செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

15 நிமிடங்களில் 32 கிலோ நகைகளை திருடியது எப்படி? முக்கிய கொள்ளையன் பரபரப்பு தகவல்..!

Aug 16, 2022 09:41:19 PM

சென்னை ஃபெட் கோல்டு லோன்ஸ் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இன்று முழுவதும் மீட்கப்பட்ட நிலையில், கொள்ளைச் சம்பத்தை நிகழ்த்தியது தொடர்பாக முக்கிய கொள்ளையனான முருகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ஃபெட் கோல்டு லோன்ஸ் வங்கியில் இரு தினங்களுக்கு முன்பு கொள்ளை சம்பவம் நடந்தது. வங்கியில் பணிபுரிந்த முருகன் என்ற ஊழியரே நண்பர்களுடன் சேர்ந்து நகைகளை கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய கொள்ளையன் முருகன், அவரது கூட்டாளிகள் சூர்யா, சந்தோஷ், பாலாஜி, சக்திவேல் ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் நேற்று முதற்கட்டமாக 18 கிலோ தங்கம் மீட்கப்பட்ட நிலையில் இன்று காலை சென்னை வில்லிவாக்கத்தில் முருகனின் கூட்டாளியான சூர்யா கைது செய்யப்பட்டார்.

முக்கிய கொள்ளையனான முருகனின் கூட்டாளி சூர்யா மற்றும் கொள்ளைக்கு மறைமுகமாக வாகனங்களை கொடுத்தும் நகைகளை உருக்குவதற்கும் உடந்தையாக இருந்த நபர்களையும் அழைத்து வந்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

14 கிலோ தங்கத்தை சூர்யாவிடம் கொடுத்து அனுப்பியதாக முருகன் கூறியதன் படி நடந்த விசாரணையில், விழுப்புரத்தில் உள்ள தனது நண்பர் வீட்டில் சூர்யா தங்கத்தை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

பின்னர். விழுப்புரம் விரைந்து அங்கே இருந்த தங்கத்தை மீட்டதாக தனிப்படையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31 கிலோ 700 கிராம் தங்கமும் மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயம்புத்தூரில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார், நகைகளை விற்க கொள்ளை கும்பல் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றின் உரிமையாளரான ஸ்ரீவஸ்தவ்விடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, வங்கியின் இணைய சேவையை துண்டித்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாக கொள்ளையன் முருகன் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொள்ளை சம்பவத்தை கடந்த 10 நாட்களாகவே திட்டமிட்ட முருகன், கொள்ளையில் ஈடுபடுவதற்கு முன்பு அரும்பாக்கம் வங்கிக் கிளையின் இணைய சேவையை துண்டித்து விட்டதாகவும் இதனால் வங்கியின் செயல்பாடு டெல்லியின் தலைமையகத்திற்கு தெரியாமல் முடக்கப்பட்டதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

டெல்லியில் இருந்து ஊழியர்களை தொடர்பு கொண்டு விசாரிப்பார்கள் என்பது தெரிந்து வங்கிகளில் இருந்த மூன்று ஊழியர்களின் செல்போன்களையும் பறித்து வைத்துக் கொண்டதாகவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 15 நிமிடத்தில் ஸ்ட்ராங் ரூமில் இருந்த லாக்கரிலிருந்து ஒட்டுமொத்த தங்கத்தையும் கொள்ளையடித்து விட்டதாக முருகன் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.


Advertisement
பழைய வாகனம் விற்க olx ஐ நாடுபவர்களின் கவனத்திற்கு... வீடு தேடிவரும் பிராடுகள்..! வாட்ஸ் அப் குழுவால் சிக்கினர்
ரூ 31 லட்சம் விலை.... 15 மாசம் காத்திருந்து வாங்கிய XUV 7OO பார்த்த வேலை..! வீதியில் அமர்ந்த சினிமா பிரபலம்
சிறுவனின் உயிர் பறித்த நூல் அறுந்த பட்டம்.! பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள்.!
மீன் வியாபாரத்திற்காக தந்தைக்கு சொகுசு கார் வாங்கிக் கொடுத்த மகன்..! படிக்க வைத்தவருக்கு காணிக்கையாக கார்
தலையில் இரும்பு நட்டை வைத்து தையல் போட்ட அரசு மருத்துவமனை தற்குறிகள்..! அலட்சிய சிகிச்சை அம்பலம்
நண்பர்களின் துரோகம்.. பொறியாளர் தாயுடன் உயிரை மாய்த்தார்..! பணம் மட்டும் வாழ்க்கையா ?
இடம் மாற்றப்படும் அரிசிக் கொம்பன்.. வாழ்விடம் பறிப்பால் பரிதவிக்கும் யானை..!
300 பாயாச வீரர்கள்.. அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி விழுந்த பரபரப்புக் காட்சிகள்..!
அலுமினிய பாத்திரத்திற்குள் வசமாக சிக்கிய குழந்தை..! இரண்டரை வயது குழந்தையின் ஒரு மணி நேர போராட்டம்..!!
விபத்துக்குப் பின் நேற்றிரவு முதல் சரக்கு ரயில் இயக்கம்.. இன்று முதல் பயணிகள் ரயில் சேவைக்கு திட்டம்.!

Advertisement
Posted Jun 07, 2023 in சற்றுமுன்,வீடியோ,Big Stories,

பழைய வாகனம் விற்க olx ஐ நாடுபவர்களின் கவனத்திற்கு... வீடு தேடிவரும் பிராடுகள்..! வாட்ஸ் அப் குழுவால் சிக்கினர்

Posted Jun 07, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ 31 லட்சம் விலை.... 15 மாசம் காத்திருந்து வாங்கிய XUV 7OO பார்த்த வேலை..! வீதியில் அமர்ந்த சினிமா பிரபலம்

Posted Jun 07, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சிறுவனின் உயிர் பறித்த நூல் அறுந்த பட்டம்.! பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள்.!

Posted Jun 07, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மீன் வியாபாரத்திற்காக தந்தைக்கு சொகுசு கார் வாங்கிக் கொடுத்த மகன்..! படிக்க வைத்தவருக்கு காணிக்கையாக கார்

Posted Jun 06, 2023 in தமிழ்நாடு,Big Stories,

தலையில் இரும்பு நட்டை வைத்து தையல் போட்ட அரசு மருத்துவமனை தற்குறிகள்..! அலட்சிய சிகிச்சை அம்பலம்


Advertisement