செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

3.7 கிலோ நகைகளை காவல் ஆய்வாளரின் வீட்டில் பதுக்கியது ஏன்..? சகலையால் சங்கடத்தில் சிக்கினார்..!

Aug 19, 2022 12:35:10 PM

அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடித்த நகைகளில் 3கிலோ 700 கிராம் நகைகளை பதுக்கி வைத்ததாக அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ், தனிப்படை போலீசாரிடம் சிக்கி உள்ளார். சகலைப்பாடியின் தகாத சகவாசத்தால் போலீஸ் வேலைக்கு வேட்டு வைக்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவான பெட் வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அங்கு வேலைபார்த்த முருகன்அவனது பள்ளிக்கூட கூட்டாளிகள் பாலாஜி, சந்தோஷ், சூர்யா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

முதலில் வங்கியில் கொள்ளை போனது 20 கோடி ரூபாய் நகைகள் எனவும், பின்னர் கொள்ளையர்கள் பிடிபட்டதும் 32 கிலோ என்றும் காவல்துறையால் சொல்லப்பட்ட நிலையில் வங்கி நிர்வாகத்தரப்பில் மேலும் 3 கிலோ 700 கிராம் நகைகளை காணவில்லை என்று சொல்லப்பட்டதால் இந்த கொள்ளை வழக்கில் முதலில் சிக்கிய சந்தோஷ் என்பவரை காவலில் எடுத்து விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

வங்கியில் கொள்ளையடித்த நகைகளை அதே பையுடன் பறிமுதல் செய்ததாக காவல்துறையினர் அறிவித்த நிலையில் 3 கிலோவுக்கு அதிகமான நகைகள் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய கைது செய்யப்பட்ட கொள்ளையன் சந்தோஷ் தப்பிச்சென்ற நேரத்தில் செல்போனில் யார் யாருடன் பேசினான் என்பதை வைத்து போலீசார் சந்தோஷிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தனிப்படை போலீசாரிடம் தான் உண்மையை சொன்னா அவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தால், சொல்கிறேன் எனக்கூற போலீசாரும் நடவடிக்கை எடுக்க மாட்டோன் என்று கூறியதை அடுத்து சந்தோஷ் தனது மனைவியின் சகோதரியான இந்திராவிடம் பேசி அவரது கணவரும் சகலைப்பாடியுமான அச்சிருப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜின் வீட்டில் நகைகளை மறைத்து வைத்திருப்பதாக கூறினார்.

இதையடுத்து காவல் ஆய்வாளர் அமல்ராஜ், அவரது மனைவி இந்திரா ஆகியோரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த தனிப்படை போலீசார் அவர்களது வீட்டில் பது க்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ 700 கிராம் எடையுள்ள வங்கியில் கொள்ளை போன நகைகளை பறிமுதல் செய்தனர்.

காவல் ஆய்வாளரையும் அவரது மனைவி இந்திராவையும் விசாரித்த போலீசார், அமல்ராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் பரிந்துறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கைதாகி ஜெயிலுக்கு சென்று வந்த பின்னர் அந்த நகைகளை எல்லாம் பிரித்துக் கொண்டு சந்தோசமாக வாழலாம் என்று எண்ணி இருந்த கொள்ளையன் சந்தோஷின் கனவில், இடிவிழுந்துள்ளது குறிப்பிடதக்கது..!

அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடித்த நகைகளில் 3 கிலோ 700 கிராம் நகைகளை பதுக்கி வைத்த விவகாரத்தில்,  அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜை பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்தியபிரியா உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், அரும்பாக்கம் வங்கி கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷின், பல்லாவரத்தில் உள்ள பாட்டி வீட்டில் இருந்து இன்று காலை இரண்டரை கிலோ தங்கத்தை தனிப்படை போலீசார் மீட்டனர்.

 


Advertisement
பஸ் ஸ்டாப்ப வையி.. பணத்தை பேரம் பேசி அள்ளு விழிபிதுங்கும் அதிகாரிகள்..! யாருப்பா அந்த மேல்மட்டம் ?
3 நாட்களில் முடிந்த திருமண வாழ்க்கை மணப்பெண் செய்தது என்ன ? படுக்கை அறையில் மாப்பிள்ளை பகீர் முடிவு
காதலிக்கும் போது ஜாலி திருமணமுன்னா காலியா..? போலீசில் சிக்கி கட்டுனான் தாலி..! ஆதலால் காதலி.. காதலி.. காதலி..!
வாங்கியது ரூ 24 லட்சம்.. கட்டியது ரூ 18 லட்சம்... மீதமுள்ளது ரூ 32 லட்சமாம்..! கனரா வங்கி அதிகாரிகளின் இரவு வசூல்
கண்ணீருடன் முற்றுகையிட்ட பெண்கள் மனு வாங்க கூட நேரம் இல்லை... அமைச்சர் சக்கரபாணி பிஸி.. பிஸி ..!
ஆலைகளின் கழிவால் கிடைத்த புற்றுநோய்... சிகிச்சைக்கு கூட வழியில்லாமல் திணறும் மக்கள்...
தஞ்சை தமிழர்களை ஏமாற்றி அர்மீனியா நாட்டில் பிச்சை எடுக்க வைத்த கொடுமை..! நாடு திரும்ப இயலாமல் தவிப்பு
வீடு புகுந்து கணவனையும் மாமியாரையும் அடித்து வெளியே ஓடவிட்ட மருமகள்..!
மன்மத காக்கியால் உயிரை மாய்த்த பெண் காவலர்..!
80 வயது பாட்டி கொடுத்த டஃப் பைட் நடுங்கிய பெண் போலீஸ்..!

Advertisement
Posted Sep 24, 2023 in சென்னை,Big Stories,

பஸ் ஸ்டாப்ப வையி.. பணத்தை பேரம் பேசி அள்ளு விழிபிதுங்கும் அதிகாரிகள்..! யாருப்பா அந்த மேல்மட்டம் ?

Posted Sep 24, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

3 நாட்களில் முடிந்த திருமண வாழ்க்கை மணப்பெண் செய்தது என்ன ? படுக்கை அறையில் மாப்பிள்ளை பகீர் முடிவு

Posted Sep 24, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காதலிக்கும் போது ஜாலி திருமணமுன்னா காலியா..? போலீசில் சிக்கி கட்டுனான் தாலி..! ஆதலால் காதலி.. காதலி.. காதலி..!

Posted Sep 24, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வாங்கியது ரூ 24 லட்சம்.. கட்டியது ரூ 18 லட்சம்... மீதமுள்ளது ரூ 32 லட்சமாம்..! கனரா வங்கி அதிகாரிகளின் இரவு வசூல்

Posted Sep 24, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணீருடன் முற்றுகையிட்ட பெண்கள் மனு வாங்க கூட நேரம் இல்லை... அமைச்சர் சக்கரபாணி பிஸி.. பிஸி ..!


Advertisement