தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், நாளை 23 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.
நாளை மறுநாள் 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.