செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழலின் பெயரால் திட்டங்கள் முடங்கக்கூடாது பிரதமர் மோடி அறிவுறுத்தல்

Sep 23, 2022 07:24:17 PM

எளிதாக தொழில் தொடங்கவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் கொண்டு வரப்படும் திட்டங்கள், சுற்றுச்சூழலின் பெயரால் தேவையில்லாமல் முடங்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில சுற்றுச்சூழல்துறை அமைச்சர்களுக்கும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

குஜராத்தின் ஏக்தா நகரில் அனைத்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

 இன்றும் நாளையும் நடைபெறும் இம்மாநாட்டில், மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு விஷயங்களில் ஒருங்கிணைந்து, காலநிலை மாற்றம், விலங்குகள், வனப்பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கின்றன.

மாநாட்டில் உரையாற்றிய அவர், நகர்ப்புற நக்சல்கள் இன்னும் செயல்பாட்டில் உள்ளதாகவும், குஜராத்தின் நர்மதா ஆற்றில் சர்தார் சரோவர் அணை கட்டும் பணியை அரசியல் ஆதரவுடன் நகர்ப்புற நக்சல்கள் மற்றும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் பல ஆண்டுகளாக முடக்கி விட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும், பழைய வாகனங்களை ஒழிக்கும் கொள்கையை அமல்படுத்துவது, உயிரி எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், சுற்றுச்சூழலை மேம்படுத்த மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி மற்றும் ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என கூறினார்.

நாட்டில் வனப்பரப்பும், ஈரநிலங்களும் வேகமாக விரிவடைந்து வருவதாகவும், வனங்கள் தீயினால் அழிவதை தடுக்கும் நோக்கில், ஒவ்வொரு மாநிலத்திலும் வனத் தீயை அணைக்கும் நடைமுறைகள் தொழில்நுட்பம் சார்ந்ததாகவும் வலுவானதாகவும் இருக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.

திட்டங்களுக்கு எவ்வளவு வேகமாக சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்படுமோ, அவ்வளவு வேகமாக வளர்ச்சியும் நடைபெறும் என்றும், 8 ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சூழல் அனுமதி வழங்க 600 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், இன்று 75 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படுவதாகவும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

 


Advertisement
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம்..!
வியாழனின் நிலவான யூரோப்பாவில் கடல் கண்டுபிடிப்பு... யூரோப்பா மேற்பரப்பில் எடுத்த படத்தை வெளியிட்ட நாசா
சூரியனில் ஏற்பட்ட வெடிப்பில் சிதறிய காந்த துகள்கள் பூமியைத் தாக்கும் - நிபுணர்கள் எச்சரிக்கை...!
பஞ்சாப்புக்கு ரூ.2,000 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.
பிரபஞ்சத்தில் காஸ்மிக் கதிர்களால் நடனமாடும் கருந்துளைகள்.!
நீர்மின் திட்டங்களால் பாதிக்கும் மேற்பட்ட ஜாகுவார்கள் அழிந்துள்ளதாக தகவல்
காவிரியில் 65 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து நீடிப்பு.. அருவிகளிலும் ஆற்றிலும் குளிக்கத் தடை..!
உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் 14 சதவீத பவளப்பாறைகள் அழிவு...!
தமிழகம் முழுவதும் 16,250 ஹெக்டேர் அளவிற்கு வனம் ஆக்கிரமிப்பில் உள்ளது - தமிழக அரசு
சுமார் 17 மாதங்கள் பயணம் செய்து வேறொரு வாழ்விடத்தை அடைந்த யானைக் கூட்டம்

Advertisement
Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

ஆசிரியரை விரட்டி விரட்டி வெளுத்த மாணவனின் தந்தை தாய், தாத்தா அதிரடி கைது..! சிறுவனை தாக்கியதால் திருப்பி அடித்தனர்..!

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

கல்லூரிக்கு சென்ற மாணவியை காதலித்து மணந்த இளைஞரை கழுத்தை அறுத்துக் கொன்ற மாமனார்..! ஆட்டை பலி கொடுப்பது போல வெறிச்செயல்

Posted Mar 21, 2023 in சென்னை,Big Stories,

70 வயது பெண்ணை நிர்வாணப்படுத்திய கொடூர கொள்ளையர்கள்..! இல்லத்தரசிகளே உஷார்

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,சற்றுமுன்,வீடியோ,Big Stories,

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்..!

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லவ்தீக வாழ்க்கையால் ஜெயிலில் கம்பி எண்ணும் பாவமன்னிப்பு பாதிரியார்..! ல்தகா சைஆவால் சீரழிந்ததாக தகவல்


Advertisement