செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஜிம்மில் பாடி பில்டர் சுருண்டு விழுந்து பலி விஷ போதை விபரீதம்..!

Jul 05, 2022 07:24:05 AM

நாகர்கோவிலில் ஜிம்  நடத்திவந்த பாடி பில்டர் ஒருவர் உடற்பயிற்சிக் கூடத்தில் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் அரேங்கேறி உள்ளது. உயிருக்கு விஷமான போதைப் பழக்கம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் 42 வயதான ஜெயக்குமார். 2015 ஆம் ஆண்டு ஆணழகன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற ஜெயக்குமார் அந்தப்பகுதியில் ரோகித் என்ற பெயரில் ஜிம் நடத்தி வந்தார்.

சம்பவத்தன்று காலையில் மாஸ்டர் ஜெயக்குமார், வழக்கம் போல தனது உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்றுள்ளார். அங்கு சில இளைஞர்கள் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நிலையில் மாஸ்டர் ஜெயக்குமார் திடீரென்று மயங்கிய நிலையில் சுருண்டு விழுந்ததாக கூறப்படுகின்றது.

அவர் மீது மது வாடை வீசியதால் மது அருந்திய நிலையில் உடற்பயிற்சி செய்ததால் மயங்கி விழுந்திருக்கலாம என்று அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக வடசேரி போலீசார் நடத்திய விசாரணையில் விஷபோதையால் அவர் உயிரிழந்த பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.

பாடி பில்டராக உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்த ஜெயக்குமார் கடந்த சில மாதங்களாக மதுவுக்கு அடிமையாகி உள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2ந்தேதி மித மிஞ்சிய போதையில் வீட்டுக்கு சென்ற ஜெயக்குமாரை அவரது மனைவி கடுமையாக கண்டித்து உள்ளார்.

ஒரு காலத்தில் பாடி பில்டராக இருந்து விட்டு குடியை மறக்க முடியாத நிலையில் இருப்பதை எண்ணி மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார். சம்பவத்தன்று காலையில் விஷம் கலந்த மதுவை குடித்து விட்டு கடைசியாக உடற்பயிற்சி செய்து ஜெயக்குமார் உயிரை மாய்த்துக் கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

ஜெயகுமாரின் மனைவி மனைவி தங்கபாய் அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் கட்டுக்கோப்பான உடல் இருந்தாலும், உயிரை மெல்லக்கொல்லும் விஷமான மது போதைக்கு அடிமையானால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றும் ஒரு உதாரணம்..!


Advertisement
8 மாத காதல் 2 மாத இல்லறத்துடன் முடிவுக்கு வந்தது ஏன்.? சிப்பிக்குள் அடங்காத முத்துக்கள்...!
அடையாளத்தை மாற்றி அடுத்தவர் வாகனத்தை 4 ஆண்டுகள் ஓட்டிய போலீஸ்.... இதெல்லாம் நியாயமா ஆபிஸர்ஸ்....?
குழந்தையின் சடலத்துடன் 10 கி.மீ தூரம் நடை பயணம்.. மலைக்கிராமங்களின் கண்ணீர் பக்கங்கள்..!
தமிழில் ஒலித்த மந்திரங்கள்..! ஆசி வழங்கிய ஆதீனங்கள்.!! நிறுவப்பட்டது செங்கோல்.!!!
வாடகை ஸ்கூட்டரில் வலம் வந்த மன்மதராசா.. பெண்களை சீண்டியதால் மாவுக்கட்டு..!
ரூல்ஸ் தெரியுமா.. ரூல்ஸ்..? போய் முதல்ல தெரிஞ்சிட்டு வாங்க.. போலீசுடன் மல்லுக்கு நின்ற பெண்.!
அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி...!
போதையால் பாதை மாறிப் போன பேதை... நடு ரோட்டில் நடந்த ரகளையால் பரபரப்பான ஈரோடு...!
வந்தே பாரத் - இந்திய ரயில்வேயின் பெருமை.. இரும்பு ரயிலாக மாறும் கதை..!
இது நடை பாதையா..? இல்லை தீ மிதி மேடையா..? கால் வைக்க முடியாமல் தலை தெறித்து ஓடும் பக்தர்கள்..!

Advertisement
Posted Jun 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

8 மாத காதல் 2 மாத இல்லறத்துடன் முடிவுக்கு வந்தது ஏன்.? சிப்பிக்குள் அடங்காத முத்துக்கள்...!

Posted Jun 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அடையாளத்தை மாற்றி அடுத்தவர் வாகனத்தை 4 ஆண்டுகள் ஓட்டிய போலீஸ்.... இதெல்லாம் நியாயமா ஆபிஸர்ஸ்....?

Posted May 29, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குழந்தையின் சடலத்துடன் 10 கி.மீ தூரம் நடை பயணம்.. மலைக்கிராமங்களின் கண்ணீர் பக்கங்கள்..!

Posted May 28, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

தமிழில் ஒலித்த மந்திரங்கள்..! ஆசி வழங்கிய ஆதீனங்கள்.!! நிறுவப்பட்டது செங்கோல்.!!!

Posted May 29, 2023 in சற்றுமுன்,வீடியோ,Big Stories,

வாடகை ஸ்கூட்டரில் வலம் வந்த மன்மதராசா.. பெண்களை சீண்டியதால் மாவுக்கட்டு..!


Advertisement