செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

70 வயது பெண்ணை நிர்வாணப்படுத்திய கொடூர கொள்ளையர்கள்..! இல்லத்தரசிகளே உஷார்

Mar 22, 2023 07:45:44 AM

சென்னையில், ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியை நிர்வாணப்படுத்தி நகைப்பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வருபவர் 70 வயது மூதாட்டி. இவரது கணவர் காவல் ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றார். அவரது மறைவுக்கு பின்னர், தனது மகனுடன் வசித்து வந்தார்

திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு வீட்டில் மூதாட்டி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீடு வாடகைக்கு இருக்கிறதா? என கேட்டு 2 நபர்கள் கதவை தட்டி உள்ளனர். கதவை மூதாட்டி திறந்தவுடன் கதவை மிக வேகமாக எட்டி உதைத்து வீட்டுக்குள் நுழைந்து அவரை அடித்து கீழே தள்ளி உள்ளனர். பின்னர் அவரது கையையும் வாயையும் துணியால் கட்டிப் போட்டு உள்ளனர்.

முன்னதாக அந்த பெண்மணி கொள்ளையர்களை தடுக்க முயன்ற போது கத்தியால் அவரது கை விரல்களை வெட்டி உள்ளனர். இதற்கிடையே அந்த பெண்ணை மிரட்டி கொண்டிருந்தபோது, வெளியே சமையல் கேஸ் சிலிண்டர் போடுவதற்காக டெலிவரி பாய் வந்து கதவைத் தட்டி இருக்கிறார். கொள்ளையர்கள் கத்தி முனையில் மிரட்டி மூதாட்டியை வீட்டின் கதவை திறக்க விடாமல் செய்துள்ளனர்.

உன்னுடைய மகன் எங்கே இருக்கிறான் அவனை தேடி தான் வந்திருக்கிறோம் என மிரட்டிய கொள்ளையர்களிடம், தேவையானதை எடுத்துச் செல்லுங்கள் என கூறியிருக்கிறார். இரண்டு கொள்ளையர்களும் சேர்ந்து பீரோவை உடைத்து அதில் இருந்த சுமார் 35 சவரன் தங்க நகைகள், 60 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

போலீஸிடம் சென்றால் உன்னை குத்தி கொலை செய்து விடுவேன் எனக் கூறி 70 வயது பெண் என்றும் பாராமல், ஆடைகளை எல்லாம் களையச் செய்து நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டு வெளியில் சொன்னால் இந்த புகைப்படத்தை இணையத்தில் போட்டு விடுவோம் என்று மிரட்டிச்சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற அரும்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அருகிலுள்ள சிசிடிவி காமிரா காட்சிகளையும் வைத்தும் விசாரித்து வருகின்றனர்.

மூதாட்டியின் மகன் டிரேடிங் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்காக பலரிடம் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பி செலுத்தாததால் பலர் அவ்வப்போது வந்து மிரட்டி சென்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் அறிமுகம் இல்லா நபர்கள் வந்தால் கதவை திறக்க வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.


Advertisement
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் ரூ.203 உயர்வு...!
"வெளிநாடுகளில் இருந்து கப்பலில் வரும் பொருட்களை வாங்கி அதிக லாபத்துக்கு விற்கலாம்" என பலரிடம் ஆசைகாட்டி மோசடி செய்த நபர் கைது
மழைக்கு ஒதுங்கினோம்.. அப்படியே சரிஞ்சிருச்சு.. உயிர்ப் பலி வாங்கிய பங்க்..! பெட்ரோல் நிலைய கூரை சரிந்த சோகம்
சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
சர்ன்னு கார் ஓட்டிய சூப்பர் சரவணா ஸ்டோர் ஓனர் மகனின் வேகத்தால் விபத்து..!
மதுரவாயிலில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
சாலையோரம் சென்றவரை அடிச்சி தூக்கிய தொழில் அதிபருக்கு அரைமணி நேரத்தில் ஜாமீன்..! அடக்கம் செய்ய கூட காசில்லை என கண்ணீர்
கீழ்பாக்கத்தில் தாறுமாறாக காரை ஓட்டி மோதியதில் ஒருவர் பலி, மூன்று பேர் காயம். 4 வாகனங்கள் சேதம்
வேளாண்மை, மற்றும் இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தையுமான பிரபல விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன் காலமானார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Advertisement
Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,Big Stories,

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,Big Stories,

தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

Posted Oct 01, 2023 in சினிமா,Big Stories,

மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,Big Stories,

உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து

Posted Sep 30, 2023 in தமிழ்நாடு,Big Stories,

தங்கச்சி கொள்ளைக்காரி.. அக்கா பதுக்கல் ராணி.. அசத்தலாக தூக்கிய போலீஸ்..! சிசிடிவி மட்டும் இருந்தா சக்சஸ் தான்


Advertisement