செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கடந்த 40 நாட்களாக 250 நெல் மூட்டைகளை தடுத்து வைத்துள்ள ரவுடிகள்... விவசாயி பரபரப்பு புகாரால் வாக்குவாதம்.!

Mar 16, 2023 08:34:16 PM

செங்கல்பட்டு அடுத்த படாளம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பணம் கேட்டு மிரட்டும் ரவுடிகள், தனக்கு சொந்தமான 250 மூட்டை நெல்லை கொள்முதல் செய்ய விடாமல் தடுத்து வைத்திருப்பதாக விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டத்தில் புகார் தெரிவித்தார். எப்படி புகார் அளிக்கலாம் என்று அதிகாரிகள் முன்னிலையில் நெல் கொள்முதல் நிலைய புரோக்கர்கள் விவசாயிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..  

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் மேன்வல்ராஜ், வேளாண்மை இணை இயக்குநர் அசோக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

அப்போது பேசிய பழையனூரை சேர்ந்த விவசாயி மணி என்பவர், தனது நிலத்தில் விளைந்த 250 நெல் மூட்டைகளை விற்பனைக்காக படாளத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் வைத்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 40நாட்களுக்கு மேல் ஆகியும் இன்றுவரை தனது நெல்மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் தடுத்து வைத்திருப்பதாகவும் , கையூட்டு பணம் கொடுப்பவர்களின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இந்த கொள்முதல் நிலையம் அரசியல் ரவுடிகளின் கீழ் இயங்கி வருகிறது என்ற மணி, தட்டிக்கேட்ட தன்னை ரவுடிகள் சரமாரியாக தாக்கியதாகவும் புகார் தெரிவித்தார்

அப்போது பின்னால் இருந்து எழுந்த இருவர், அவர்கள் ஒன்றும் ரவுடிகள் அல்ல, உள்ளாட்சி நிர்வாகிகள் என்று கூறி விவசாயியை மிரட்டியதால், மற்ற விவசாயிகள் அவர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

அந்த இருவரும் படாளம் நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகளுக்கு பணம் வாங்கிக் கொடுக்கும் புரோக்கர்கள் என்று கூறி விவசாய சங்க பிரதி நிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்

ஒருவருக்கொருவர் தள்ளிக்கொண்டதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ் நிலை ஏற்பட்டது.

இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள், சம்மந்தப்பட்ட நெல்கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் விவசாயிகள் அமைதியடைந்தனர்.

மாவட்ட கூட்ட அரங்கிலேயே புகார் தெரிவித்த விவசாயி மிரட்டப்பட்ட சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement
அலுமினிய பாத்திரத்திற்குள் வசமாக சிக்கிய குழந்தை..! இரண்டரை வயது குழந்தையின் ஒரு மணி நேர போராட்டம்..!!
விபத்துக்குப் பின் நேற்றிரவு முதல் சரக்கு ரயில் இயக்கம்.. இன்று முதல் பயணிகள் ரயில் சேவைக்கு திட்டம்.!
275 பேரை பலி கொண்ட கோர விபத்துக்கான காரணம் கண்டுபிடிப்பு..!
தேகம் மறைந்தாலும் இசையாய் வாழும் எஸ்.பி.பி... இசையுலகின் முடிசூடா மன்னன்..!
எஸ்.எஸ்.ஐ வீட்டில் கைவரிசை... சினிமா பாணியில் விரட்டிச்சென்று கைது செய்த போலீசார்
அப்படியே வாழ்த்திட்டாலும்... முதல்ல ஒழுங்கா படிப்போம், அப்புறமா பேனர் அடிப்போம்... பந்திக்கு.. பந்து..! கடலைக்கு.. கல்லை..!
இந்த கோர விபத்துக்கு இவர் தான் காரணம்... வெளியானது அதிர்ச்சி தகவல்.... ரெயில்வே சர்க்கியூட் ஆதாரம்..!
‘கவச்’ வந்தாலும் காப்பாற்ற இயலாதாம் இந்த தவறு நிகழ்ந்தால்.... அதிகாரிகள் சொல்லும் ரகசியம்..!
நீதிபதி இருக்கை அருகே எதிரியை வாளால் வெட்டிய ரவுடி.... துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..!
லாங் டிரைவ்வுக்கு ஒன்னு லைப் டிராவலுக்கு ஒன்னு டாக்டர் இப்படி செய்யலாமா ? புது மாப்பிள்ளையை போலீஸ் தேடுகிறது..!

Advertisement
Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

அலுமினிய பாத்திரத்திற்குள் வசமாக சிக்கிய குழந்தை..! இரண்டரை வயது குழந்தையின் ஒரு மணி நேர போராட்டம்..!!

Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

விபத்துக்குப் பின் நேற்றிரவு முதல் சரக்கு ரயில் இயக்கம்.. இன்று முதல் பயணிகள் ரயில் சேவைக்கு திட்டம்.!

Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

275 பேரை பலி கொண்ட கோர விபத்துக்கான காரணம் கண்டுபிடிப்பு..!

Posted Jun 05, 2023 in சினிமா,வீடியோ,Big Stories,

தேகம் மறைந்தாலும் இசையாய் வாழும் எஸ்.பி.பி... இசையுலகின் முடிசூடா மன்னன்..!

Posted Jun 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

எஸ்.எஸ்.ஐ வீட்டில் கைவரிசை... சினிமா பாணியில் விரட்டிச்சென்று கைது செய்த போலீசார்


Advertisement