செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காதில் நிற்காமல் வரும் ரத்தம்.. அதிர்ச்சியில் உறைந்த மாணவி.. பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.. பெற்றோர் வேதனையில் கண்ணீர்..!

Feb 04, 2023 07:11:40 AM

பிறவியிலேயே ஒரு காது இல்லாமல் பிறந்த பெண்ணுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் காது இணைக்கப்பட்ட நிலையில், காதில் இருந்து ரத்தம் கசிவது தொடர்வதால் அவர் பள்ளிக்கு செல்ல இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரியால் 17 வயது மாணவிக்கு நிகழ்ந்த பரிதாப நிலை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்தவர்கள் சக்திவேல் - ஈஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு பிறவியிலேருந்தே வலது பக்கம் உள்ள காது இல்லாமல் இருந்தது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில், மாணவியின் உடலில் இருந்து சதையை எடுத்து வலதுபுற காதை சரி செய்ய பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக கூறப்படுகிறது. அந்த 17 வயது சிறுமி தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களில் அவ்வப்போது காதின் மேற்புறத்தில் இருந்து ரத்தம் கசிய தொடங்கியுள்ளது. ஒரு கட்டத்தில் காதில் இருந்து ரத்தப்போக்கு அதிகரித்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, மருத்துவர்கள் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும் என கூறியுள்ளனர். அதனை நம்பி மாணவிக்கு மீண்டும் மற்றொரு அறுவை சிகிச்சை செய்த பின் வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் காதில் ரத்தம் வருவது சரியாகிவிட்டது என சந்தோஷத்தில் பள்ளிக்கு சென்ற மாணவி மீண்டும் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் விருகம்பாக்கம் அரசு பள்ளியின் வகுப்பு ஆசிரியர்கள் பெற்றோரை வரவழைத்து நீங்கள் உங்கள் மகளை நேரடியாக தேர்வு எழுத அனுப்பி வைத்தால் மட்டும் போதும் எனவும், இதனால் மற்ற மாணவ மாணவிகளுக்கு பாதிப்பு அடைவதாக மாணவியை பள்ளிக்கு வர வேண்டாம் என திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி நேற்று வீட்டில் தனியாக இருந்த போது தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரும், சுகாதார அமைச்சரும் , தங்கள் மகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வருகின்ற பொதுத்தேர்வுக்கு தயாராக முறையான பள்ளி படிப்பு தொடங்க உதவி செய்ய வேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்த இஎஸ்ஐ மருத்துவ குழுவையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக இ.எஸ்.ஐ மருத்துவ மனையின் கண்காணிப்பாளர் மகேஷ் கூறும் போது, அந்த சிறுமிக்கு காது வரவைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம், காதில் அறுவை சிகிச்சை முடிந்து புதிதாக ரத்த நாளங்கள் இணைக்கப்பட்டதால் முதலில் ரத்த கசிவு ஏற்பட்டது . அதனை ஒரு அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்தோம் தற்போது மீண்டும் ரத்தம் வருவதாக கூறுகிறார்கள். எங்கள் சொந்த பணத்தை செலவு செய்து அந்த மாணவிக்கு தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்து எதனால் ரத்தம் வருகின்றது என்பதை கண்டுபிடித்து சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். அண்மையில் மகேஷ் நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டார் என்பது குறிப்பிடதக்கது.

பள்ளி ஆசிரியை கூறும் போது, இந்த ஆண்டுக்கான பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதாகவும் திருப்புதல் பயிற்சி மட்டுமே நடப்பதால் சக மாணவர்கள் ரத்ததை கண்டு பயந்ததால் அந்த மாணவியை வீட்டில் இருந்து படிக்க கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.


Advertisement
70 வயது மூதாட்டியை கத்தியால் தாக்கி கட்டி போட்டு 20 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை
12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த அண்ணா நகர் டவர் பூங்கா..!
முதல் அமைச்சர் பாதுகாப்பு பணிக்காக, சஃபாரி போட்ட கமாண்டோ பெண் சிங்கங்கள்..!
குடும்பத்தலைவிகளுக்கான ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதி என்ன? - இபிஎஸ்
தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - நிதித்துறை செயலாளர் முருகானந்தம்
30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட பெண் பரிதாப பலி..! அதிவேக காரால் சகோதரரும் உயிரிழந்தார்
சென்னையில் 5 வாரங்களாக நடத்தப்பட்டு வந்த 'ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ்' நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு..!
நடிகையின் கணவர் மகள் கொடூர கொலை மதுவால் நிகழ்ந்த பயங்கரம்... சினிமா டப்பிங் கலைஞர் வெறிச்செயல்..!
பேருந்துக்கு அடியில் படுத்து, சாலையில் ரகளை செய்த போதை பெண் புள்ளீங்கோஸ்..! ஜாம்பீஸ் போல அட்டகாசம்
பெப்பர் ஸ்பிரே அடித்து சக ஊழியரிடம் ரூ.50 லட்சம் கொள்ளையடித்த 3 பேர் கைது..!

Advertisement
Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,சற்றுமுன்,வீடியோ,Big Stories,

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்..!

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லவ்தீக வாழ்க்கையால் ஜெயிலில் கம்பி எண்ணும் பாவமன்னிப்பு பாதிரியார்..! ல்தகா சைஆவால் சீரழிந்ததாக தகவல்

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தந்தை சடலத்தின் முன்பு காதலிக்கு தாலி கட்டி மணம் முடித்த இளைஞர்..! வானமே மழை தூவி வாழ்த்தியது

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,சினிமா,வீடியோ,Big Stories,

‘வணங்கான்’ ரிட்டர்ன்ஸ் பாலா ஷூட்டிங்கில் நடிகையின் கன்னம் பழுத்தது..! சம்பளம் கேட்டா அடிப்பீங்களா நியாயமாரே ?

Posted Mar 20, 2023 in சென்னை,Big Stories,

முதல் அமைச்சர் பாதுகாப்பு பணிக்காக, சஃபாரி போட்ட கமாண்டோ பெண் சிங்கங்கள்..!


Advertisement