செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

லவ்தீக வாழ்க்கையால் ஜெயிலில் கம்பி எண்ணும் பாவமன்னிப்பு பாதிரியார்..! ல்தகா சைஆவால் சீரழிந்ததாக தகவல்

Mar 21, 2023 07:58:51 AM

கன்னியாகுமரி அருகே தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்கு வந்த பெண்களை காதல் வலையில் வீழ்த்தி வீடியோகாலில் வில்லங்கம் செய்த பாவமன்னிப்பு பாதிரியார் பெனடிக் ஆன்ரோ போலீசாரால் கைது செய்யப்பட்டார். லவ்தீக வாழ்க்கையில் விழுந்ததால், தலைமறைவாகி ஊர் ஊராக ஓடிய பாதிரியார் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகரை சேர்ந்தவர் 30 வயதான பெனடிக்ட் ஆன்றோ. குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையின் பாதிரியாரான இவர் பிலாங்காலை தேவாலயத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் மீது பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அதில் பாதிரியார் தன்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததாகவும், உடலில் மோசமாக தொட்டதாகவும், வாட்ஸ்அப் மூலம் ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்ததாகவும் கூறி இருந்தார்.

இதற்கிடையே பாதிரியார் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலானது. பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

பாதிரியார் பயன்படுத்திய செல்போன் நம்பர் மூலம் நாகர்கோவில் வழியாக பாதிரியார் தப்பிச்செல்வது தெரியவந்தது. அதன் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார், நாகர்கோவில் பால்பண்ணை பகுதியில் தடுத்து நிறுத்தி பாதிரியார் பெனடிக் ஆண்றோ வை கைது செய்தனர்.

தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்காக வந்த பெண் ஒருவருடன் ஏற்பட்ட நட்பு காதலனதாகவும், லவ்தீக வாழ்க்கையில் விழுந்ததால், பாதிரியர் பணியை கைவிட முடிவு செய்ததாகவும், அந்தப்பெண் வேறு ஒரு இளைஞரை திருமணம் செய்து சென்று விட்டதால் அவர் நினைவாக அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோ கால் ரெக்கார்டுகளையும் பாதிரியார் அண்டோ தனது லேப்டாப்பில் சேமித்து வைத்துள்ளார்.

அண்மையில் கல்லூரி மாணவி ஒருவருடன் ஏற்பட்ட காதல் பிரச்சனையில் பாதிரியாரின் லேப்டாப்பை சிலர் பறித்துச் சென்றுள்ளனர். அதன் பின்னர் தான் பாதிரியாரின் புகைப்படங்கள் மூலம் ‘ல்தகா சைஆ’ சேட்டைகள் சமூக வலைதளங்களில் அம்பலமானதாக போலீசார் தெரிவித்தனர்.

கண்ணியத்தை மறந்து காதலில் விழுந்ததால் பாதிரியார் ஜெயிலில் கண்ணீரோடு கம்பி எண்ணி வருகின்றார்.


Advertisement
ஓசி-யில் சாம்பார், குடிநீர் பாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்ட ஆக்டிங் டிரைவர்..!
விபத்துக்குப் பின் நேற்றிரவு முதல் சரக்கு ரயில் இயக்கம்.. இன்று முதல் பயணிகள் ரயில் சேவைக்கு திட்டம்.!
275 பேரை பலி கொண்ட கோர விபத்துக்கான காரணம் கண்டுபிடிப்பு..!
தேகம் மறைந்தாலும் இசையாய் வாழும் எஸ்.பி.பி... இசையுலகின் முடிசூடா மன்னன்..!
எஸ்.எஸ்.ஐ வீட்டில் கைவரிசை... சினிமா பாணியில் விரட்டிச்சென்று கைது செய்த போலீசார்
அப்படியே வாழ்த்திட்டாலும்... முதல்ல ஒழுங்கா படிப்போம், அப்புறமா பேனர் அடிப்போம்... பந்திக்கு.. பந்து..! கடலைக்கு.. கல்லை..!
இந்த கோர விபத்துக்கு இவர் தான் காரணம்... வெளியானது அதிர்ச்சி தகவல்.... ரெயில்வே சர்க்கியூட் ஆதாரம்..!
‘கவச்’ வந்தாலும் காப்பாற்ற இயலாதாம் இந்த தவறு நிகழ்ந்தால்.... அதிகாரிகள் சொல்லும் ரகசியம்..!
நீதிபதி இருக்கை அருகே எதிரியை வாளால் வெட்டிய ரவுடி.... துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..!
லாங் டிரைவ்வுக்கு ஒன்னு லைப் டிராவலுக்கு ஒன்னு டாக்டர் இப்படி செய்யலாமா ? புது மாப்பிள்ளையை போலீஸ் தேடுகிறது..!

Advertisement
Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

விபத்துக்குப் பின் நேற்றிரவு முதல் சரக்கு ரயில் இயக்கம்.. இன்று முதல் பயணிகள் ரயில் சேவைக்கு திட்டம்.!

Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

275 பேரை பலி கொண்ட கோர விபத்துக்கான காரணம் கண்டுபிடிப்பு..!

Posted Jun 05, 2023 in சினிமா,வீடியோ,Big Stories,

தேகம் மறைந்தாலும் இசையாய் வாழும் எஸ்.பி.பி... இசையுலகின் முடிசூடா மன்னன்..!

Posted Jun 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

எஸ்.எஸ்.ஐ வீட்டில் கைவரிசை... சினிமா பாணியில் விரட்டிச்சென்று கைது செய்த போலீசார்

Posted Jun 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அப்படியே வாழ்த்திட்டாலும்... முதல்ல ஒழுங்கா படிப்போம், அப்புறமா பேனர் அடிப்போம்... பந்திக்கு.. பந்து..! கடலைக்கு.. கல்லை..!


Advertisement