செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மதுரையே அதிர வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்... கோவிந்தா..கோவிந்தா என முழக்கமிட்டு பக்தர்கள் பக்தி பரவசம்

May 05, 2023 09:35:24 AM

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக, பச்சைப் பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

அழகர்கோவிலில் இருந்து மதுரை வந்த கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர், இரவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலை வந்தடைந்தார். விடிய, விடிய அழகருக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் நடைபெற்றன.

இன்று அதிகாலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து, பச்சை பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் வைகையாற்றில் பவனி வந்தார்.

ஆழ்வார்புரம் வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகரை எதிர்சேவை கொண்டு வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீரராகவ பெருமாள் வரவேற்றார்.

கோவிந்தா... கோவிந்தா கோஷத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கருப்பண்ண சாமி வேடமிட்டும் பக்தர்கள் அழகரை வரவேற்றனர். ஆற்றில் தாமரை மலர்களால் நிரப்பப்பட்டிருக்கும் பகுதியில் அதிகாலை 5.50 மணியளவில் கள்ளழகர் எழுந்தருளினார்.

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளியதால் மும்மாரி மழை பொழிந்து விவசாயம் கொழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வுக்காக 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Advertisement
ஓசூரில் பால விநாயகரை மழையிலும் குடை பிடித்தபடி பக்தர்கள் தரிசனம்
தமிழகம் மற்றும் காரைக்காலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் முதல் நாள் கோலாகலம்... கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்
வினை தீர்ப்பான் விநாயகர்..! விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலம்..!
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது
இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; 7 பேர் காயம்
தமிழ்நாடு முழுவதும் முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை விழா...கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்தது..!
ஆடித் திருவிழாவையொட்டி கோயில்களில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
மதத்தை வைத்து சிறுபான்மையினர் என்று கூறக்கூடாது: சீமான்

Advertisement
Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

25 நிமிட கோடீஸ்வரன்! ரூ. 9000 கோடிக்கு தற்காலிக அதிபதி..!! டாக்ஸி டிரைவருக்கு வந்த சோதனை!

Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

பெற்ற தாயை தவிக்க விட்டு பண்ணை வீட்டில் பதுங்கிய பணக்கார மேஜிக் மேன்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படமாட்டாது..! சாப்பிட்டா சங்கடம் தான்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

நிலத்தடியில் சாயக்கழிவுகளை கலக்கும் மனசாட்சியில்லா பணவெறி ஆலைகள்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

போலீஸ்காரன் திருட்டு பையன்... செல்போனை திருடிவிட்டு பேரம் பேசிய திருடர்குல திலகம்..! கரும்புக் காட்டுக்குள் கவனிப்பு


Advertisement