செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

19 மாடி கட்டிடமாம்.. மின் இணைப்பு இல்லையாம்.. ரூ 8 கோடி கேக்குறாங்களாம்..! என்னடா பித்தலாட்டமா இருக்கு.?

Mar 25, 2023 06:38:26 PM

சென்னையில் 700 குடும்பங்களைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புக்கு மின்இணைப்பு வழங்குவதற்கு 8 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டு மின்இணைப்பே வழங்காமல் 5 ஆண்டுகளாக அதிகாரிகள் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 3 தினங்களாக குப்பை எடுப்பதையும் ஊழியர்கள் நிறுத்தி விட்டதால், குப்பைக்குள் தவிப்பதாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

நீச்சல் குளம் இருக்கு... கிளப் ஹவுஸ் இருக்கு... செக்யூரிட்டி இருக்கு... 24 மணி நேரம் அனைத்து வகையான வசதிகளும் இருக்குன்னு சொன்னீங்களே மின்சாரம் இருக்காதுன்னு சொன்னீங்களா ? என்று ஆதங்கப்பட்டு வீதிக்கு வந்துள்ள இந்த எலைட் மக்கள் குடியிருக்கும் 19 அடுக்குமாடி குடியிருப்பு இதுதான்..!

சென்னை பெரும்பாக்கத்தில் ஓசோன் கம்யூன் என்ற நிறுவனம் சார்பில் கட்டப்பட்டுள்ள 7 பிளாக்குகளில் 700 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இன்னும் இரண்டு பிளாக்குகளில் கட்டுமான பணி நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 5 வருடங்களாக தமிழக மின்வாரியத்தின் மூலம் மின் இணைப்பு வழங்காமல் ஜென்செட் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும், மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மெயின்டெனன்ஸ் பணம் வழங்கியும் எந்த வசதியும் இல்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.

85 லட்சம் ரூபாய் கட்டி தாங்கள் வாங்கிய குடியிருப்புக்கு வாழத் தகுதியான இடம் என்ற சான்றிதழ் கூட தற்போது வரை வழங்கவில்லை என்றும், அவ்வப்போது ஜெனரேட்டர் மூலம் வழங்கப்படும் மின்சாரம் நிறுத்தப்படுவதால் லிப்டில் சிக்கித் தவிப்பதாகவும், காவலாளி இல்லாததால் செல்போன் மூலம் உதவிகேட்டு மீண்டதாகவும் குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்தனர்

 

இந்த கட்டுமான நிறுவனத்திடம் மின்வாரிய அதிகாரிகள் 8 கோடி ரூபாய் வரை கையூட்டுக் கேட்பதாகவும், அதனை குறைக்கக் கேட்டு கட்டுமான நிறுவனம் சார்பில் பேரம் பேசப்பட்டு வருவதாகவும், குடியிருப்புவாசி ஒருவர் குண்டை தூக்கிப்போட்டார்.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது , சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் மின் இணைப்பு வேண்டும் என்று இதுவரை தங்களை அணுகவில்லை என்று தெரிவித்தனர்.500 கோடி ரூபாய்க்கு மேல் குடியிருப்புகளை விற்று கல்லாக் கட்டிய கட்டுமான நிறுவனம் தங்களை வஞ்சிப்பதாகவும், அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement
ஆடு மேய்க்க வைத்து அடிக்கிறாங்க... உடல் எல்லாம் ரணம்... மனம் எல்லாம் வலி... சவுதி அரேபியாவிலிருந்து கண்ணீர் குரல்
இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்.. விபத்தை ஏற்படுத்தி கொன்ற காதலன் கைது..!
பொண்ணு 5 ஆம் வகுப்பு..! மாப்பிள்ளை பொறியாளர்..! ஜோடியின் தூள் பறந்த ஆட்டம்..!
தலைமுறை கடந்து தாலாட்டும் இசை இளையராஜா என்னும் பேராளுமை....!
500 ரூபாய் கொடுத்தா ஆல் பாஸ் மார்க் ஷீட் இல்லன்னா ஆல் அவுட்.... தலைமை ஆசிரியரா.? இல்லை தரகரா.?
தப்பி ஓடிய கைதி..! தட்டித் தூக்கிய குட்டி யானை!! நட்ட நடு சாலையில் துப்பாக்கியுடன் ஒரு சேஸ்..!!
கூரையை பிரித்து உயிரை பணயம் வைத்து கடைக்குள் குதித்தவருக்கு காத்திருந்த ஷாக்...!!!
8 மாத காதல் 2 மாத இல்லறத்துடன் முடிவுக்கு வந்தது ஏன்.? சிப்பிக்குள் அடங்காத முத்துக்கள்...!
அடையாளத்தை மாற்றி அடுத்தவர் வாகனத்தை 4 ஆண்டுகள் ஓட்டிய போலீஸ்.... இதெல்லாம் நியாயமா ஆபிஸர்ஸ்....?
குழந்தையின் சடலத்துடன் 10 கி.மீ தூரம் நடை பயணம்.. மலைக்கிராமங்களின் கண்ணீர் பக்கங்கள்..!

Advertisement
Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

ஆடு மேய்க்க வைத்து அடிக்கிறாங்க... உடல் எல்லாம் ரணம்... மனம் எல்லாம் வலி... சவுதி அரேபியாவிலிருந்து கண்ணீர் குரல்

Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்.. விபத்தை ஏற்படுத்தி கொன்ற காதலன் கைது..!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பொண்ணு 5 ஆம் வகுப்பு..! மாப்பிள்ளை பொறியாளர்..! ஜோடியின் தூள் பறந்த ஆட்டம்..!

Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

தலைமுறை கடந்து தாலாட்டும் இசை இளையராஜா என்னும் பேராளுமை....!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

500 ரூபாய் கொடுத்தா ஆல் பாஸ் மார்க் ஷீட் இல்லன்னா ஆல் அவுட்.... தலைமை ஆசிரியரா.? இல்லை தரகரா.?


Advertisement