செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
Big Stories

டிஎம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன்... காலத்தால் அழியாத இரு இசைக் கலைஞர்களின் கானங்கள்..!

Mar 24, 2023 07:11:46 AM

டிஎம்.எஸ் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட டிஎம் சவுந்தர்ராஜன் 1950களில் மந்திரி குமாரி படத்துக்காக எம்ஜிஆருக்கும், தூக்குதூக்கி படத்துக்காக சிவாஜிக்கும் முதன்முறையாகப் பாடல்களைப் பாடினார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக எம்ஜிஆர்- சிவாஜி நடித்த படங்களில் பல நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடல்களைப் பாடி லட்சக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்தார் டிஎம்எஸ். 

எம்ஜிஆருக்காக ஒரு குரலிலும், சிவாஜிக்காக மற்றொரு குரலிலும் பாடல்களைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்திழுக்க வைத்தது இவரது தனிச்சிறப்பு. 

ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிசந்திரன், ஏவிஎம் ராஜன், நாகேஷ், சிவகுமார், முத்துராமன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்பட பலருக்கும் ஏற்றார் போல் குரலை மாற்றிப் பாடி மாயாஜாலம் செய்தவர் டிஎம்.எஸ்.

எஸ்எம் சுப்பையா நாயுடு முதல் ஏஆர் ரஹ்மான் வரை 74 இசையமைப்பாளர்கள் இசையமைத்த ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர் டிஎம்எஸ்.

தமிழகத்து கோவில் திருவிழாக்களிலும், பண்டிகை நாட்களிலும்... ஏன் ஒவ்வொரு நாளின் காலைப் பொழுதிலும் டிஎம்எஸ் பாடிய பக்திப் பாடல்கள் ஒலிக்காத இடமே இருக்காது. 

1988ம் ஆண்டு இதே நாளில் தான் தமிழகத்தின் மற்றொரு மகத்தான பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் காலமானார். பக்தி பாடல்களைப் பாடுவதில் சீர்காழிக்கு நிகர் சீர்காழிதான்.. 

அகத்தியர் ,திருவருட்செல்வர் ,திருமலை தென்குமரி போன்ற படங்களிலும் சீர்காழி கோவிந்தராஜன் சிறப்பாக நடித்திருந்தார்.

எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருக்கு பல படங்களில் பாடல்களைப் பாடி ரசிகர்களுக்கு இசைவிருந்து படைத்தவர் சீர்காழி கோவிந்தராஜன்

சீர்காழி கோவிந்தராஜனின் பாடல் ஒலிக்கும் போது அலைக்கழிப்புகளுக்கு ஆளான மனமும் அமைதியாகி விடுவதும், அமைதியாக உள்ள மனமோ அலைக்கழிப்புக்கு ஆளாகி விடுவதும் ஒவ்வொரு இசைரசிகனும் உணர்ந்தவை..

திரையிசையில் சாதனை படைத்திட்ட இரு இசைக் கலைஞர்களின் கானங்கள் காலம் உள்ளவரை காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டேதான் இருக்கும்.


Advertisement
அலுமினிய பாத்திரத்திற்குள் வசமாக சிக்கிய குழந்தை..! இரண்டரை வயது குழந்தையின் ஒரு மணி நேர போராட்டம்..!!
விபத்துக்குப் பின் நேற்றிரவு முதல் சரக்கு ரயில் இயக்கம்.. இன்று முதல் பயணிகள் ரயில் சேவைக்கு திட்டம்.!
275 பேரை பலி கொண்ட கோர விபத்துக்கான காரணம் கண்டுபிடிப்பு..!
தேகம் மறைந்தாலும் இசையாய் வாழும் எஸ்.பி.பி... இசையுலகின் முடிசூடா மன்னன்..!
எஸ்.எஸ்.ஐ வீட்டில் கைவரிசை... சினிமா பாணியில் விரட்டிச்சென்று கைது செய்த போலீசார்
அப்படியே வாழ்த்திட்டாலும்... முதல்ல ஒழுங்கா படிப்போம், அப்புறமா பேனர் அடிப்போம்... பந்திக்கு.. பந்து..! கடலைக்கு.. கல்லை..!
இந்த கோர விபத்துக்கு இவர் தான் காரணம்... வெளியானது அதிர்ச்சி தகவல்.... ரெயில்வே சர்க்கியூட் ஆதாரம்..!
‘கவச்’ வந்தாலும் காப்பாற்ற இயலாதாம் இந்த தவறு நிகழ்ந்தால்.... அதிகாரிகள் சொல்லும் ரகசியம்..!
நீதிபதி இருக்கை அருகே எதிரியை வாளால் வெட்டிய ரவுடி.... துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..!
லாங் டிரைவ்வுக்கு ஒன்னு லைப் டிராவலுக்கு ஒன்னு டாக்டர் இப்படி செய்யலாமா ? புது மாப்பிள்ளையை போலீஸ் தேடுகிறது..!

Advertisement
Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

அலுமினிய பாத்திரத்திற்குள் வசமாக சிக்கிய குழந்தை..! இரண்டரை வயது குழந்தையின் ஒரு மணி நேர போராட்டம்..!!

Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

விபத்துக்குப் பின் நேற்றிரவு முதல் சரக்கு ரயில் இயக்கம்.. இன்று முதல் பயணிகள் ரயில் சேவைக்கு திட்டம்.!

Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

275 பேரை பலி கொண்ட கோர விபத்துக்கான காரணம் கண்டுபிடிப்பு..!

Posted Jun 05, 2023 in சினிமா,வீடியோ,Big Stories,

தேகம் மறைந்தாலும் இசையாய் வாழும் எஸ்.பி.பி... இசையுலகின் முடிசூடா மன்னன்..!

Posted Jun 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

எஸ்.எஸ்.ஐ வீட்டில் கைவரிசை... சினிமா பாணியில் விரட்டிச்சென்று கைது செய்த போலீசார்


Advertisement