செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
Big Stories

ரூ.20 கோடி நகை கொள்ளை.. கைது நடவடிக்கை தீவிரம்.. பாதிக்கும் மேல் நகைகள் மீட்பு?

Aug 15, 2022 06:26:55 AM

சென்னை ஃபெடரல் வங்கியின் ஃபெட் பேங்க் கோல்டு லோன் கிளையில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார், 18 கிலோ தங்கத்தை மீட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சென்னை அரும்பாக்கத்தில் ஃபெடரல் வங்கியின் ஃபெட்பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன் கிளையில் சனிக்கிழமையன்று மாலை வங்கி ஊழியர்களைக் கட்டிப்போட்டு 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக வங்கியின் காவலாளி சரவணன், பெண் ஊழியர் ராஜலட்சுமி உள்ளிட்ட மூவரிடம் நடந்த விசாரணையில், அதே வங்கியில் வாடிக்கையாளர் சேவை மைய மேலாளராக பணிபுரிந்து வந்த, முருகன் என்பவர் கூட்டாளிகளுடன் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

சி.சி.டி.வி. காட்சிகள் மூலம், அவர்களை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொள்ளைக்கு, வெளியில் இருந்து உதவியதாக முருகனின் நண்பன் பாலாஜியை கைது செய்து விசாரித்த போலீசார், சக்திவேல், சந்தோஷ் என்பவர்களையும் கைது செய்துள்ளனர். மேலும், கொள்ளையில் மொத்தம் 6 பேர் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது

வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்க நகைகளில் இதுவரை 18 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, கொள்ளையர்களின் புகைப்படம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் அடையாளத்தை வெளியிட்ட போலீசார், கொள்ளையர்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்தனர். தகவல் அளிக்க ஏதுவாக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை எண்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

மேலும், வங்கியில் இருந்த நகைகள் அனைத்தும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த வங்கி நிர்வாகம், வழக்கு முடிந்த பிறகு நகைகள் உரிய வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும், நகைகள் கிடைக்காத பட்சத்தில் காப்பீட்டு பணம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் விளக்கமளித்துள்ளது.

இதனிடையே, வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் கொள்ளையர்கள் தப்பிச்செல்லும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது.


Advertisement
குழந்தையின் சடலத்துடன் 10 கி.மீ தூரம் நடை பயணம்.. மலைக்கிராமங்களின் கண்ணீர் பக்கங்கள்..!
தமிழில் ஒலித்த மந்திரங்கள்..! ஆசி வழங்கிய ஆதீனங்கள்.!! நிறுவப்பட்டது செங்கோல்.!!!
வாடகை ஸ்கூட்டரில் வலம் வந்த மன்மதராசா.. பெண்களை சீண்டியதால் மாவுக்கட்டு..!
ரூல்ஸ் தெரியுமா.. ரூல்ஸ்..? போய் முதல்ல தெரிஞ்சிட்டு வாங்க.. போலீசுடன் மல்லுக்கு நின்ற பெண்.!
அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி...!
போதையால் பாதை மாறிப் போன பேதை... நடு ரோட்டில் நடந்த ரகளையால் பரபரப்பான ஈரோடு...!
வந்தே பாரத் - இந்திய ரயில்வேயின் பெருமை.. இரும்பு ரயிலாக மாறும் கதை..!
இது நடை பாதையா..? இல்லை தீ மிதி மேடையா..? கால் வைக்க முடியாமல் தலை தெறித்து ஓடும் பக்தர்கள்..!
ஆயிரக்கணக்கில் முட்டைகள்.. அலர்ட்டாக பாதுகாக்கும் பறவைகள்..! சதுப்பு நிலத்தில் ஒரு சுவாரஸ்யம்.!!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி வீடு உட்பட 40-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு!

Advertisement
Posted May 29, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குழந்தையின் சடலத்துடன் 10 கி.மீ தூரம் நடை பயணம்.. மலைக்கிராமங்களின் கண்ணீர் பக்கங்கள்..!

Posted May 28, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

தமிழில் ஒலித்த மந்திரங்கள்..! ஆசி வழங்கிய ஆதீனங்கள்.!! நிறுவப்பட்டது செங்கோல்.!!!

Posted May 29, 2023 in சற்றுமுன்,வீடியோ,Big Stories,

வாடகை ஸ்கூட்டரில் வலம் வந்த மன்மதராசா.. பெண்களை சீண்டியதால் மாவுக்கட்டு..!

Posted May 29, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ரூல்ஸ் தெரியுமா.. ரூல்ஸ்..? போய் முதல்ல தெரிஞ்சிட்டு வாங்க.. போலீசுடன் மல்லுக்கு நின்ற பெண்.!

Posted May 28, 2023 in இந்தியா,Big Stories,

அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி...!


Advertisement