துர்கா பூஜையை ஒட்டி, ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், 7 அடி உயர துர்கை அம்மன் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.
சுமார் ஏழு டன் மணலை பயன்படுத்தி, தனது மணற்கலை நிறுவன மாணவர்களுடன் இணைந்து அம்மன் சிலையை வடிவமைத்த பட்நாயக், ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம், அன்னாசி போன்ற 12 விதமான பழங்களைக் கொண்டு சிலையை அலங்கரித்துள்ளார்.