செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அரசு பேருந்தை உடைக்க கத்தி எடுத்த மைனருக்கு கையில் மாவுக் கட்டு..! தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தாராம்

Dec 08, 2022 09:33:26 AM

காஞ்சிபுரத்தில் அரசு பேருந்தின் கண்ணாடியை கத்தியால் உடைத்து பவுசு காட்டிய ரவுடிக்கு போலீசார் கையில் மாவுக் கட்டு போட்டு விட்டனர். சவால் விட்டவர் தண்டவாளத்தில் சறுக்கி விழுந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு

காஞ்சிபுரத்தில் இருந்து கண்ணன் தாங்கல் கிராமத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து பின்னால் இரு சக்கரவாகனத்தில் வந்த 3 பேர் ஹாரன் அடித்தபடியே சென்றுள்ளனர்.

குறுகிய சாலை என்பதால் பேருந்து ஓட்டுனர் வழிவிட இயலாமல் சென்றுள்ளார். பூக்கடை சத்திரம் பகுதியில் வைத்து அந்த பேருந்தை முந்திச்சென்ற 3 இளைஞர்களும், உள்ளூரில் தங்கள் செல்வாக்கு என்ன தெரியுமா ? எப்படி வழிவிடாமல் செல்வாய் ? எனக் கேட்டு ஓட்டுனரை அடிக்க பாய்ந்ததோடு பட்டாக்கத்தியால் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு , இப்ப எங்களுக்கு பின்னால் வா பார்ப்போம் என்று சவால் விட்டு சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். மைனர் போல கையில் கத்தியுடன் அட்டகாசத்தில் ஈடு பட்டது ரவுடி சரவணன் தலைமையிலான கும்பல் என்பதை கண்டுபிடித்தனர்.

அவர்களது செல்போன் மூலம் தண்டவாள பகுதியில் பதுங்கி இருந்த சரவணனை பிடிக்க போலீசார் சுற்றிவளைத்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஓடிய போது தண்டவாளத்தில் சறுக்கி விழுந்ததில் சரவணனின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மாவுக்கட்டு போட்டு விட்டனர். சரவணனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த சிவா மற்றும் குட்டி சரவணனும் கைது செய்யப்பட்டனர்.கத்தி எடுத்த கைக்கு மனித நேயத்துடன் மாவுக்கட்டு போட்டு விட்ட சம்பவத்தால் ரவுடிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.


Advertisement
சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!
என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...
சேட்டனின் சேட்டைகளை கண்டித்த காதலி கொலை வாட்ஸ் அப்பில் திகில் ஸ்டேட்டஸ் நர்ஸிங் மாணவிக்கு நிகழ்ந்த சோகம்
இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்
முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!
வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு
பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்
பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்
கொட்டித்தீர்த்த கனமழை வீடு தேடி வந்த வெள்ளம் நீர்த்தேக்கமான சாலைகள்..! மழை நீரை வடியவைக்க தீவிரம்
சீர் கெட்ட சாலையால் அனல் மின் நிலைய ஊழியர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி..! என்று தீரும் இந்த கொடுமை?

Advertisement
Posted Dec 02, 2023 in சென்னை,Big Stories,

சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!

Posted Dec 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...

Posted Dec 02, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

சேட்டனின் சேட்டைகளை கண்டித்த காதலி கொலை வாட்ஸ் அப்பில் திகில் ஸ்டேட்டஸ் நர்ஸிங் மாணவிக்கு நிகழ்ந்த சோகம்

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!


Advertisement