செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

3 சிறுவர்களின் உயிரை பறித்த கெட்டுப்போன ரசம் சாதம்

Oct 06, 2022 10:07:07 PM

திருப்பூரில் விவேகானந்தா சேவாலயத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்து விட்ட நிலையில், 11 சிறுவர்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரிக்க 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் அவிநாசி சாலை பூண்டி ரிங்ரோட்டில், விவேகானந்தா சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. ஆதரவற்ற 20 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கியுள்ள இந்த காப்பகத்தை செந்தில்நாதன் என்பவர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

 நேற்றிரவு காப்பகத்தில் ரசம் சாதம் சாப்பிட்ட சிறுவர்களுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் 14 சிறுவர்கள் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 2 சிறுவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட, ஒரு சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தான். மேலும் 11 சிறுவர்களுக்கு நீர்சத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்தார்.

 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சிறுவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவை பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். உயிரிழந்த மாணவர்களின் உடல்கூறு ஆய்வுக்கு பிறகு தான் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்று மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

 இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த திருப்பூர் வருவாய் கோட்டாச்சியர், மாவட்ட குழந்தைகள் நல குழும அதிகாரி தலைமையில் 2 குழுக்களும், காவல் துறை சார்பில் மாநகர காவல் துணை ஆணையர் அபிநவ் குமார் தலைமையில் மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட விவேகானந்தா சேவாலயத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் 11 சிறுவர்களின் நிலைமை தற்போது சீராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 


Advertisement
கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி
சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!
தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!
மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்
உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து
தங்கச்சி கொள்ளைக்காரி.. அக்கா பதுக்கல் ராணி.. அசத்தலாக தூக்கிய போலீஸ்..! சிசிடிவி மட்டும் இருந்தா சக்சஸ் தான்
ஒரு கண்டன அறிக்கை போதும் கே.ஜி.எப் வெளியாகி இருக்குமா ? தம்பிகளுக்காக சீமான் ஆவேசம்..! அரசியல் கட்சிகளுக்கு அவமானம்
காவிரி விவகாரத்தில் ரஜினி கள்ளமவுனமா..? சிவராஜ் குமார் கண்டனம்..! ஆதங்கத்தில் ரஜினி ரசிகர்கள்
மழைக்கு ஒதுங்கினோம்.. அப்படியே சரிஞ்சிருச்சு.. உயிர்ப் பலி வாங்கிய பங்க்..! பெட்ரோல் நிலைய கூரை சரிந்த சோகம்
சர்ன்னு கார் ஓட்டிய சூப்பர் சரவணா ஸ்டோர் ஓனர் மகனின் வேகத்தால் விபத்து..!

Advertisement
Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,Big Stories,

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

Posted Oct 01, 2023 in சினிமா,Big Stories,

மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து


Advertisement