடம் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் ரூ.203 உயர்வு...!
"வெளிநாடுகளில் இருந்து கப்பலில் வரும் பொருட்களை வாங்கி அதிக லாபத்துக்கு விற்கலாம்" என பலரிடம் ஆசைகாட்டி மோசடி செய்த நபர் கைது
மழைக்கு ஒதுங்கினோம்.. அப்படியே சரிஞ்சிருச்சு.. உயிர்ப் பலி வாங்கிய பங்க்..! பெட்ரோல் நிலைய கூரை சரிந்த சோகம்
சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
சர்ன்னு கார் ஓட்டிய சூப்பர் சரவணா ஸ்டோர் ஓனர் மகனின் வேகத்தால் விபத்து..!
மதுரவாயிலில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
சாலையோரம் சென்றவரை அடிச்சி தூக்கிய தொழில் அதிபருக்கு அரைமணி நேரத்தில் ஜாமீன்..! அடக்கம் செய்ய கூட காசில்லை என கண்ணீர்
கீழ்பாக்கத்தில் தாறுமாறாக காரை ஓட்டி மோதியதில் ஒருவர் பலி, மூன்று பேர் காயம். 4 வாகனங்கள் சேதம்
வேளாண்மை, மற்றும் இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தையுமான பிரபல விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன் காலமானார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Advertisement
Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

Posted Oct 01, 2023 in சினிமா,வீடியோ,Big Stories,

மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து


Advertisement