செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இளைஞர் உயிரைப்பறித்த சிக்கன் பிரியாணி... கர்ப்பிணிக்கு விருந்து நிகழ்வில் சோகம்

Oct 07, 2022 09:57:53 AM

திருவாரூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஐந்தாம் மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்தார். 

திருவாரூர் மாவட்டம் மெயின் ரோடு திருவாசல்பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி மாரியம்மாள் தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் மாரியம்மாளுக்கு மருந்து கொடுக்கும் நிகழ்வு விக்னேஷ் இல்லத்தில் நடைபெற்றது. 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள், நண்பர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது தக்காளிசாதம், தயிர் சாதம், புளி சாதம், பிரிஞ்சி சாதம், கருவேப்பிலை சாதம் மற்றும் லெமன் சாதம் ஆகியவற்றுடன் சிக்கன் பிரியாணியும் பரிமாறப்பட்டுள்ளது.

உணவு அருந்திய கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 8 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருதுதவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 5பேர் திருவாரூர் அரசு மருத்துவமனையிலும், கர்ப்பிணி பெண்ணின் தந்தை அடியக்கமங்கலம் அரசு மருத்துவமனையிலும் 4 வயது குழந்தை ஒன்று திருவாரூர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கர்ப்பிணி பெண் மாரியம்மாள் திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலங்குடியை சேர்ந்த செல்வ முருகன் என்பவர் உடல்நிலை மோசமாக இருந்த தாக கூறப்படுகிறது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். திருவாரூர் தாலுகா காவல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!
என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...
சேட்டனின் சேட்டைகளை கண்டித்த காதலி கொலை வாட்ஸ் அப்பில் திகில் ஸ்டேட்டஸ் நர்ஸிங் மாணவிக்கு நிகழ்ந்த சோகம்
இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்
முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!
வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு
பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்
பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்
கொட்டித்தீர்த்த கனமழை வீடு தேடி வந்த வெள்ளம் நீர்த்தேக்கமான சாலைகள்..! மழை நீரை வடியவைக்க தீவிரம்
சீர் கெட்ட சாலையால் அனல் மின் நிலைய ஊழியர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி..! என்று தீரும் இந்த கொடுமை?

Advertisement
Posted Dec 02, 2023 in சென்னை,Big Stories,

சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!

Posted Dec 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...

Posted Dec 02, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

சேட்டனின் சேட்டைகளை கண்டித்த காதலி கொலை வாட்ஸ் அப்பில் திகில் ஸ்டேட்டஸ் நர்ஸிங் மாணவிக்கு நிகழ்ந்த சோகம்

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!


Advertisement