செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

முதலிடம் பிடித்த விருதுநகர் மாவட்டம்.. திரும்பி பார்க்க வைத்த திண்டுக்கல் மாணவி..! வெளியான 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

May 09, 2023 10:32:10 AM

தமிழ்நாட்டில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட அதிகமாகி உள்ளது. இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன்படி, 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர் எழுதி இருந்த பிளஸ் டூ தேர்தவில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் 91.45 விழுக்காட்டினரும் மாணவியர் 96.38 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12-ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 97.85 விழுக்காடு தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.79 விழுக்காடு தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் 2-ஆம் இடத்தையும் 97.59 விழுக்காடு தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. இராணிப்பேட்டை மாவட்டம் 87.30 விழுக்காடு தேர்ச்சியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் அடுத்து வரும் தேர்வில் வெற்றியடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக்கொண்டார்.மே 19ஆம் தேதி பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகளையும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளையும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பிளஸ் டூ தேர்வில் திண்டுக்கல்லைச் சேர்ந்த நந்தினி என்ற மாணவி தமிழ், ஆங்கிலம் உட்பட அனைத்துப் பாடங்களிலும் 100 சதவீத மதிப்பெண்கள் எடுத்து 600-க்கு 600 மார்க்குகள் பெற்றுள்ளார். தச்சுக் கூலித் தொழிலாளியின் மகளாக நந்தினி, ஆடிட்டர் ஆவதே தனது லட்சியம் என்று கூறியுள்ளார்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 326 அரசு பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியை எட்டியுள்ளன. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். 12ஆம் வகுப்பு தமிழ் மொழிப்பாடத் தேர்வில் 2 பேர் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், ஆங்கில மொழிப்பாடத் தேர்வில் 15 பேர் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.


Advertisement
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.. !!
பொன்னேரி அரசுப் பள்ளியில் பாடப்பிரிவை பொறுத்து கூடுதலாக ரூ.1,000 முதல் ரூ.3,500 வரை வசூல்
6-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முறையில் மாற்றம் செய்யும் பள்ளிக்கல்வித்துறை
நீட்டிற்கு எதிரான தி.மு.கவின் உண்ணாவிரதம் நாடகமே.. தி.மு.கவால் நீட்டை ரத்து செய்யவே முடியாது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
யார், என்ன விமர்சனம் செய்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நீட்டிற்கு இன்னொரு உயிர் போனால் தி.மு.க.வே காரணம் : அண்ணாமலை
மாணவர் மரணங்களுக்கு தி.மு.க.வே பொறுப்பு: வானதி சீனிவாசன்
கடத்தப்பட்ட செவிலியர், குழந்தையை மீட்க தீவிர முயற்சி : அமெரிக்க அரசு
உயர் கல்வியில் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த தன்னாட்சி கல்லூரிகள் எதிர்ப்பு.. அந்த பாடத் திட்டத்தை 90 சதவீத கல்வி நிறுவனங்கள் பின்பற்ற தொடங்கி விட்டதாக உயர்கல்வித்துறை தகவல்..!
நாடு முழுவதும் 20 போலி பல்கலைக் கழகங்கள் செயல்படுகின்றன பட்டியலை வெளியிட்டது யு.ஜி.சி

Advertisement
Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

Posted Oct 01, 2023 in சினிமா,Big Stories,

மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து


Advertisement