செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

எரியாற்றலில் தற்சார்பு நிலை.. பிரதமர் மோடி வலியுறுத்தல்

Aug 15, 2022 06:30:29 PM

டெல்லி செங்கோட்டையில் சுதந்திர நாள் உரையாற்றிய பிரதமர் மோடி, எரியாற்றலில் தற்சார்பு நிலையை அடையப் பசுமை எரியாற்றல் திட்டங்களை முன்னெடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார். விண்வெளி முதல் ஆழ்கடல் வரை இளைஞர்களின் ஆராய்ச்சிக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

டெல்லி செங்கோட்டையில் சுதந்திர நாள் உரையாற்றிய பிரதமர் மோடி, விடுதலைக்குப் பாடுபட்டவர்களுக்கும், விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த தியாகிகளுக்கும் நாடு நன்றிக்கடன் பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் அனைவரும் 5 உறுதிமொழிகளை ஏற்க வேண்டுகோள் விடுத்தார். கடையனுக்கும் கடைத்தேற்றம் என்கிற காந்தியின் கனவை நனவாக்கக் கடந்த 8 ஆண்டுகளாகப் பாடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.

ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விஞ்ஞான் முழக்கங்களுடன் ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கான ஜெய் அனுசந்தான் முழக்கத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

பெண்களை அவமதிப்பதை நிறுத்த அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும், பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் பேச்சும் நடத்தையும் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

ஊழல், குடும்ப ஆட்சி ஆகிய இரு சவால்களை நாம் எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஊழலுக்கு எதிராக வலிமையுடன் போராட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சூரிய ஒளி மின்சாரம், ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிப்பு, மின்சார வாகனங்கள் பயன்பாடு ஆகிய திட்டங்களை முன்னெடுப்பதன்மூலம் எரியாற்றலில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும் எனத் தெரிவித்தார்.

விண்வெளித் துறை, டிரோன்கள் தயாரிப்பு, இயற்கை வேளாண்மை ஆகிய துறைகளில் இந்தியா விரைவாக முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார். தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாமல் அறிவியல்,விண்வெளி, ஆழ்கடல் ஆராய்ச்சியிலும் முன்னேற வேண்டியுள்ளதால் இளைஞர்களுக்கு ஏராளம் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.


Advertisement
கார் பந்தயத்துக்கு ரூ. 42 கோடி செலவு செய்வது வீண்.. மழை பாதிப்புகளுக்கு நடுவே கார் பந்தயம் அவசியமா? : இ.பி.எஸ் கேள்வி
காசிக்கும் தமிழக மக்களுக்கும் ஆயிரம் ஆண்டுகளாக இணைப்பு உள்ளது: ஆளுநர்
கோவையில் உணவுப் பொருட்களை தேடி குட்டியுடன் புகுந்த பெண் காட்டு யானை
அமலாக்கத் துறையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை
கொளத்தூரில் 27 இடங்களில் தேங்கிய மழை நீர் 24 மணி நேரத்தில் அகற்றம்: அமைச்சர் சேகர்பாபு
டி20 கிரிக்கெட் 213 போட்டிகளில் விளையாடி 136-ல் வெற்றிபெற்று இந்தியா சாதனை
மிக்ஜம் புயல் எச்சரிக்கையையொட்டி மீட்புப் பணிக்கு பயிற்சி பெற்ற 18,000 காவலர் மற்றும் கமாண்டோ படையினர் தயார்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள் பெற்று இந்திய அணி சாதனை
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பலத்தை அதிகரிக்கும் சீனா
மாமல்லபுரம் ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் தலைமையிலான குழுவினருக்கு உற்சாக வரவேற்பு

Advertisement
Posted Dec 02, 2023 in சென்னை,Big Stories,

சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!

Posted Dec 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...

Posted Dec 02, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

சேட்டனின் சேட்டைகளை கண்டித்த காதலி கொலை வாட்ஸ் அப்பில் திகில் ஸ்டேட்டஸ் நர்ஸிங் மாணவிக்கு நிகழ்ந்த சோகம்

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!


Advertisement