செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வரதட்சணைக் கொடுமை… தீக்காயம் அடைந்த மனைவி… உயிரிழப்பு சந்தேகப்பிரிவில் கணவர் கைது

Nov 28, 2022 10:03:54 AM

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் கணவரை கைது செய்துள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே வழுதாவூரைச் சேர்ந்த முத்துக்குமரன் மற்றும் சங்கீதா ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.இந்த நிலையில் சங்கீதாவிடம் அவரது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு சங்கீதா மறுப்பு தெரிவித்ததால் கணவர் முத்துக்குமரனும் அவரது அக்கா கலையரசியும் சேர்ந்து, கடந்த 5ஆம் தேதி சங்கீதா வீட்டில் இருந்த போது பின்பக்கமாக அவரது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி, கொளுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் தீக்காயம் அடைந்த சங்கீதா, உடனடியாக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சங்கீதாவிடம், நடந்ததை வெளியில் சொல்ல நினைத்தால் உன்னை கொளுத்தியதுபோல, உன் பிள்ளைகளையும் கொளுத்தி விடுவேன் என, முத்துக்குமரன் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் பயந்துபோன சங்கீதா, நடந்த உண்மையை யாரிடமும் வெளியில் சொல்லாமல் மறைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சங்கீதாவிடம், வாக்குமூலம் பெற்ற நீதிபதியிடம், தன் மீது மண்ணெண்ணையை யாரும் ஊற்றி கொளுத்தவில்லை, தானே கொளுத்திக் கொண்டதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், சங்கீதாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் அவரது காலில் விழுந்து மன்றாடி, கெஞ்சி கூத்தாடி கேட்டபோது, நடந்த உண்மையை அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கண்டமங்கலம் போலீசார் முத்துக்குமரனை கைது செய்து, அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Advertisement
ஊ...ஊ... காந்தாரா பாணியில்.. தீவைத்துக் கொண்ட விபரீதம் 6 சிறுவர்கள் தீயில் கருகினர்..! பரபரப்பான நேரடி காட்சிகள்
சாயத்துக்குப் பின்னால் அபாயம்! நோயால் இறந்த பிராய்லரை நாட்டுக்கோழி என விற்பனை! தரமான இறைச்சியா என எப்படி பார்த்து வாங்குவது?
பெட்டி பெட்டியாக என்ன இருக்கு?... சீமான் போட்டு உடைத்த ரகசியம்
மைண்ட் வாய்ஸ்ஸுன்னு நெனச்சி சத்தமா பேசிய உடன்பிறப்பு..! 40 வருஷமா கட்சியில் இருக்கோம்...
கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி
சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!
தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!
மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்
உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து
தங்கச்சி கொள்ளைக்காரி.. அக்கா பதுக்கல் ராணி.. அசத்தலாக தூக்கிய போலீஸ்..! சிசிடிவி மட்டும் இருந்தா சக்சஸ் தான்

Advertisement
Posted Oct 02, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

ஊ...ஊ... காந்தாரா பாணியில்.. தீவைத்துக் கொண்ட விபரீதம் 6 சிறுவர்கள் தீயில் கருகினர்..! பரபரப்பான நேரடி காட்சிகள்

Posted Oct 01, 2023 in வீடியோ,Big Stories,

சாயத்துக்குப் பின்னால் அபாயம்! நோயால் இறந்த பிராய்லரை நாட்டுக்கோழி என விற்பனை! தரமான இறைச்சியா என எப்படி பார்த்து வாங்குவது?

Posted Oct 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பெட்டி பெட்டியாக என்ன இருக்கு?... சீமான் போட்டு உடைத்த ரகசியம்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மைண்ட் வாய்ஸ்ஸுன்னு நெனச்சி சத்தமா பேசிய உடன்பிறப்பு..! 40 வருஷமா கட்சியில் இருக்கோம்...

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி


Advertisement