செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

70 வயது பெண்ணை நிர்வாணப்படுத்திய கொடூர கொள்ளையர்கள்..! இல்லத்தரசிகளே உஷார்

Mar 22, 2023 07:45:44 AM

சென்னையில், ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியை நிர்வாணப்படுத்தி நகைப்பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வருபவர் 70 வயது மூதாட்டி. இவரது கணவர் காவல் ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றார். அவரது மறைவுக்கு பின்னர், தனது மகனுடன் வசித்து வந்தார்

திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு வீட்டில் மூதாட்டி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீடு வாடகைக்கு இருக்கிறதா? என கேட்டு 2 நபர்கள் கதவை தட்டி உள்ளனர். கதவை மூதாட்டி திறந்தவுடன் கதவை மிக வேகமாக எட்டி உதைத்து வீட்டுக்குள் நுழைந்து அவரை அடித்து கீழே தள்ளி உள்ளனர். பின்னர் அவரது கையையும் வாயையும் துணியால் கட்டிப் போட்டு உள்ளனர்.

முன்னதாக அந்த பெண்மணி கொள்ளையர்களை தடுக்க முயன்ற போது கத்தியால் அவரது கை விரல்களை வெட்டி உள்ளனர். இதற்கிடையே அந்த பெண்ணை மிரட்டி கொண்டிருந்தபோது, வெளியே சமையல் கேஸ் சிலிண்டர் போடுவதற்காக டெலிவரி பாய் வந்து கதவைத் தட்டி இருக்கிறார். கொள்ளையர்கள் கத்தி முனையில் மிரட்டி மூதாட்டியை வீட்டின் கதவை திறக்க விடாமல் செய்துள்ளனர்.

உன்னுடைய மகன் எங்கே இருக்கிறான் அவனை தேடி தான் வந்திருக்கிறோம் என மிரட்டிய கொள்ளையர்களிடம், தேவையானதை எடுத்துச் செல்லுங்கள் என கூறியிருக்கிறார். இரண்டு கொள்ளையர்களும் சேர்ந்து பீரோவை உடைத்து அதில் இருந்த சுமார் 35 சவரன் தங்க நகைகள், 60 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

போலீஸிடம் சென்றால் உன்னை குத்தி கொலை செய்து விடுவேன் எனக் கூறி 70 வயது பெண் என்றும் பாராமல், ஆடைகளை எல்லாம் களையச் செய்து நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டு வெளியில் சொன்னால் இந்த புகைப்படத்தை இணையத்தில் போட்டு விடுவோம் என்று மிரட்டிச்சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற அரும்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அருகிலுள்ள சிசிடிவி காமிரா காட்சிகளையும் வைத்தும் விசாரித்து வருகின்றனர்.

மூதாட்டியின் மகன் டிரேடிங் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்காக பலரிடம் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பி செலுத்தாததால் பலர் அவ்வப்போது வந்து மிரட்டி சென்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் அறிமுகம் இல்லா நபர்கள் வந்தால் கதவை திறக்க வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.


Advertisement
ஆடு மேய்க்க வைத்து அடிக்கிறாங்க... உடல் எல்லாம் ரணம்... மனம் எல்லாம் வலி... சவுதி அரேபியாவிலிருந்து கண்ணீர் குரல்
இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்.. விபத்தை ஏற்படுத்தி கொன்ற காதலன் கைது..!
பொண்ணு 5 ஆம் வகுப்பு..! மாப்பிள்ளை பொறியாளர்..! ஜோடியின் தூள் பறந்த ஆட்டம்..!
தலைமுறை கடந்து தாலாட்டும் இசை இளையராஜா என்னும் பேராளுமை....!
500 ரூபாய் கொடுத்தா ஆல் பாஸ் மார்க் ஷீட் இல்லன்னா ஆல் அவுட்.... தலைமை ஆசிரியரா.? இல்லை தரகரா.?
தப்பி ஓடிய கைதி..! தட்டித் தூக்கிய குட்டி யானை!! நட்ட நடு சாலையில் துப்பாக்கியுடன் ஒரு சேஸ்..!!
கூரையை பிரித்து உயிரை பணயம் வைத்து கடைக்குள் குதித்தவருக்கு காத்திருந்த ஷாக்...!!!
8 மாத காதல் 2 மாத இல்லறத்துடன் முடிவுக்கு வந்தது ஏன்.? சிப்பிக்குள் அடங்காத முத்துக்கள்...!
அடையாளத்தை மாற்றி அடுத்தவர் வாகனத்தை 4 ஆண்டுகள் ஓட்டிய போலீஸ்.... இதெல்லாம் நியாயமா ஆபிஸர்ஸ்....?
குழந்தையின் சடலத்துடன் 10 கி.மீ தூரம் நடை பயணம்.. மலைக்கிராமங்களின் கண்ணீர் பக்கங்கள்..!

Advertisement
Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

ஆடு மேய்க்க வைத்து அடிக்கிறாங்க... உடல் எல்லாம் ரணம்... மனம் எல்லாம் வலி... சவுதி அரேபியாவிலிருந்து கண்ணீர் குரல்

Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்.. விபத்தை ஏற்படுத்தி கொன்ற காதலன் கைது..!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பொண்ணு 5 ஆம் வகுப்பு..! மாப்பிள்ளை பொறியாளர்..! ஜோடியின் தூள் பறந்த ஆட்டம்..!

Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

தலைமுறை கடந்து தாலாட்டும் இசை இளையராஜா என்னும் பேராளுமை....!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

500 ரூபாய் கொடுத்தா ஆல் பாஸ் மார்க் ஷீட் இல்லன்னா ஆல் அவுட்.... தலைமை ஆசிரியரா.? இல்லை தரகரா.?


Advertisement